Wednesday 31 December 2014


பெரம்பலூர், டிச.31:பெரம்பலூர் மாவட்டம்  வ.களத்தூர் அருகேயுள்ள 113-இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா(33), சங்கரி(27) தம்பதி. இவர்களுக்கு ராஜவிஷ்வா(7), சுஜிதா(5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ராஜப்பா 4 மாதத்திற்கு முன் விடுமுறையில் ஊரு க்கு வந்து விட்டு மீண்டும் வெளிநாடு சென்று விட் டார். மாமனார்&மாமியாருடன் வசித்து வந்த சங்கரி தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கடந்த 24ம் தேதி மாலை தனது குழந்தைகளுடன் அரியலூர் மாவட் டம் உடையார் பாளையம் அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்திலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு செல் வதாக கூறிச் சென்றார்.ஆனால் அவர் கொடுக் கூருக்கு வரவில்லை. இதையடுத்து சங்கரியை அவரது பெற்றோர் உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து நேற்று   
வ.களத்தூர் போலீஸ் நிலையத்தில்  சங்கரியின் தந்தை ராஜேந்திரன்(52) புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

-தினகரன்.

           மார்கழி மாதத்தில் அதுவும் ஜனவரி முதல் தேதியில் கல்லாற்றில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கல்லாறு நீர்பிடிப்பு பகுதிகளான அரும்பாவூர் மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததும், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரி உட்பட பல ஏரிகள் நரம்பி வழிவதும் கல்லாற்றில் வெள்ளம் வர காரணம்.

நம்மவர்கள் எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு...


Thursday 25 December 2014


கலவரங்ளை திட்டமிட்ட கலவரம், திடீர் கலவரம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் திட்டமிட்ட கலவரம் லாப நோக்கத்தோடு திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும். இதில் அடைய வேண்டிய இலக்குகள் சரியாக நிர்ணயிக்கப்பட்டு, மிகச் சாதூர்யமாக காய்கள் நகர்த்தப்படும். கலவரம் எதற்கு நடந்தது என்று தெரியாமல் மக்கள் ஈடுபடுவர். தடுக்க வேண்டியவர்கள், லாபம் வரும் வரை காத்திருந்துவிட்டு, தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்குவர். இப்படிப்பட்ட திட்டமிட்ட கலவரம் சமீபத்தில் ஜூலை மாதம் 2012 ல் அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்தது. ஜூலை 19 அன்று கொக்ரஜார் மாவட்டத்தில் சில போடோ இன மக்கள் வசிக்கும் வீடுகள் மீது, ஊடுறுவிய பங்ளாதேசிகள் கல்வீசித் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை விசாரிக்க, சரணடைந்த நான்கு போடோ தீவிரவாதிகள் ஜூலை 20 அன்று அவ்வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை ஊடுறுவிய வங்க தேசத்தினர் கொன்றனர். இதுதான் கலவரத்தின் ஆரம்பம். இக்கலவரம் ஜூலை 27 வரை 400 கிராமங்களுக்குப் பரவி 59 உயிர்களை குடித்துள்ளது. 4 லட்சம் மக்கள் அகதிகளாகி 270 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது செய்தி. இச்செய்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தக்கலவரத்தில் யார் லாபமடைந்தார்கள்?

எப்படி லாபமடைந்தார்கள்? இதன் பின்னணி என்ன?

அன்னிய ஊடுறுவல்
பாரதத் திருநாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் அஸ்ஸாம். பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகள் பாய்ந்து வண்டல் பரப்ப, அமுதசுரபியாக விளங்கும் இம்மாநிலம், பல பழங்குடிகளின் இருப்பிடமாகும். 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 84.55% அஸ்ஸாமியர்கள் ஹிந்து/பாரம்பரிய மலைவாழ் சமய நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பன்படி இவர்கள் 65.4% ஆக குறைந்து, 1901 ல் 15% ஆக இருந்த முஸ்லீம்கள் 2001 ல் 31% ஆக உயர்ந்து விட்டனர். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்த்து?

அஸ்ஸாம் மாநிலம், வங்க தேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்தேசத்திலிருந்து முஸ்லீம்கள் ஊடுறுவி அஸ்ஸாமில் குடி அமர்கின்றனர். தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் முஸ்லீம்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்காக, இந்த தேச ஆக்கிரமிப்புச் செயலுக்கு தூபம் போடுகின்றன. இந்த ஊடுறுவலால் பாதிக்கப்படும் பல பழங்குடி இனம்களில் ஒன்று போடோ பழங்குடிகள். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, Tibeto-Burman பிரிவை சார்ந்த போடோ மொழியை தாய் மொழியாக்க கொண்ட இனத்தவர்கள் சுமார் 13 லட்சம். இவர்கள் கோக்ராஜார், பஸ்கா, சிராங், உடல்குரி மாவட்டங்களின் பூர்வ குடிகள். இந்த ஊடுறுவலால் இந்த பூர்வ குடிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, அவர்களின் பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியம் அழியும் நிலை ஏர்ப்பட்டு விட்டது.

போடோ புரட்சி  மற்றோர் தேசிய அபாயம்
வங்கதேச ஊடுறுவல் கட்டுக்கடங்காமல் போவதும், அடிப்படை வசதிகள் வேலை வாய்ப்பு போன்றவற்றை ஊடுருவும் வங்கதேசத்தினர் தட்டிப் பரிப்பது போடோ இன மக்கள் மனதில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சொந்த மண்ணில் இரண்டாம் தரக் குடிமகனாக மாற்றப்பட்ட நிலையில், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டனர் போடோக்கள். இதை வாய்ப்பாக பயன் படுத்தி, இவர்களின் போராட்டத்தை பாரதத்திற்கு எதிராகத் திருப்ப, இவ்வின மக்களை ஆயுதப் புரட்சியில் ஈடுபடுத்தி ஐரோப்பிய- அமெரிக்க ஆதரவு பெற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் வெற்றி கண்டனர். இதன் விளைவாக, போடோ இனமக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பன்படி, 9.4% போடோக்கள் கிறிஸ்தவர்கள். சலுகைக்காக பலர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று பதிவு செய்யாமல், ஹிந்து என்று பதிவு செய்கின்றனர் அதனால் கிறிஸ்தவ மக்கள் தொகை 15% இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த போடோ புரட்சி அமைப்பில் ஒன்று National Democratic Front of Bodoland. இது கிறிஸ்தவ ஆதிக்கம் மிகுந்த அமைப்பு. அது மட்டுமல்லாமல் உல்பா (ULFA) போன்ற பிரிவினைவாத அமைப்புடன் தொடர்புடையது. இந்த அமைப்பு, போடோ பகுதிகளை பாரதத்திலிருந்து பிரித்து தனி நாடு அமைக்க வேண்டும் என்ற கோரிகையை முன் வைத்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தடை செய்யப்பட்ட ஒரு நாசகார அமைப்பு.

2003 ஆம் ஆண்டு, 3082 கிராமங்களை உள்ளடக்கிய போடோ டெரிடோரியல் கவுன்சில் (Bodo Teritorial Council) என்ற சுய ஆட்சி பகுதி அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சியில் ஏற்ப்படுத்தப்பட்டது. போடோ லிபரேஷன் டைகர்ஸ் (Bodo Liberation Tigers) என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பினர் சுமார் 2500 பேர் அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதில் பெரும்பாலானோர் மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) வேலையில் அமர்த்தப்பட்டனர். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ஜனநாயக வழிக்கு வரமாட்டோம் என்று சொல்லி, இன்றும் நம் நாட்டிற்க்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது National Democratic Front of Bodoland என்ற கிறிஸ்தவ ஆதரவு அமைப்பு.

போடோ மொழிக்கென்று தனி எழுத்துக்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் பெங்காலி எழுத்துக்களையும், தேவநாகரி எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த இந்திய மொழித் தொடர்பை துண்டிக்க, கிறிஸ்தவ மிஷனரிகள், இலத்தீன் எழுத்தை பயன்படுத்தும் முறையை அறிமுகப் படுத்தி வருகின்றனர். இப்படி, போடோக்களை தேசிய நீரோட்ட்த்திலிருந்து பிரிக்கும் நடவடிக்கைகள் ஒரு புறம் நடந்து வருகிறது.

ஓட்டு வங்கி அரசியல் அபாயம்
1947-ல் பாரதம் விடுதலை அடைந்த பின்னர் தான், வட கிழக்கு மாநிலங்களில் கல்வி பரவலாக்கப்பட்டது. இதன் விளைவாக, வெளி மாநிலத்தவர்கள் உள்ளூர் மக்களின் நிலங்களையும், சலுகைகளையும் அபகரிக்கிறார்கள் என்று உணர ஆரம்பத்தினர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புடன் சுதந்திர பாரதத்தில் ஆட்சியை தொடங்கிய காங்கிரஸால், மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஊழல்,தவறான அரசியல் கொள்கை என்று பலதுறைகளில் தோல்வி அடைந்ததால், மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இந்நிலையில், அக்கட்சி பதவியை பாதுகாக்க ஓட்டு வங்கி அரசியலில் இறங்கியது.  பாரதம் துண்டாடப்பட்டு பாகிஸ்தான் உருவாக முஸ்லீம்கள், மத ரீதியாக ஒன்றுபட்டு ஓர் அரசியல் சக்தியாகத் தங்களை வெளிக்காட்டினார்கள். இந்த மத ஓட்டு வங்கியை பயன்படுத்தி தன் சரியும் செல்வாக்கை ஈடுகட்ட காங்கிரஸ் முடிவு செய்தது. ஓட்டுக்காக தேசத்தின் நலனை அடகு வைக்க காங்கிரஸ் வங்கதேச முஸ்லீம்களை குடியமர்த்த ஏதுவாக Illegal Migrants(Determination by Tribunal) (IMDT) என்ற சட்டத்தை 1983ல் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டும் பொருந்தும் படியாக கொண்டு வந்தது.

இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக்கப்படும் போது அஸ்ஸாமிலிருந்து ஓர் உறுப்பனர் கூட நாடளுமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. 1983 முதல் 2005 வரை பல லட்சம் வங்கதேச முஸ்லீம்கள், இந்தியக் குடிமகன்களாக நம் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தச் சட்ட்த்தை பயன்படுத்தி குடியேறிய வங்கதேச முஸ்லீம்கள் அஸ்ஸாமின் பண்பாடு, மொழி போன்றவற்றை அழித்துவிட்டனர் என்று சுட்டிக் காட்டி இச்சட்டத்தை உச்சநீதி மன்றம் 2005-ல் ரத்து செய்தது. இந்தச் சட்டத்தின் வாயிலாக அன்னியப் படையெடுப்பு மற்றும் உள்நாட்டு கலகங்களிலிருந்து மாநிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசியல் சாஸனம் 355 குறிப்பட்டுள்ள கடமையை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று இந்தச் சட்ட்த்தை ஒரு தேசத் துரோகச் சட்டமாக அறிவித்தது நம் உச்ச நீதிமன்றம்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் கூட அரசியல் விளையாடியிருக்கிறது. 1999ல் அஸ்ஸாம் அரசு இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் Affidavit தாக்கல் செய்தது. மத்தியில் ஆண்ட வாஜ்பாய் அரசும் அவ்வண்ணமே Affidavit தாக்கல் செய்தது. 2001 ல் அஸ்ஸாமில் நடைபெற்றத் தேர்தலில், ஊடுறுவிய அன்னிய முஸ்லீம்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியவுடன், இந்த IMDT என்ற தேச விரோதச் சட்டம் தொடரவேண்டும் என்று திருத்தப்பட்ட Affidavitஐ முந்தைய 1999 Affidavitஐ, பின்வாங்கிவிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டவுடன், இது போன்ற மாற்றுச்சட்டத்தை கொண்டுவருவோம் என்று சொன்னார் அஸ்ஸாமின் காங்கிரஸ் முதல் அமைச்சர்.

இந்தச் சட்டம் தேச விரோதம், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தே தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 2004 வாஜ்பாய் ஆட்சி முடிவுக்கு வந்து, 2005ல் உச்சநீதிமன்றம்  சட்டத்தை ரத்து செய்த குறுகிய ஓராண்டு காலத்திற்குள் அஸ்ஸாமின் வாக்காளர் எண்ணிக்கை 15.1% ஆக உயர்ந்தது. அஸ்ஸாமிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் 18 ஆண்டுகளுக்கு முன் குட்டி போட்டால் கூட 15.1% உயர்வு இருக்குமா என்பது சந்தேகமே! இப்படி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓட்டுக்காக அன்னிய நாட்டவரை குடியமர்த்திய தேசத் துரோகம் காங்கிரஸ்ஸால் நிகழ்த்தப்பட்டது.

இப்படி அஸ்ஸாம் அரசியலின் இந்த மூன்று கதாநாயகர்களான வெளிநாட்டு முஸ்லீம்கள், பிரிவினையைத் தூண்டி மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள், ஓட்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் இந்தக் கலவரத்தால் எப்படி பயனடைவார்கள்? எப்படி காய் நகர்த்துகின்றனர்?

குடியுரிமை பெறப்போகும் லட்சக்கணக்கான வங்கதேச முஸ்லீம்கள்
இந்தக் கலவரத்தில் அகதிகளாக்கப்பட்ட 4 லட்சம் பேரில் 2.5 லட்சம் முஸ்லீம்கள். இந்த 2.5 லட்சம் முஸ்லீம்களும் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுறுவியவர்கள். இவர்கள் அனைவரும் இப்போது இந்தியக் குடிமக்களாகப் போகிறார்கள். இவர்கள் யார் என்று யாரும் இப்போது கேள்வி கேட்கப் போவதில்லை. இதற்கான அடித்தளம் இப்போது அமைக்கப்பட்டுவிட்டது. அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களை மாநில அரசால் காப்பாற்ற முடியாது. எங்களுக்கு மாநில அரசின் மீது நம்பக்கை இல்லை என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரஹுமான் கான் தலைமையில் பல கட்சிகளை சார்ந்த முஸ்லீம் எம்.பிக்கள் குழு உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரத்தை சந்தித்து ஜூலை 26 அன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அது மட்டுமின்றி ஒரு முஸ்லீம் குழு அஸ்ஸாம் செல்ல வேண்டுமாம்!

இதே ஜூலை 26 அன்று மும்பையில் முஸ்லீம்களின் அரசு சாரா நிறுவனங்களின் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து இந்திய உலோமா கவுன்சில், மர்கசுல் மாஆரிப் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், மும்பை அமான் கமிட்டி,  கைர்-இ-உம்மத் அறக்கட்டளை, மூவ்மண்ட் ஃபார் ஹுமன் வெல்பெர் போன்ற அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு திட்டமிட்ட முறையில் அஸ்ஸாமில் முஸ்லீம்கள் இன அழிப்பு செய்யப்படுகிறார்கள் என்றும், வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் அதே கிராமங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், ஊடுறுவிய முஸ்லீம்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கலவரத்தில் நவீன ரகத் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் அஸ்ஸாமுக்குள் எடுத்துவரப்பட்டதாக போடோ தலைவர்கள் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டிருந்தனர். இதை உல்பா அமைப்பைச் சேர்ந்தவர்களும் உறுதி செய்தனர். ஆனால் இந்திய உள்துறை செயலாளர் திரு.ஆர்.கே.சிங் ஜூலை 25 அன்று இந்தக் கலவரத்தில் எந்த அன்னியத் தலையீடும் இல்லை என்றும், சர்வதேச எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாராலும் அஸ்ஸமிற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டிகளும், கோரிக்கைகளும் தில்லியிலும், மும்பையிலும் அரங்கேரும்போது, கலவர பூமியான அஸ்ஸாம் மோகன்பூர் மற்றும் ஸோனாரிப்பூரில் பாகிஸ்தான் கொடி பரப்பதை டைம்ஸ் நௌ (Times Now) என்ற ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒளிபரப்பியது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்திய முஸ்லீம்கள் ஏன் பாகிஸ்தான் கொடி ஏற்றவேண்டும்? பாகிஸ்தான் அன்னிய நாடில்லையா? இந்த பாகிஸ்தான் ஆதரவு சதியர்கள் தான் அப்பாவி முஸ்லீம்களா? இந்த வெளிநாட்டவரை காப்பாற்றி, இந்திய வம்சாவளி போடோக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது இந்திய நாடாளுமன்ற முஸ்லீம் உறுப்பினர்கள். இவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்கிறார்கள் முஸ்லீம் அரசு சாரா அமைப்புகள்.வெளி நாட்டு தலையிடு இல்லை என்கிறார் உள்துறைச் செயலாளர். அப்படியாக முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்டு, தீவிரவாத வெளிநாட்டு கும்பல் அகதி வேஷம் போட்டு, அனுதாபங்களை சம்பாதித்து குடியுரிமை பெறவும் போகிறது. ஜூலை 29 அன்று அஸ்ஸாம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், 300 கோடி ரூபாய் நிவாரணமும், பாதிக்கப்பட்டவர்கள் குடி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்தும் விட்டார்.

ராணுவத்தை அவமதித்த முதல்வர்
கலவரத்தை அடக்க துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் தருண் கோகாய் தவறினார் என்ற புகார் வந்ததும், முதல்வர் பழியை ராணுவத்தின் மீது திருப்பிவிட்டார். நான் ராணுவத்தை அழைத்தேன் அவர்களோ, தில்லியிலிருந்து உத்திரவு வந்தால் தான் வருவோம் என்று கூறிவிட்டனர். அதனால் கால தாமதம் ஏற்பட்டது. ராணுவம் சரியான நேரத்தில் வந்திருந்தால், கலவரத்தை அதிகம் பரவவிடாமல் கட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம் என்கிறார் முதல்வர். இது உண்மையா பொய்யா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இவர் அழைத்து ராணுவம் வரவில்லை என்று பழிபோடுகிறாரே,அப்படி என்றால் ஊடுறுவும் வங்கதேசத்தினர் ஆபத்தானவர்கள் என்று ராணுவம் கருதுகிறது என்று தானே பொருள்? தருண் கோகாய் பொய் சொல்கிறார் என்றால், இந்திய ராணுவத்தின் மீது முஸ்லீம்களுக்கிருக்கும் வெறுப்பை மேலும் வளர்க்கிறார் என்று தானே அர்த்தம்?

எந்த இனம் அழியப் போகிறது?
வங்கதேச அன்னிய முஸ்லீம்கள், இப்போது அனாதைகள் என்ற போர்வையிக் குடியமர்த்தப்படுவார்கள். கலவரத்தால் பாதிக்கப்பட்ட போடோக்களோ அக்கிரமக்காரர்களாக இனம்காட்டப்படுவார்கள். அகதிகள் முகாமிலிருக்கும் 1.5 லட்சம் போடோக்கள் அனாதையாகவே இருப்பர். போடோக்கள் மீது வழக்கு தொடரப்படும். அன்னிய முஸ்லீம்களின் ஜனத்தொகை பெருகும். போடோக்கள் வாய்ப்பு இழப்பர். போடோக்களின் அவல நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கிறிஸ்தவர்கள் போடோக்களை மதமாற்றம் செய்து இந்தியாவுக்கு எதிராகப் போரிடச் செய்வர். அரசியல் கட்சிகளோ, ஒட்டு மொத்த ஓட்டுக்காக, மைனாரிட்டி என்ற பெயரில் முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் தாஜா செய்து தேசிய நலனை பணயம் வைத்து ஆட்சிக் கட்டியலில் அமர்ந்து கொள்ளும். பாவம் மண்ணின் மைந்தன் மண்ணை இழப்பான். அன்னிய சதிகாரர்கள் ஆளுமை செலுத்துவர். அப்படியாக மூன்று கதாநாயகர்களும் பயனடைவர்.பத்திரிகைகளுக்கும் ஓரு வார விருந்து பரிமாரப்பட்டுவிட்டது. கலவரத்தின் நோக்கமும் நிறைவேறிவிட்டது.

-VSRC

கட்டாய மதமாற்றப் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. பிரதமர் விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்தாக வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அடம்பிடித்து அவை நடவடிக்கைகள் நடக்கவிடாமல் தொடர்ந்து தடுக்கின்றன. பிரதமர் பதிலளிக்கப் போகிறாரா, எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பிரச்சனை விவாதத்திற்கு வந்திருக்கிறதே. அதுவே பெரிய மாற்றம்.

ஆக்ராவில் வேதநகரத்தில் 350 முஸ்லிம்கள் ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும் இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆசியுடனும், ஆதரவுடனும் நடத்தப்பட்டது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குரலெழுப்புகின்றன. அவர்கள் சொல்வது போல ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன்தான் இது நடத்தப்பட்டது என்றால் அந்த அமைப்பு சாதூர்யத்துடன் செயல்பட்டிருக்கிறது. இது ஒரு சின்ன நடவடிக்கைதான் என்றாலும் சுறுசுறுப்பான, புத்திசாலித்தனமான செயல்பாடு!

மதமாற்றம் தொடர்பான விவாதம் எழும்போதெல்லாம் அதைத் தவிர்க்கவும், திசை திருப்பவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சாடவும் விமர்சிக்கவும் செய்துவந்தவர்களுக்கு இது ஒரு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. எந்த விவாதத்தை அவர்கள் தவிர்த்து வந்தார்களோ, அந்த விவாதத்தை அவர்களே இப்போது எழுப்ப வித்திட்டிருக்கிறார்கள்.

இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எப்போதுமே தந்திரமான எண்ணம் இருந்ததே இல்லை. இந்துக்களுக்கு குயுக்தியான எண்ணம் இல்லாததில் வியப்பொன்றும் இல்லை. மதம், கடவுள் அல்லது ஆயுதங்களின் மூலம் எதையும் கைப்பற்றும் எண்ணமோ அல்லது அடக்கியாளும் எண்ணமோ இந்துக்களுக்கு இருந்ததில்லை. அவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, பிற மதத்தினரைத் தங்களது மதத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமோ இருந்ததே கிடையாது. அடிப்படையில் இந்துக்களுக்கு மதமாற்றத்தில் நம்பிக்கையும் கிடையாது.

"தி எகானமிஸ்ட்' சஞ்சிகை, 2013 மார்ச் 30-ஆம் தேதி இதழில், இந்தியாவுக்கு கலாசார சிந்தனையோ விழிப்புணர்வோ போதிய அளவு இல்லை; அதுதான் அந்த நாடு வல்லரசாவதற்குத் தடைக்கல்லாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. இது உண்மை. இந்துக்களிடம் எதிர்மறையான சிந்தனை இல்லை. அதற்கான தேவையும் இல்லை. இந்துக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சிகூட, தாமதமாக எழுந்ததுதான்!

மனிதநேயத்துடன்கூடிய இந்து சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனைதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் குறிக்கோள். இந்தியத் திருநாட்டை "இந்து ராஷ்ட்டிரம்' என்று அழைக்க வேண்டும் என்று விரும்புவது உண்மை. அனைத்து இந்தியர்களும் ஒரே மாதிரியான, வேறுபாடு இல்லாத கலாசாரத்தையும், முன்னோர்களையும் கொண்டவர்கள் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திடமான நம்பிக்கை. உண்மையாகவும் நியாயமாகவும் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தில் தவறு காண முடியாது.

இந்திய முஸ்லிம்கள் ஒன்றும் அராபியர்களின் வாரிசுகள் அல்லர்; கிறிஸ்தவர்களும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களா என்ன?
இந்தியாவில் வாழும் பல கோடி இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் நம்பிக்கையால் அந்த மதத்தைச் சார்ந்தவர்களே தவிர, அடிப்படையில் இந்தியர்கள், இந்துக் கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள். இல்லையென்றால், இவர்கள் ஏன் இன்னும் தாலி கட்டுவது, கிறிஸ்துவ தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் திருவிழா நடத்துவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்? அவர்களது நம்பிக்கை மாறி இருக்கிறதே தவிர, அவர்களது அடிப்படைக் கலாசாரம் மாறவில்லை என்பதைத்தான் அவை காட்டுகின்றன.

1901-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஒன்றுபட்ட இந்தியாவில் வாழும் 6.6 கோடி முஸ்லிம்களில் வெறும் 3.5லட்சம் பேர்தான் தங்களை மொகலாய பரம்பரையினர் என்று கூறியுள்ளனர். இந்த கூற்றுப்படி இந்திய பரம்பரையைச் சேர்ந்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைத் தேசிய நீரோட்டத்தில் ஒன்றிணைக்கும் முயற்சியில்தான் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது.

அனைவரையும் மனிதநேயத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும். யாரிடமும் பகைமை கொள்ளக்கூடாது என்பதை 1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற உலக மதத்தலைவர்கள் மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தினார். ஒருங்கிணைப்பது எதையும் அழிப்பதாகாது. ஏனெனில் இது மதமாற்றம் அல்ல.

நோபல் பரிசுபெற்ற அறிஞர் வி.எஸ்.நைபால், "மதமாற்றம் என்பது கடந்தகால நிகழ்வுகளை, வரலாறுகளை முற்றிலும் அழித்துவிடுவது, என் முன்னோர்களுடைய கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என ஒருவரை அவரது பல தலைமுறை பாரம்பரியத்திலிருந்து வேரறுத்து விடுவது' என்கிறார். மதத்தை மாற்றுவதன் மூலம் அந்த மனிதனுடைய மண்ணின் மாண்பை அழித்து விடுவதுதான் அடிப்படைக் குறிக்கோள். இந்தியாவில் அது முழுமையாக எடுபடவில்லை என்பதிலிருந்தே, நமது கலாசார வேர்கள் எந்த அளவுக்கு ஆழமாகப் பரவிக் கிடக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

டாக்டர்.அம்பேத்கரைத் தங்களது தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்ளும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் போலி மதச்சார்புவாதிகளுக்கு ஆதரவாகக் குரலெழுப்புவது வேதனையாக இருக்கிறது. 1936-ஆம் ஆண்டு, ஜூலை 24-ஆம் தேதி "தி டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையில் அவர் மதமாற்றம் பற்றிய தனது கருத்தை மிகவும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
"மதமாற்றத்தால் நமது தேசத்திற்கு ஏற்படும் பாதிப்பையும், பின்விளைவுகளையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இஸ்லாம் மதத்துக்கோ, கிறிஸ்துவ மதத்துக்கோ மதமாற்றம் செய்யப்படுவது ஒடுக்கப்பட்ட மக்களை தேசியத்தளத்தில் வலுவிழக்கச் செய்துவிடும். இஸ்லாத்துக்கு மாறினால் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் தொடர்விளைவாக இங்கே இஸ்லாமிய ஆதிக்கம் வலுப்பெற்று, நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமலே போய்விடும். கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதன்மூலம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பலப்படுத்துவதுடன் மேலைநாட்டு சக்திகளுக்கு நாம் அடிமைப்பட நேரிடும்.
சீக்கிய, புத்த, ஜைன மதத்திற்கு மாறுவதன் மூலம் இந்தியாவின் வருங்காலத்தையும், இந்திய நாட்டின் அடிப்படை தார்மிகக் கோட்பாடுகளையும் அது பாதிப்பதாக இருக்காது. அதன்மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் பலம் குறையாது. தேசநலன் பாதுகாக்கப்படும்'' என்று எழுதுகிறார் டாக்டர்.அம்பேத்கர்.

"மதமாற்றம் என்பது தேசத்துக்கு, கலாசாரத்துக்கு, நாம் வாழும் பகுதிக்கு அழிவை ஏற்படுத்துவது. ஒருங்கிணைப்பது என்பது இவற்றை நாம் கட்டிக்காப்பது. "பல்வேறு மதத்தினரும் இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் இந்தியா ஒரே தேசம் என்பதை யாராலும் மறுக்க முடியாது, அதைக் கைவிட்டு விடவும் முடியாது' என்று மகாத்மா காந்தியே கூறியிருக்கிறார்.


வெளிநாட்டினர் இங்கு வருவதால் தேசம் சீர்குலைந்துவிடாது. அவர்களும் நம்மோடு இணைந்து செயல்பட வேண்டும், நமது கலாசார பழக்கவழக்கங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும், அவ்வளவே! அனைவரும் ஒருங்கிணைவோம் என்று ஆர்.எஸ்.எஸ். சொன்னால், தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், மகாத்மா காந்தி, விவேகானந்தர் கூறியதை மறந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது வகுப்புவாத முத்திரை குத்துகின்றனர்.


-தினமணி.


வணக்கம் வ.களத்தூர் சொந்தங்களே...

உலகம் முழுவதும் பரவி கிடக்கும் நம் வ.களத்தூர் சொந்தங்களுக்கு ஒரு இணைப்பு பாலமாய் , நம் குரலை உலகம் அறிந்துகொள்ள ஒரு மாற்று ஊடகமாய் http://www.vkalathurseithi.com/ என்ற இனைய தளம் தொடங்க முழு மூச்சாய் வேலைகள் நடைபெற்று வருகிறது.

பொங்கலுக்கு முன்பாக http://www.vkalathurseithi.com/ இணைய தளம் முழு அளவில் செயல்பட தொடங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். நம் ஊரின் நலனுக்காக நம் குரலாக என்றும் வ.களத்தூர் செய்திகள் இணைய தளம் செயல்படும் என்பதற்கு மன்றம் சார்பில் உறுதி கூறுகிறோம். தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறோம்.....


இணைய தளம் தொடங்க காரணமாய் எல்லாவிதத்திலும் உதவியாக இருக்கும் குமார் (
https://www.facebook.com/vkalathur1 ) மற்றும் சத்தியராஜ் ( https://www.facebook.com/sathyasatha.raj ) இருவருக்கும் விவேகானந்தர் மன்றம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

தற்போது செயல்பட்டு வரும் http://vkalathurseithi.blogspot.in/ இணையதளம் வழக்கம்போல் செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Saturday 20 December 2014


முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துகொள்வதற்காக மட்டும் வேறு மதப் பெண்கள் முஸ்லி மாக மதம் மாறினால் அது செல்லாது என அலாகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதி கள், திருமணமான தம்பதி என்ற முறையில் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இத்தம்பதி களில் ஆண்கள் முஸ்லிம்கள், பெண் கள் இந்து மதத்திலிருந்து திருமணத்துக்காக முஸ்லிமாக மாறியவர்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி சூர்ய பிரகாஷ் கேசர்வாணி இம்மனுக் களைத் தள்ளுபடி செய்து தீர்ப் பளித்தார். தீர்ப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டிய அவர், “இஸ்லாம் மதத்தின் மீதான உண்மையான நம்பிக்கையின்றி, திருமணத்துக்காக மட்டும் முஸ்லி மாக மதம் மாறுவது செல்லாது” எனக் குறிப்பிட்டார். 


கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் சினேகா (வயது 24). இவர் எம்.பி.ஏ படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், கோவையில் நடனப்பயிற்சி மாஸ்டராக இருக்கும் முகமது முக்தருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதல் விவகாரம் சினேகாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் காதலை கைவிடும்படி வற்புறுத்தினர்.
இந்த நிலையில் சினேகாவும், முகமது முக்தரும் வீட்டை விட்டு வெளியேறி கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் அதன் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாலை மாற்றி கலப்புதிருமணம் செய்து கொண்டனர். இதனால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தனது மகளை காணவில்லை என்று சினேகாவின் தந்தை கோவை ரத்தினபுரி போலீசில் புகார் செய்து இருந்தார். அதன் பேரில் சினேகாவை போலீசார் நேற்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
முஸ்லிம் அமைப்பினர் இதற்கிடையில் அந்த பெண்ணை பெற்றோருடன் ஒப்படைக்க 3 முதல் 5 கோடி பேரம் பேசி முடித்ததாக செய்தி தாள்களில் செய்திகள் வெளியாகி உள்ளது..
நேற்றைய செய்தி..

காதல் திருமணம்: கும்பலுக்கு ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட தொழில் அதிபரின் மகள் மீண்டும் மாயம்
கோவை,டிச.18–

கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).24 வயது நிரம்பிய இந்த பெண் எம்.பி.ஏ. படித்து வருகிறார். இவருக்கும் கோவையில் நடனப்பயிற்சி மாஸ்டராக இருந்த வாலிபர் மஜித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
இந்த காதல் விவகாரம் ராணியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் கொதித்து எழுந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 3.12.2014 அன்று பெற்றோர் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
மகளை செல்போனில் தொடர்பு கொண்ட ராணியின் பெற்றோர் காதலனை உதறி தள்ளிவிட்டு தங்களுடன் வருமாறு கூறினர். ஆனால் அதை ராணி ஏற்றுக்கொள்ளவில்லை.
காதல் கணவரை கைவிட்டு வரமறுத்தார். ஆனால் மகளை எப்படியும் பிரித்து தங்களுடன் கொண்டு வர வேண்டும் என்று அவரது பெற்றோர் உறுதியாக இருந்தனர். அதற்கான நடவடிக்கையிலும் அவர்கள் இறங்கினர்.
இதை அறிந்த ராணியும், மஜீத்தும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
காதல் ஜோடி கமிஷனர் அலுவலகத்தில் இருப்பதை அறிந்து ஒரு கும்பல் அங்கு வந்தது. காதல் ஜோடியிடம் பேசிய அந்த கும்பல் தாங்கள் உரிய பாதுகாப்பு அளிப்பதாக நம்பிக்கை தெரிவித்தனர். இதனை காதல் ஜோடியும் நம்பியது. அந்த கும்பலுடன் அவர்கள் சென்றனர்.
மஜீத்தையும், ராணியையும் ஒரு வீட்டில் அந்த கும்பல் தங்க வைத்தது. ராணியின் குடும்ப சூழ்நிலையை அறிந்த அந்த கும்பல் பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கியது. “உங்கள் மகள் எங்கள் வசம் தான் இருக்கிறாள். எங்களுக்கு ரூ.5 கோடி கொடுங்கள். உங்கள் மகளை உங்களிடம் பத்திரமாக ஒப்படைக்கிறோம்” என்று பேரம் பேசினர்.
மகளை எப்படியும் பிரித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ராணியின் தந்தை ரூ.3 கோடி கொடுக்க தயாரானார். இந்த விவகாரம் ரகசியமாக காதல் ஜோடிக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கும்பல் தங்க வைத்திருந்த இடத்தில் இருந்து தப்பித்து செல்ல முயன்றனர்.
அப்போது அந்த கும்பல் மஜீத்தை தாக்கி பேப்பரில் கையெழுத்து பெற்றது. பின்னர் ரூ.3 கோடி பெற்றுக் கொண்டு ராணியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் வெளிப்படையாக வெளியே தெரியாவிட்டாலும் கோவையின் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த ராணி நேற்றிரவு 8.15 மணிக்கு பிறகு திடீரென மாயமானார். பதறிப்போன ராணியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அவர்கள் மகள் மாயமானது குறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராணியை தேடி வருகிறார்கள். ராணி மீண்டும் காதலனுடன் ஓட்டம் பிடித்தாரா? அல்லது வேறு யாராவது கடத்தி சென்று விட்டனரா? அல்லது வேறு ஏதும் சம்பவம் நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்றைய தினமலர் செய்தி:


நன்றி- https://www.facebook.com/BjpCoimbatoreThondamuthurMandal/posts/390368464453311:0

Tuesday 16 December 2014


             தானத்தில் சிறந்தது அன்னதானம் என்போம். அக்காலத்தில் அன்னசத்திரங்கள் கட்டி வழிப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவளித்த பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழர்கள் என்கிறது தமிழர் வரலாறு. ஆனால் குடிநீரும் விலைக்கு வாங்க வேண்டிய இன்றைய நவீன உலகில் அன்னதானத்தின் நிலை பற்றி சொல்வதற்கில்லை.

ஆனால் ஆச்சர்யமாக கிட்டதட்ட அன்னதானம் என்று சொல்வதற்கு ஈடாக மதுரையில் ஒரு ஹோட்டலில் வெறும் 10 ரூபாய்க்கு இன்றும் உணவளிக்கப்படுகிறது என்பது ஆச்சர்யமான செய்தி.

இன்றைய பாஸ்ட் புட் காலத்தில் குடும்பத்துடன் சாதாரண ஒரு ஹோட்டலுக்கு சென்றாலும் செலவாகும் தொகை நிச்சயம் உங் கள் மாத சம்பளத்தில் ஒரு கணிசமான பங்காகத்தான் இருக்கும்.  அப்படிப்பட்ட சூழலில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கிறது இந்த 10 ரூபாய் சாப்பாடு. 

மதுரை  அண்ணா பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் இந்த கடையில் எப்போதும் கூட்டம் அலை மோதியபடியே இருக்கிறது. கல்லாப்பெட்டியிலும் கஸ்டமர் கவனிப்பிலும் பாதிப்பாதி கவனமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடையின் உரிமையாளர் எஸ்.ராம்சேர்வைக்கு வயது 85. மதிய உணவு இடைவேளையில் கூட்டம் குறைந்திருந்த ஒரு நேரத்தில் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

“ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். அதிகம் படிக்காததால் ஆரம்பத்தில் கூலி வேலைதான் பார்த்தேன். போதிய வருமானமில்லாத நிலையில் கல்யாணம் நடந்தது. அதன்பின் அந்த சம்பளம் கொஞ்சமும் கட்டவில்லை. மனைவியோடு கலந்து பேசினேன். எதாவது ஒரு தொழிலை செய்யனும். அது மனதுக்கு திருப்தியானதாகவும் இருக்கணும் என முடிவு செஞ்சேன். வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் பலநாட்கள் பட்டினி கிடந்திருக்கேன்.

என்னை போல் எத்தனை பேர் உணவுக்கு கஷ்டபடுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கும் எதாவது செய்யவேண்டும் என்று கூறியதை என் மனைவி ஏற்றுக்கொண்டாள்.

பொருளாதாரத்தால் வாழ்க்கை நிலை உயர்த்தலாம் என்ற நிலையிலும் என் யோசனையை என் மனைவி எந்த வாதமுமின்றி ஏற்றுக்கொண்டதற்காக அவளுக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும். 1967 ஆம் ஆண்டு சிறியதாக கடையாகத் துவக்கினேன்.


முதலாளி தொழிலாளி ரெண்டுமே நானும் என் மனைவியும் தான். ஆரம்பத்தில் 1.25 ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்தோம்.  விலை மலிவாக இருந்ததால் அரசு ஊழியர்களும், கல்லூரி மாணவர்களும் எங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களானார்கள்.

வாடிக்கையாளர்கள் இந்த விலையில் திருப்தியடைந்ததால் அவர்கள் மகிழ்ச்சியை நீட்டிக்க எந்தக் காலத்திலும் கையை கடிக்கும் விலையை நிர்ணயிக்க கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டேன். இன்று வரை கடைபிடித்தும் வருகிறேன். பல சமயங்களில் இந்த பணத்தையும் தர இயலாதவர்களிடம் என் மனைவி காசு வாங்க மாட்டாள்.

“குறைவான தொகைதானே அதையும் ஏன் இலவசமாக தரவேண்டும்” என நான் எப்போதாவது கூறினாலும் அவள் நிறுத்திக்கொள்ளமாட்டாள். இப்போது அவள் முடியாமல் இருக்கிறாள். அதனால் யாராவது  வந்து காசு இல்லை என்று சொன்னாலும் கூட சாப்பாடு போட்டு அனுப்புவேன். மலிவான விலை இருக்கவேண்டும் என்பதற்காக தரம் குறைந்த அரிசியை பயன்படுத்துவதில்லை. பொன்னி அரிசி மட்டுமே பயன்படுத்துகிறேன். மற்ற ஹோட்டல்களுக்கு ஈடாக கூட்டு ரசம் மோர் ஊறுகாய் என ருசியான உணவையே செய்து கொடுக்கிறேன்” என்கிறார் முகத்தில் பெருமிதம் படர.
“நான் வள்ளலாரின் பக்தன். அவர் சொன்னபடியே தான் செய்கிறேன். அன்னதானம் செய்வது மிகச் சிறப்பானது என்றாலும் என்னிடம் அந்தளவு பணம் இல்லை. அதனால் என் மனதிருப்திக்கு விலை குறைவாகவும், இலவசமாகவும் உணவு தருகிறேன். போதிய வருமானம் இல்லை என்றாலும் மனதுக்கு திருப்தி இருக்கிறது ” என்று சொல்லும்போது விவரிக்கமுடியாத மகிழ்ச்சி ராம்சேர்வையின் முகத்தில்.
இந்த கடையில் காலை 4 இட்லி, பொங்கல், தோசை-2 , மதியம் சைவ சாப்பாடு எதுவாக இருந்தாலும் 10 ரூபாய் தான். இந்த விலையால் பலர் ஆர்டர் தந்து வறியவர்கள் மற்றும் முதியவர்களுக்கு தானம் கொடுக்கச் சொல்வர். அதையும் தவிர்க்காமல் செய்கிறார் ராம்சேர்வை.

உலகநாதன் என்ற வாடிக்கையாளர்,  “1986 லிருந்து சாப்பிட்டு வருகிறேன். சாதாரண ஓட்டலுக்கு சென்றாலும் பாக்கெட்டை பதம் பார்த்துவிடும் அங்குள்ள உணவுகளின் விலைப்பட்டியல். ஆனால் இத்தனை வருடங்களாக சாப்பிட்டும் எனக்கு இந்த விலை ஒரு செலவாகவே தெரியவில்லை.

உணவும் தரமாக இருப்பது ஆச்சர்யம் தருகிறது. அசைவ ஹோட்டல் என்றால் சாதாரணமாக ஒரு பிரியாணி குறைந்தது 200 ரூபாய். இங்கு அந்த பணத்தில் 6 பேர் கொண்ட ஒரு குடும்பம் 3 வேளை உணவு சாப்பிடலாம். அதுவும் இங்கே வயிறு நிறைய மன திருப்தியுடன்” என்றபடி ஒற்றை 10 ரூபாய் தாளுடன் கல்லாவை நோக்கி நடக்கிறார்.

வாழ்க்கை முழுதும் படிப்பவர்கள் பலபேர். ஆனால் வாழ்க்கையையே படிப்பவர்கள் மிகச் சிலர். அந்த சிலரில் ராம்சேர்வையும் ஒருவர். தன் உழைப்பையும் முதலீட்டையும் முகம் தெரியாத மனிதர்களுக்காகவும் செலவிடும் ராம்சேர்வை போன்றவர்கள்தான் மனிதநேயம் என்ற ஒற்றை வார்த்தையின் மீது இன்னமும் நம்பிக்கை கொள்ள காரணமாகிறார்கள்.

வெறும் பாராட்டுக்களால் அவருக்கு நமது மகிழ்ச்சியை தெரிவிக்காமல் அவரைப்பின்பற்றி நாமும் நம் வாழ்வில் மனிதநேயத்தை பின்பற்றுவோம்.

-விகடன்.

பெரம்பலூர்- குரும் பலூரில் நடந்த சனி பெயர்ச்சிவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகாரம் செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனி பெயர்ச்சி அடைந்ததை யொட்டி சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.

இதனை முன்னிட்டு மதியம் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், மகாதீப ஆரா தனையும் நடந் தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலையில் நடந்தது. பூஜைகளை திருச் செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் கோவில் அர்ச்சகர் கவுரி சங்கர் மற்றும் சிவாச்சாரி யார்கள் நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் திருப்பணிகளை மேற்கொள் ளும் தர்மபரிபாலன சங்க பொருளாளர் ராமலிங்கம், முன்னாள் அறங்கா வலர் குழு உறுப்பினர் வைத்தீஸ் வரன், சாய்சங்கீத் ரவி, வள்ளி ராஜேந்திரன், கணேசன் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு சனிபெயர்ச்சியையொட்டி பரிகாரம் செய்து கொண் டனர்.


கச்சேரி பிள்ளையார் கோவில்

பெரம்பலூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கச்சேரி பிள்ளையார் கோவி லில் சனிபெயர்ச்சி விழாவை முன்னிட்டு மதியம் வினாயகர் பூஜை, கலசபூஜை, திரவிய ஹோமம், மூலவருக்கு அபிஷே கம் மற்றும் கலச அபிஷேகம் மகாதீப ஆரா தனை நடந் தது.

பூஜைகளை கோவில் அர்ச்சகர் சஞ்சீவி மற்றும் பிரசாத் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டனர்.

குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவில்

பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்ம சம்சவர்த்தினி சமேத பஞ்ச நதீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு விநாயகர் வழிபாடு, கலச பூஜை நவக்கிரக ஹோமபூஜை பூர்ணாகுதி மகாதீப ஆரா தனை நடந்தது.

இதில் குரும்பலூர் பேரூ ராட்சி, பாளையம், மேட்டாங் காடு, ஈச்சம்பட்டி பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜை களை சிவசுப்ரமணிய சிவம் நடத்திவைத்தார். விழா ஏற் பாடுகளை கிருத்திகை விழாக் குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்

ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் காமாட்சியம் மன் உடனுறை ஏகாம் பரேஸ்வரர் கோவிலில் சனி பகவானுக்கு மகா அபிஷே கத்துடன் தீபாரதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர். சனிபகவானால் பாதிக்கப்படும் ராசிக¢காரர் களுக்கு சிறப்பு பரிகார பூஜைகள் மற்றும் வழிபாட் டிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் செட்டிகுளம், பொம் மனப்பாடி, சத்த¤ரமனை, வேலூர், இரூர், பாடாலூர், நாரணமங்கலம், மருதடி, குரூர், புதுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை, நாட்டார்மங் கலம், கூத்தனூர், ஆலத் தூர்கேட், உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு மற்றும் பரிகார பூஜை கள் செய்து வழிபாடு நடத் தினர்.

செய்தி-தினத்தந்தி., பட உதவி- வசந்தஜீவா.

பெரம்பலூரில் மார்க்கெட் தெருவில் உள்ள கலாம்ஸ் பயிற்சி நிறுவனம் வினய் கல்வி அறக்கட்டளையின்கீழ் இயங்கிவருகிறது. இந்த அறக் கட்டளையின்கீழ் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் கல்வி மற்றும் தகவல்மையம் தொடக்கவிழா கலாம்ஸ் இயக்குனர் பாக்யராஜ் தலை மையில் நடந்தது. அரிமா சங்கத்தின் மாவட்ட ஆலோச கர் ராஜாராம் தமிழ்ப்பல்கலைக் கழக கல்வி மற்றும் தகவல்மையத்தை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத் தார்.

இந்த நிகழ்ச்சியில் ஐ.ஜே.கே. மாவட்டத்தலைவர் அசோ கன், அரிமா மாவட்ட தலை வர்கள் இமயவரம்பன், பாடா லூர் மதியழகன், செந்தூர் சுகுமார், வட்டாரத் தலைவர் விஷால் சரவணன், பெரம்ப லூர் சங்கத்தலைவர் முத்துக் குமார், துணைத் தலைவர் ஒஜீர், கட்டிட வல்லுனர்கள் சிவராஜ், மோகன்ராஜ், பெரி யார் தொண்டர் லட்சுமணன், எஸ்.எஸ். பல்பொருள் அங்காடி சென்னன், அன்பு சபியுல்லா, நெற்குணம் ர«¢மஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-தினத்தந்தி...
கல்லாற்று நீர்த்தேக்கம்.

பெரம்பலூர் மாவட் டத்தில் போதிய பருவ மழை இல்லாததால், காட்டாறுகளில் நீர்வரத்து இன்றி பெரம்பலூர்-கடலூர் மாவட்டங்களை இணைக்கும் வெள்ளாறு நீர்த்தேக்கம் வறண்டு போனது.

வறட்சி மாவட்டம்

தமிழ்நாட்டிலேயே வறட்சி யான மாவட்டமான பெரம்ப லூர் மாவட்டம் கரிசல் மண்பூமியை பெரும்பாலும் கொண்டதாகும்.தமிழகத் திலேயே பருத்திவிளைச்சலில் முதன்மை மாவட்டமாக திகழ்ந்த பெரம்பலூர் மாவட் டம் தற்போது மக்காச்சோள உற்பத்தியில் முன்னோடியாக விளங்கிவருகிறது.

வடகிழக்கு பருவமழையை நம்பி உள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாகவும், அரணாகவும் விளங்கும் பச்சைமலையில் இருந்து கல்லாறு, சின்னாறு, வெள்ளாறு, கோனேரிஆறு, சுவேதநதி போன்ற காட்டாறு கள் உற்பத்தியாகின்றன. காட்டாறுகள் கலந்துவிடும் வெள்ளாறு வேப்பந்தட்டை, வேப்பூர் ஒன்றியங்கள் வழியாக சென்று கடலூர் மாவட்டம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இதுதவிர சிறுவாச்சூர் அருகே பெரியசாமி மலையில் உற்பத்தியாகும் மருதையாறு, பெரம்பலூர், ஆலத்தூர், அரியலூர், திருமானூர், தா.பழூர் ஒன்றியங்கள் வழியாக பாய்ந்து, கொள்ளிடம் ஆற்றில் கலந்து வங்காளவிரிகுடாவை சென்றடைகிறது.

சாரல் மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் 2011 -ம்ஆண்டு முதல் நடப்பு ஆண்டுவரை வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாமல் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் நடப்பு ஆண்டிலாவது வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யுமா? என்று விவசாயிகள் எதிர் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் சாரல் மழையாக பெய்து மழைகாலத்திற்கும் விடைகொடுக்கும் நிலைக்கு பெரம்பலூர் மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் பெரம்பலூர் மாவட்டத்தின் பெரிய ஏரியான அரும்பாவூர் ஏரி, பாண்டகப்பாடி ஏரி ஆகியவை நிரம்பி உள்ளன. தொண்டமாந்துறை ஏரி 80 சதவீதம் நிரம்பி உள்ளது. பச்சைமலையில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கோரையாறு, கல் லாற்றில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. நீர்ஓட்டம், வெள்ளப் பெருக்கு என்பது நினைவாகவே உள்ளது.

கிணற்றுப்பாசனம்

இம்மாவட்டத்தில் கிணற்றுப் பாசனம் அதிகம் நடைமுறையில் உள்ளதால் கடந்த 3 ஆண்டுகளில் நிலத் தடி நீர்மட்டம் 150 அடியில் இருந்து 250 அடிவரை சென்று விட்டது. பயிர், காய்கறிகள் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 908 மி.மீ. ஆகும். கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் மொத் தம் 814.36 மி.மீ. மழைஅளவு பதிவாகி இருந்தது. நடப்பு ஆண்டில் நடப்பு தேதிவரை 828.20 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் வெள்ளாற்றில் 16 கண் மதகுகளில் 2 மதகுகளில் மட்டும் தேங்கி உள்ள மழைநீர் கசிந்தவண்ணம் உள்ளது. இதனால் வெள்ளாறு நீர்த் தேக்கம் சிறிதளவு நீருடன் வறண்டு போகும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரத்திடம்கேட்டபோது, பெரம்பலூர் மாவட்டத்தில் அடைமழை பெய்தால்தான் விவசாயம் தழைக்கும், நிலத்தடிநீர் மட்டம் உயரும். இல்லாவிட்டால் காய்கறிகள், விளைச்சல் குறைந்து விலை அதிகரிப்பதை தடுக்க முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீசனில் 21 நாட்கள் அடைமழை பெய்தாலே நீர் நிலைகளில் போதிய நீர் ஊற்றம் கண்டு, அந்த ஆண்டு வேளாண்மை சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். ஆனால் பெரம்பலூர் மாவட் டத்தில் அடை மழையை காண்பது கடந்த 4 வடகிழக்கு பருவமழை காலங்களில் அரிதாகிவிட்டது. இந்த ஆண்டும் ஆண்டு சராசரி மழைஅளவைவிட குறை வாகவே மழை பெய்துள்ளது என்று தெரிவித்தார்.

- தினத்தந்தி.


பெஷாவர்,:பாகிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் பள்ளி புகுந்து நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் 84 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்தனர்.

ராணுவம் அதிரடி தாக்குதல்

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின்கீழ் உள்ளது.

இங்குள்ள தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் அரசுக்கு சர்வதேச நாடுகள் நிர்ப்பந்தம் கொடுத்தன. இந்நிலையில் தீவிரவாதிகள் கராச்சி விமானநிலையத்தில் பெரும் தாக்குதல் நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்டோர்கள் பலியாகினர். இதனையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரவாதிகளை அழிக்க பாகிஸ்தான் போர் விமானங்கள், தலீபான் முகாம்களை குறி வைத்து தாக்குதல்கள் தொடுத்து வருகிறது. அமெரிக்காவும் தாக்குதல் நடத்திவருகிறது.

இதுவரையில் 2000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக்குள் தீவிரவாதிகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவ பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட படித்து வருகின்றனர். இன்று பள்ளி வழக்கமாக செயல்பட்டபோது, ராணுவ உடையில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்தனர். தீவிரவாதிகள் பள்ளிக்குள் புகுந்தது தொடர்பாக தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் பள்ளியை சுற்றி வளைத்தனர். பள்ளிக்குள் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தாக்குதல் தொடர்பான தகவல்கள் தெரியவந்ததும் பள்ளியை சூழ்ந்தனர்.

சரமாரியாக துப்பாக்கி சூடு

உள்ளே புகுந்த தீவிரவாதிகள் பள்ளி குழந்தைகள் என்றும் பார்க்காமல் உள்ளே சிக்கியவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். பள்ளியில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதும், தீவிரவாதிகளை நோக்கி ராணுவமும் தாக்குதல் நடத்தியது.


ராணுவம் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகள் பள்ளி குழந்தைகளை சுட்ட வண்ணமே இருந்தனர். இதற்கிடையே ஒருபகுதியாக உள்ளே சென்ற ராணுவம், காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் செல்லும் பரிதாப சம்பவம் நிகழ்ந்து கொண்டுள்ளது. பெற்றோர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளனர். ராணுவம் உள்ளே சிக்கியிருக்கும் குழந்தைகளை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

104 பேர் உயிரிழப்பு

கொடூர குணம் கொண்ட தலிபான் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 84 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்தனர் என்று மாகாண முதல்-மந்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்த குழந்தைகள் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த குழந்தைகளில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளியின் ஆசிரியர்களும் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

 பள்ளிக்குள் புகுந்து 6 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மீதிஉள்ள தீவிரவாதிகளை சுட்டுத் தள்ளும் முயற்சியில் ராணுவம் இறங்கியுள்ளது.


இந்த தீவிரவாத தாக்குதலுக்கு தெரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கம் பெறுப்பேற்றுள்ளது. தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் மெத்தனமாக கூறியுள்ளது. இச்சம்பவம் உலக அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவாஸ் செரீப் கண்டனம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  நவாஸ் செரீப் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். இதற்கிடையே சம்பவம் நடந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நான் பெஷாவர் செல்ல முடிவு செய்துள்ளேன். அங்கு ராணுவம் தரப்பில் நடத்தப்படும் நடவடிக்கையை ஆய்வு செய்ய உள்ளேன். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் என்னுடையவர்கள், இது எனக்கு இழப்பு என்று பிரதமர் நவாஸ் செரீப் கூறியுள்ளார்.

தலிபான் அடாவடி

குழந்தைகளை சுட்டுக் கொலை செய்த கொலைக்கார தலிபான் தீவிரவாத இயக்கம் ராணுவத்திற்கு எங்களது வலியை உணரச் செய்யவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளோம் என்று அடாவடியாக தெரிவித்துள்ளது.

தலிபான் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவம் எங்களது குடும்பத்தை குறிவைத்ததால் நாங்கள் பள்ளியை குறிவைத்தோம். அவர்கள் எங்களுடையை வலியை உணர விரும்பினோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவம் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

-தினத்தந்தி.

பாட்னா:பீகார் மாநிலம் பீளகஞ்ச்சட்டசபை தொகுதி  ராஷ்டிரிய ஜனதா தல எம்.எல்.ஏ  சுரேந்திர பிரசாத் யாதவ். இவர்கடந்த ஞாயிற்று கிழமை கயாவிற்கு சென்று விட்டு பீளகஞ்ச் திரும்பி கொண்டு இருந்தார்.  வரும் வழியில் கயா திகிரி ரோட்டில் உள்ள ஸ்ரீராம் தில் குத் பந்தர் என்ற சுவீட் கையில் நிறுத்தி உள்ளார். அங்கு சுவீட் வாங்க சென்று உள்ளார். அப்போது சுவீட் கொடுக்க நேரமாகி உள்ளது இதில் சுவீட் கடை உரிமையாளர் திரேந்திர குமாருக்கும் எம்.எல் ஏவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.

 இதில் கோபம் அடைந்த சுவீட் கடை உரிமையாளர் திரேந்திர குமார் கொதிக்கும் எண்ணெய்யை எம்.எல்.ஏ மற்றும்  அவரது உதவியாளர் மீது ஊற்றினார் இதில் எம்.எல் ஏயின்  காது மற்றும் கழுத்துபகுதியில் காயம் ஏற்பட்டது உடனடியாக இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.இது குறித்து எம்.எல்.ஏ சுரேந்திர பிரசாத் போலீசில் புகார் செய்து உள்ளார். சுவீட் கடை உரிமையாளரும். எம்.எல்.ஏ குறித்து போலீசில் புகார் செய்து உள்ளார்.

-தினத்தந்தி.

Saturday 13 December 2014

           காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகளையும் சந்தித்து,  இன்று காலை 11 மணி அளவில் தொடங்கிய ஐயப்ப சுவாமி ஊர்வலம் அமைதியாக நடைபெற்று முடிந்தது. திரளான மக்கள் ஐயப்ப சுவாமியின்  ரதத்தை கண்டு பெரும் மகிழ்வடைந்தனர்.

facebook இணையத்தளத்தில் நம்மவர்கள் பகிர்ந்த படங்கள், உங்களின் பார்வைக்கு.