Sunday 20 November 2016






வ.களத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வ.களத்தூரில் உள்ள IOB வங்கியில் கணக்கு உள்ளது. அதனால் அவர்கள் அனைவரும் பணம் எடுக்க வ.களத்தூர் IOB வங்கிக்கு தான் வருவார்கள்.

கடந்த வியாழன் அன்று கால்கடுக்க நின்றவர்களுக்கு பணம் கிடைக்காததால் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெள்ளி அன்று சென்றவர்களுக்கு வங்கியில் பணம் இல்லை என்ற பதிலே கிடைத்தது.





கடந்த சனிக்கிழமை மூத்த குடிமக்களுக்கு மட்டும் பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினால் ஏராளமான வயதான மக்கள் காத்துக்கிடந்தனர். ஆனால் புதிய ரூபாய் நோட்டு வரவில்லை என்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நேற்றும் வங்கி விடுமுறை , அதனால் வங்கி திறக்கப்படவில்லை.


இன்று வங்கி கிளையில் கடும் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்இன்றாவது பணம் கிடைக்குமா...


அது ஒரு பக்கம் இருக்க ஏடிஎம் மையங்களும் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் செய்கின்றனர்.

இதனால் வ.களத்தூர் பகுதியில் கடந்த 3 நாள்களாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உடனடியாக இந்த பண பிரச்சனைகளுக்கு வி.களத்தூர் IOB வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். vkalathur v.kalathur