Sunday 20 April 2014


 இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராமகோபலன்ஜி வரலாறு
பெயர் : திரு.இராமகோபலன்
பிறந்த தேதி - : 19/09/1927
நட்ச்சத்திரம் - :- திருவாதிரை
தந்தை : திரு.இராமசாமி
தாயார் : திருமதி.செல்லம்மாள்
பிற்ந்த ஊர் : சீர்காழி
[திரு.சுப்பிரமணியன்,திரு.சங்கரன்,திரு,நாரயணன்,திரு,மங்களம், திருமதி.கமலா,திருமதி.லலிதா,திரு.ஏகாம்பரம்,திருமதி.லட்சுமி, திருமதி.திரிபுரசுந்தரி,திரு.நடராஜன்,திரு.கோபால்ஜீ] சீர்காழி லூத்ரன் மிஷ்ன்ஸ் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்தார். பி.இ படிக்க ஆசைக்கொண்டார்.இடம் கிடைக்காத்தால் அதற்க்கு சம்மான டிப்ளமோ படித்து ஏ.ஐ.எம்.ஈ. படிக்க விருப்பம் கொண்டார்.எனவே 1944ல் சென்னை புரசைவாக்கம்-செங்கல்வராயன் டெல்னிக்கல் இன்ஷ்டியுட்ல் சேர்ந்து டிப்ளமோ எலக்ட்ரிக்கல் படித்து வந்தார, அப்போது முத்துரமணியுடன் நட்பு ஏற்ப்பட்டது.இருவரும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது மாலை 5 மணிக்கு விளையாட்டை நிறுத்திவிட்டு முத்துரமணி புறப்பட திரு.கோபால்ஜீ அவர்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு எங்கே செல்கிறாய்? எனக்கேட்டார்.ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு என்றார் முத்துரமணி. ஆர்.எஸ்.எஸ்ன்னா என்ன? என்க்கேட்டார் திரு.கோபால்ஜீ.வந்துபார் என்க்கூறி சென்னை கோபாலபுரம் நகராட்சி மைதானத்தில் நடந்த ஷாகாவுக்கு அழைத்துச்சென்றார் முத்துரமணி. சிந்து மகாணத்தில் இருந்து அடித்துவ்ரட்டப்பட்ட இந்து குடும்பங்களை சென்னை ஆவடியில் பார்வையிட்டு இதைப்போல் இந்துக்கள் வேறெங்கும் பாதிக்கப்படாமல் இருக்க ஆர்.எஸ்.எஸ்.போன்ற அமைப்பு தேவை என் எண்ணி,அதில் தன்னால் ஆன சேவை செய்யவும் விரும்பினார்.அதன்படி சங்க வேலையில் ஈடுப்பட்டு கொண்டே கல்லூரிபடிப்பையும் முடித்தார்
கல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ராஜினாமா செய்துவிட்டு சங்கப்பணிக்கு வா என உத்தரவிட்டனர்.
அதன்படி குடியாத்ததில் தனியார் மின்சார நிலய்த்தில் வேலை. குடியாத்ததிலும் சங்கப்பணி தொடர வீட்டிற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குடும்பத்தினர் சென்னை வீட்டிற்க்கு அழைத்தனர்.சென்னை வந்த பின்பும் சங்கப்பணி தொடர பலமுறை அறைகளில் வைத்து பூட்டினார்கள்.தினமும் வீட்டில் போராட்டம் ஆகியது.1947 – 1947 ம் ஆண்டு பிரச்சாரக் ஆக சங்க அனுமதி கிடைத்தது.
முதல் சங்கப்பணி கும்பக்கோணத்தில் ஒரு வாரம் நடைப்பெற்றது.இரண்டாவது சங்கப்பணி திருநெல்வேலி நகர்,பாளையங்கோட்டை நகர் என தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் சங்கம் தடை செய்யப்பட்டது.சங்கம் தடை செய்யப்பட்ட காலத்தில் வேலூர் சிறையில் 4 மாதம் அடைக்கப்பட்டார்.ஆள்கொணர்வு மனு செய்யப்பட்டு விடுதலை ஆனார்.
சங்கத்தில் வேலைக்கு போகச் சொல்ல மெட்ராஸ் எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் ஜூனியர் என்ஜீனியராக 4 மாதம் வேலை செய்தார்.சங்கம் மீண்டும் பிரச்சாரக் ஆக வரச்சொல்ல வேலையை ராஜினாமா செய்தார்.ஒருங்கினைந்த தமிழகத்தில் பாலாக்காடு தாலுகா பிரச்சாராக் ஆக பதவி வகித்தார்.அங்கு மா.ஈஸ்வரமேனன் சங்கசாலக்.பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த்க்கோரி கிராமங்கள் தோறும் கையெழுத்து வாங்கும் பொறுப்பை சிறப்பாக செய்தார்.இதனை தொடர்ந்து மதுரை விபாக் பிரச்சாரக் ஆக மாற்றப்பட்டார்.
திரு.பரம பூஜ்ய குருஜீயின் 51 வது குருபூஜையை மதுரையில்பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் நிகழ்த்தி காட்டினார்.இந்த கூட்டத்திற்க்கு பசும்பொன் தேவர் திருமகனார் தலைமை தாங்கினார்.மீண்டும் சென்னையில் விபாக் பிரச்சாரக்காக் மாற்றப்பட்டு திரு. பரம பூஜ்ய குருஜீயின் தமிழக விஜயத்தின் போது குருஜீயின் உரைகளை மொழிப்பெயர்த்து குருஜீயின் ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்து கொண்டார்.
1980 ஆண்டு ஜூன் மாதம் சங்கத்தின் மாநில குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது.விருதுநகர் பக்கத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்களை மதம் மாற்றப்போவதாக கர்நாடகத்தில் இருந்து ஒரு கடிதம் திரு சூருஜீக்கு வந்தது
அந்தக்காலக்கட்டத்தில் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்து பெரும் குழப்பங்கள் தமிழகத்தில் நிலவிய நேரம்.இதன் நடுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம்மாக மாற்ற முயற்சி நடந்தது.அதற்க்கான ஆதாரத்தை தேடும்போது கிறிஸ்த்தவர்கள் தங்களது சர்ச்சில் சொல்லி தங்களுக்கு எங்கிருந்து எல்லாம் கடிதம்
வருகிறதோ அதிலெல்லாம் கன்னிமேரி மாவட்டம் என எழுதி அனுபச்சொன்னார்கள்.அவ்வாறே கடிதங்களும் வந்துக்கொண்டிருந்தது.
இது நமக்கு தகவலை உறுதி படுத்தியது.இராமநாதபுரத்தில் ஒரு லட்சம் பேரை மதம் மாற்றப்போவதாகவும்,அவர்களின் பெயர்களையும் வெளியிட்டார்கள்,இவை அனைத்தும் வெளீப்படையாக நடந்தன. சேலத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஈ.வெ.ரா. தூண்டுதலால் விநாயகர் சிலைகள் துடப்பத்தால் அடிக்கப்பட்டு தெரு முச்சந்தியில் வைத்து உடக்கப்பட்டது.இந்த இந்துக்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிகளை தடுக்கவும்,இந்துக்களுக்காக வாதாட,போராட,பரிந்து பேச ஒரு இயக்கம் தேவை என் எண்ணியது சங்கம்.
கரூர் கூடிய மாநில குழு கூட்டம் இயக்கத்திற்க்கான பொறுப்பை திரு.கோபால்ஜீயிடம் தந்தது.இந்து ஆலயப்பணிக்காக நிறைய போராடி இருக்கிறார்.அவர் இந்து மக்கள் முன்னனி என்ற அமைப்பை நடத்தி வந்தார்.அதன் பெயரை சுருக்கி இந்து முன்னனி என வைத்தால் மக்கள் மனதில் பதியும் என் எண்ணி சங்க அதிகாரிகளிடம் அனுமதி கேட்க்கப்பட்டது. அனுமதி தரப்பட்டதுடன் ரூ.35 கொடுத்து இயக்கத்தை உருவாக்கி கட்டமைக்கும் பொறுப்புடன் கன்னியாகுமரி அனுப்பிவைக்க்ப்பட்டார் கோபால்ஜீ.அன்று முதல் இன்று வரை 87 வயதிலும் ஓய்வில்லாமல் சுற்றுபயணம் மேற்கொண்டு இந்துக்களுக்காக பல சாதனைகள் படைத்து வருகிறார்,

1 comment: