Friday 31 October 2014


தற்போது வ.களத்தூர் பகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவி வரும் கண் நோய் மெட்ராஸ் ஐ எனத்தவறாக ஊடகங்களிலும் , சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது....

மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பாக்டீரியா வினால் பரவுகிறது.. ஆனால் தற்போது பரவி வரும் கண் நோய் வைரஸ் சினால் பரவும் 'பிங்க் ஐ (Pink  Eye) ' எனப்படும் நோய் என கூறப்படுகிறது...

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்து கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி உபயோகம் செய்தால் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக கண்ணின் வலியை குறைக்க உதவும் Dexamethazone,  Bedamethazone எனப்படும்  "ஸ்டீராய்ட்" கொண்ட கண் சொட்டு மருந்துகளை உபயோகம் செய்தால் கண் நோய்  குணமாவது தாமதம் ஆவது மட்டுமல்லாது பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவதினாலும் , நோயாளிகள்பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதனாலும் கட்டுப்படுத்தலாம். நோயாளியின் கண்களை காண்பதால் நோய் தோற்றும் என்பது தவறான கருத்தாகும்.

இந்த நோய் பாதிக்கப்பட்ட சமயங்களில் அதிக கண் கூச்சம் இருந்தால் உடனே கண் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். தாமதித்தால் பெரும் இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும்.

மேலும் அறிய- http://www.thehindu.com/…/beware-of-pink…/article6539811.ece

Wednesday 29 October 2014

வ.களத்தூர் கல்லாற்றில் புதுவெள்ளம் புரண்டோடுகிறது. கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளான பூலாம்பாடி, அரும்பாவூர் மற்றும் மலையாலப்பட்டி பகுதிகளில் அதிக மழை பெய்யாத காரணத்தால் நம் கல்லாற்றில் வெள்ளம் வரவில்லை. கடந்த சில நாட்கள் வரை இதுதான் நிலைமை.


ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக நுரை வெள்ளமாக காட்டுத்தண்ணீர் வந்தது.
நேற்று இரவு கல்லாற்றில் நீர்பிடிப்பு பகுதியான பூலாம்பாடி பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக செந்தண்ணீர் வருகிறது. இரு கரைகளையும் தொட்டுக்கொண்டோடும் கல்லாற்றுநீரை காண கண்கோடி வேண்டும்.



பட உதவி- சுரேஷ்.A, கண்ணன்.R.