Friday 6 June 2014

ஈரோடு அருகில் சேலம்-கோவை மெயின் ரோட்டில் உள்ளது பெருந்துறை. பெருந்துறை சரித்திர பழமை வாய்ந்த ஊர். மதமாற்றம் என்பதை அங்கீகரிக்காத ஊர். மேட்டுபாங்கான பகுதியாதலால் இங்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை மானாவரி விவசாயமே. காய்ந்த காலங்களில் நாட்டு மாடு மேய்த்து, மழை காலங்களில் சோளம், வரகு, எள், போன்றவைகளை பயிர் பண்ணி, வருவோர்க்கு நாட்டு மாட்டு மோரும், சோள சோறும் இட்டு விரும்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் இப்பகுதி மக்கள். இத்தாலூகாவின் சில பகுதிகளில் கீழ்பவானி வாய்க்கால் பாசனம் இடையில் வந்தது. கரும்பு, நெல், வாழை, மஞ்சள் என மக்கள் பயிர்களை மாற்றினர். மாட்டையும் மாற்றினர். நாட்டு மாடுகளுக்கு பதில் சீமை மாடுகளுக்குச் சென்றனர். பால் கறந்து ஊற்றி லாபமில்லாமல் பொருளாதார வீழ்ச்சி அடைந்து உடல் நலம் கெட்டு, மனநலம் கெட்டு போயினர்.

நாட்டு மாடுகளை பேணும் விவசாயி
madu
இப்படி வீழ்ந்த ஊர்களில் பெருந்துறை தாலூக்காவில் உள்ள நல்லாம்பட்டியும் ஒன்று. செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற விவசாயி நாட்டு மாடுகளை காக்க எண்ணினார். சில வருடங்களாக இந்த எண்ணம் கொண்டுள்ள அவர், முன்பு தனது கைகாசை (ரூ. ஐந்து லட்சம்) வைத்து அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழாவில் நாட்டு மாடுகள் கொண்ட கண்காட்சியை நடத்தினார். பின்பு அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து கிர், தார்பார்க்கர், சிந்தி போன்ற வட நாட்டு மாடுகளை புறக்கணித்து தனது பகுதி நாட்டு மாடுகளான கொங்க மாடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார். முதலில் ஊரார் தூற்றினர். பைத்தியகாரன் என்றனர். (நல்ல வேலை கல்யாணமாகிவிட்டது. இல்லையேல், இவருக்கு யாரும் பெண் கொடுக்கமாட்டார்கள்). ஊரான் தூற்றல்களை சமாளித்து தற்போது பன்னிரண்டு கொங்க நாட்டு பசுக்கள், மூன்று நாட்டு காளைகள், ஏழு கன்றுக்குட்டிகள் என தனது தொண்டுபட்டியை (தொழுவம்) நாட்டு மாடுகளால் அலங்கரித்து வருகிறார்.

நாட்டு மாடுகளை கொண்டு மகத்தான வருமானம்
நாட்டு மாடுகளை வளர்ப்பதில் அவரது மனைவியும் மிகவும் சிரத்தை காட்டுகிறார்கள். நான்கு ஏக்கர் விவசாய நிலமும் அதில் பயிர்செய்தும், நாட்டு மாடுகளை வளர்த்தும் சுயஉழைப்பில் முன்னேற வேண்டும் என்று நினைத்தவருக்கு ஈரோட்டில் இயங்கி வரும் பஞ்சகவ்ய ஔஷதாலயம் மூலமாக நாட்டு மாடுகளை கொண்டு பால்பொருட்களை நம்பாமல் நல்ல லாபம் பெறமுடியும் என்பதை அறிந்துகொண்டார். மாட்டு மூத்திரத்தை காய்ச்சி அர்க்கம் எனும் ஆயுர்வேத மருந்து தயாரிக்கிறார். மேலும், மாட்டு சாணத்திலிருந்து விபூதி, சோப்பு, ஷாம்பூ போன்றவற்றை தயாரிக்க திட்டமிட்டார். மேலும், நாட்டு மாட்டு பாலை பேக் செய்து 1 லிட்டர் பாலை 65 ரூபாய்க்கு விற்று வருகிறார். மேலும், ஆயுர்வேத மருந்துக்கு அவசியமான மிகவும் அரிதான பாரம்பரிய முறையில் வீட்டில் செய்யப்படும் முறையில் நாட்டு மாட்டு நெய்யும் தயாரிக்கிறார். அவரது மனைவி துணையாக சுழன்று வேலை செய்கிறார். நாட்டு மாடுகளுக்கு கடந்த தைமாதம், முதல் தனது குலகுருவைக்கொண்டு பிரதி மாதம் கடைசி வெள்ளிகிழமை கோபூஜை நடத்தி வருகிறார். குலகுருவை மறந்த அவரும், உறவினர்களும் குருவை தரிசித்து ஆசிகளை பெறுவதோடு, கோ பூஜை புண்ணியத்தையும் அடைகின்றனர். அதோடில்லாமல், தான் மட்டும் நாட்டு மாடுகளை வளர்ப்பதோடில்லாமல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை ஊக்கமளித்து நாட்டு மாட்டுகளை வாங்க செய்துள்ளார். தனது பொலிக்காளைகளைக் கொண்டு அம்மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் இல்லாமல் இயற்கையாக சினை பிடிக்க உதவி வருகிறார்.

வங்கியின் உதவியை நாடுதல்
இந்த நாட்டு மாடுகளின் பொருட்கள் நல்ல வருமானம் கொடுப்பதாக இருந்தாலும், அரசு எந்த வித மானியமோ, கூட்டுறவு வங்கிகள் நேரடி நிதியுதவியோ அளிப்பதில்லை. அதனால், தனது நான்கு ஏக்கர் சொத்தை (ரூ. எண்பது லட்சம் மதிப்பு) அடமானம் வைத்து அவ்வூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் லோன் வேண்டுமென்று விண்ணப்பம் செய்தார். ஒரு ஆடிட்டரைக் கொண்டு முப்பது லட்சம் ரூபாய்க்கு லோன் பிராஜெக்ட் ரிப்போர்ட் கொடுத்தார். இதனை கடந்த ஜனவரியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் திரு.சந்தானராஜிடம் கொடுத்தார் (இவர் ஒரு கிறிஸ்துவர் என்பது குறிப்பிடத்தக்கது). நாட்டு மாட்டிலிருந்து அர்க்கம், ஷாம்பூ, சோப்பு, விபூதி, பால் முதலியவைகளால் நல்ல லாபம் பெற முடியும் என்று கூறி விண்ணப்பித்தார். சுமார் இருபது முறை இதை கொடு அதை கொடு என்று பேங்கில் தொந்தரவு செய்தும், பொறுமையாக அவர் கேட்டதை எல்லாம் கொடுத்த பிறகும் விவசாய லோன் ஏதுமில்லை என்று கூறிவிட்டாராம். பின் எதற்காக கிராமத்தில் வங்கியை வைத்துள்ளார்களாம்?

பின்வாசல் வழியே ஆப்ரகாமிய பாதிரிகள்
லோன் கேட்ட சில வாரங்களில் இரண்டு இளம்வயது பாதிரிகள் (நன்கு டக்-இன் செய்துகொண்டு) மார்ச் மாத கடைசியில் இந்த நாட்டு மாட்டு விவசாயியை சந்தித்து கோவையிலிருந்து வந்துள்ளதாக கூறியுள்ளார்கள். TN 74 ரெஜிஸ்திரேசன் கொண்ட யூனிகாரன் பைக்கில் வந்துள்ளனர். இந்த நாட்டு மாட்டு காளைகள் மூன்றையும் மூன்று லட்சம் ரூபாய்க்கு எங்களிடம் கொடுத்து விடுங்கள்.
உங்களுக்கு கிர், தார்ப்பார்க்கர் போன்ற வடநாட்டு மாட்டு ஊசிகளை இலவசமா தருகிறோம்; உங்கள் நாட்டு மாடுகளுக்கு இதனை இட்டு கலப்பின மாடுகளை உருவாக்குங்கள். இப்படி உருவாகும் கலப்பின மாடுகள் நன்கு பால் கறக்கும். இந்த கொங்க மாடுகள் எல்லாம் வேஸ்ட் என்று பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இப்படி கூறியவுடன் அந்த விவசாயி உறுதியுடன் நாட்டு மாடுகளை வளர்ப்பதே என் லட்சியம் இவையெல்லாம் தேவையில்லாத ஒன்று என்று கூறி அவர்களை திருப்பியனுப்பியுள்ளார்.

இரண்டுமணி நேர மூளை சலவை
பின் இருபது நாட்கள் கழித்து ஏப்ரல் 17 ஆம் தேதி அந்த இரண்டு நபர்களும் மேலும் ஆறு பேருடன் வந்துள்ளார்கள். அன்று ஊரில் மாரியம்மன் பண்டிகையாதலால் வீட்டில் விவசாயியின் மனைவி மற்றும் பெரியோர்கள் யாருமில்லை. அந்த சமயத்தில் ரெஜிஸ்திரேசன் செய்யப்படாத மஹிந்திரா சைலோ காரில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பாதிரி ஒருவரும், முப்பது வயதில் இருவர், இருபது வயதில் மூன்று பேர் என ஒரு கும்பலாக வந்துள்ளனர். அனைவரும் நாகர்கோயில், மதுரை மற்றும் சென்னை பாஷைகளில் பேசியுள்ளனர். சுமார் இரண்டுமணி நேரம் மூளை சலவை செய்துள்ளனர். அவர்கள் கூறியவைகளாவது,
  • இந்த நாட்டு மாட்டை வைத்து நீங்கள் முன்னேற முடியாது,
  • உங்கள் காளை மாடுகளை எங்களிடம் விற்றுவிடுங்கள் மூன்று லட்சம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்கிறோம்.
  • கிர், தார்ப்பார்க்கர் போன்ற வடநாட்டு மாட்டு ஊசிகளை இலவசமா தருகிறோம்; உங்கள் நாட்டு மாடுகளுக்கு இதனை இட்டு கலப்பின மாடுகளை உருவாக்குங்கள்
  • அய்யர் (குலகுரு) போலி. யாகங்கள் செய்யறது ஒண்ணுக்கும் பயனில்லை. அவரை வைத்து கோ பூஜை பண்றது தப்பு,
  • ஏசுதான் மாட்டுக்கொட்டாயில் பிறந்தார். அவர்தான் நம்மை காக்க முடியும்,
  • இலவசமா போர்வெல் (ஆழ்துளை கிணறு) போட்டுத்தருகிறோம்.
  • இலவசமா உங்க வீட்டுக்கு ஜன்னல் அமைத்துத்தருகிறோம்,
  • வாரம் ஒருமுறை எங்கள் பாதர் வந்து ஜபம் செய்வார். அவர் வரும் நேரங்களில் கிடைக்கிற வருமானம் அனைத்தும் உங்களுக்குத்தான்,
  • உங்களது இடத்தில் இருபது சென்டில் எங்களுக்கு இடம் ரெஜிஸ்டர் செய்து வைக்க வேண்டும்,
  • உங்களது மாட்டு அர்க்கம், சோப்பு, ஷாம்பு போன்றவற்றை உலகம் பூரா மார்கெட்டிங் பண்ணித்தருகிறோம்,
  • உங்களுக்கு எவ்வளவு காசு வேண்டுமானாலும் தருகிறோம்.

இப்படியெல்லாம், ரெண்டுமணி நேரம் அந்த விவசாயியை வீட்டு மாட்டு கொட்டகையில் வைத்து பேசியுள்ளார்கள். விவசாயி போன் பேச அனுமதிக்கவில்லை. எட்டு பேரும் சுற்றி நின்று மிரட்டல் தொனியிலேயே பேசியுள்ளார்கள். விவசாயி செய்வதறியாது அவர்கள் கூறுவதை கேட்டுகொண்டு இருந்துள்ளார். இவ்வளவு நேரம் பேசிக்கொண்டுள்ளோம் ஒரு இளநி போட்டு தாங்க என்று கேட்டுள்ளனர். உடனே, விவசாயி என்னிடம் இளநி போட தென்னை மரமில்லை என்று பதிலளித்துள்ளார். உடனே, அவர்கள் உங்களிடம் இத்தனை ஏக்கர் இருக்கிறது. இத்தனை தென்னை மரங்கள் இருக்கிறது என்று சரியாக கணக்கு வைத்துக் கூறியுள்ளனர். விவசாயி தன்னைப்பற்றி இவர்கள் இவ்வளவு தெரிந்து வைத்துள்ளனரே என்று நினைத்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் நாங்கள் மீண்டும் வருவோம் என்று கூறி விட்டு சென்றுள்ளனர்.

பத்து நாட்கள் கழித்து பெருந்துறையிலிருந்து போன் செய்து நாங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்று கூறியுள்ளார்கள். விவசாயி அவர்களை வரச்சொல்லிவிட்டு முதல்முறை பேச்சுவார்த்தையின் போதே மிரட்டும் தொனியில் பேசிய அவர்களின் நடவடிக்கையை மனத்தில் கொண்டு அவர்களுடன் தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம் என்ற எண்ணத்தில் ஊர்மக்களை அழைத்து வைத்திருந்தார். இதற்கிடையில் மீண்டும் அவர்கள் போன் செய்து ““ஊர்மக்களை திரட்டி வைத்துள்ளாய். நீ திருந்த மாட்டாய். நீ எங்களிடம் திரும்பி வருவாய். எங்கள் உதவி உனக்கு தேவைப்படும்” என்று கூறி போனை கட் செய்துவிட்டனர்.

பாரம்பரியத்தையும், காளைகளையும் ஒழிக்க திட்டம்
மதமாற்றம் செய்வது கிறிஸ்தவர்களின் நோக்கமாக இருந்தாலும், கொங்க காளைகளை வாங்க மூன்று லட்சம் ரூபாய் பாதிரிகளுக்கு எங்கிருந்து வருகிறது? காளைகளை ஏன் வாங்க நினைக்கிறார்கள்? வாங்கிய மாடுகள் எங்கே போகிறது? ஏன் வடநாட்டு மாடுகளை கலப்பினமாக்க நினைக்கிறார்கள்? போன்றவை யோசிக்கவேண்டியவை. குலகுரு செய்யும் கோ பூஜையை தடுக்க நினைக்கின்றனர்.

குலகுரு, பசு, காளைகள் போன்றவைகள் நாட்டில் பெருகுவதை அவர்கள் விரும்பவில்லை. மேன்மேலும், கலப்பினங்களை வலியுறுத்துவதிலேயே வந்தவர்கள் குறியாக இருந்துள்ளார்கள். நாட்டு காளைகளை ஒழித்து கிராமத்தில் நாட்டு மாடுகள் இனவிருத்தி ஆகக்கூடாது என்பது அவர்களது எண்ணம். நாட்டு மாடுகளை வளரவிடகூடாது என்று கிறிஸ்தவர்கள் குறியாக இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஜல்லிக்கட்டு தடை கூட இதனுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஜல்லிக்கட்டு இருப்பதாலேயே நாட்டு காளைகளை இனவிருத்தி செய்து நல்ல முரட்டு காளைகளை உருவாக்க இளைஞர்கள் முயற்சிக்கின்றனர். இதனால், பொலிக்காளைகள் நாட்டில் இருப்பதால், நாட்டு காளைகள் இனவிருத்தி ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க வேண்டுமெனில், நாட்டு காளைகளை பூண்டோடு அழிக்க வேண்டும். இருக்கவே இருக்கிறது புளூ கிராஸ் மற்றும் விலங்கு பாதுகாப்பு அமைப்புகள். அவைகளை வைத்து சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போடுகிறார்கள். அதற்கு நிதியுதவி கூட பெறப்பட்டிருக்கலாம். ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும். காளைகள் அடிமாட்டிற்கு விற்கப்படும். நாட்டு காளைகள் பூண்டோடு அழியும். இதுதான் இந்த பின்வாசல் மாபியாக்களின் திட்டம். பசுக்களும், காளைகளும் தெய்வமாக ஜல்லிக்கட்டிலும், கோயிலிலும் கும்பிடப்படும் செயல் குறைந்தால்தான் மக்கள் தங்கள் கலாச்சாரத்தை விட்டு சந்தைகலாச்சாரத்திற்கு மாறுவார்கள் என்ற நோக்கமும் உள்ளே இருக்கலாம். நமது கலாச்சாரத்தை முற்றிலும் அழிக்கவேண்டும் என்று மிக நீண்டகாலமாக கிறிஸ்தவர்கள் சதி அதை பல வழிகளிலும் நிறைவேற்றி வருகிறார்கள். அரசாங்க துறைகளை உபயோகித்து கலப்பின ஊசிகளை இட்டு நமது நாட்டு பசு இனங்களை சீரழித்தனர். கலப்பின பயிர்களை உண்டாக்கி நமது பாரம்பரிய நெல் ரகங்களை அழித்தனர். முற்போக்கு கம்முனிச, திராவிட கும்பலை உருவாக்கி நமது மக்களின் மனத்தை கெடுத்து நமது குருமார்கள் மீது நாம் வைத்திருந்த மரியாதையை கெடுத்து குருமார்களை துவேசித்து ஒதுக்கி நம்மை முன்னோர் சாபங்களை பெற வைத்தனர். இப்படியாக பல்வேறு கோணங்களில் சதிவலை நம்மேல் பின்னப்பட்டுள்ளது. விழித்துக்கொள்ளுங்கள் பாரதவாசிகளே!

thanks to- vsrc 


வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் ரகுமான் அவர்களின் மகள் சபியா பானு கடந்த வருடம் வாகன விபத்தில் மரணமடைந்தார். அவரின் நினைவாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் கலையரங்கம் அமைக்க முடிவுசெய்து ரகுமான் அவர்களின் பங்களிப்புடன்,   கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருவதாக அறிகிறோம்.

வ.களத்தூர் மதரீதியாக மிகவும் பதற்றமான ஊராகும். கடந்தவருடம் இந்து-முஸ்லிம்களிடையே மோதல்கள் ஏற்பட்டது நினைவிருக்கலாம். இன்றளவும் இந்துக்களின் பயன்பாட்டில் இருந்துவரும் இடம் தொடர்பாக தற்போதும்  பிரச்சினை இருந்துவருவது நாம் அறிந்த ஒன்று.

இந்த நிலையில் விபத்தில் மரணமடைந்த சபியா நினைவாக வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலையரங்கம் அமைக்கும் இடத்தில் ஒருசாராருக்கு சார்பாக மாவட்ட நிர்வாகம் நடந்து கொள்வதாக இந்துக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. அரசுக்கு சொந்தமான ஒரு பள்ளியில் மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடந்துகொள்ளவேண்டும் என்பதே வ.களத்தூர் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...

பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை பெற பொதுமக்கள் தனியார் நிறுவனங்களை நாட வேண்டாம் என வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து இப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பாஸ்போர்ட் தொர்பான அனைத்து சேவைகளும், www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலம் நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தனியார் இணையதளங்கள் மற்றும் பயண முகவர்கள், தாங்கள் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்க அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளதாக கூறி வருவதாக தெரிகிறது.
 வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் தொடர்பான பணிகளை மேற்கொள்ள தனியார் யாருக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பாஸ்போர்ட் தொடர்பான பணிகளுக்கு தனியாரிடம் சென்று அதில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட விóண்ணப்பதாரரே பொறுப்பாவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது v.kalathur seithi .

டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தகுதி தேர்வு (டிஇடி) எழுத வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து 2011ல் தமிழகத்தில் டிஇடி தேர்வு நடத்தி அதில் 150க்கு 90 மதிப்பெண் பெறுவோர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த டிஇடி தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பின்னர் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன்படி 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்டவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘‘பிளஸ் 2, டிடிஎட், டிஇஎட், பட்டப் படிப்பு, பி.எட், டிஇடி ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு தனித்தனியாக அறிவியல் பூர்வமாக வெயிட்டேஜ் வழங்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, தற்போது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க மொத்தம் 100 மதிப்பெண் கணக்கிடப்படும். அதில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு 15, டிடிஎட், டிஇஎட் தேர்வு மதிப்பெண்ணுக்கு 25, டிஇடி தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது. அதேபோல பட்டதாரி ஆசிரியர்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். அதில் பிளஸ் 2 தேர்வுக்கு 10, பட்டப் படிப்புக்கு 15, பிஎட் தேர்வுக்கு 15, டிஇடி தேர்வுக்கு 60 என மதிப்பெண்கள் வழங்கப்படும். இதற்கான பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. தற்போது 73 ஆயிரம் பேர் புதிய வெயிட்டேஜ் முறையின் கீழ் மதிப்பெண் பெறுவார்கள்.

புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது குறித்து பட்டதாரி சங்கங்கள் சார்பில் கூறப்படுவதாவது:

டிஇடி தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கு பொதுப் பிரிவினர் குறைந்த பட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 5 சதவீத தளர்வின்படி எஸ்சி எஸ்டி பிரிவினர் உள்ளிட்டவர்கள் குறைந்தபட்சம் 82 மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். 5 சதவீத தளர்வு பெற்றவர்கள், புதிய வெயிட்டேஜ் முறைப்படி 49.20 மதிப்பெண்கள் டிஇடி தேர்வில் பெறுகின்றனர். ஆனால் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் உள்ளிட்ட படிப்புகளில் குறைந்த பட்சம் தலா 5 மதிப்பெண்கள் வீதம் பெற்றால் தான் அவர்கள் புதிய வெயிட்டேஜில் 100க்கு 64 புள்ளிகளாவது  பெறுவார்கள்.

மேலும், 90 மதிப்பெண்கள் பெற்ற பொதுப் பிரிவினர் (‘எஸ்’ சதவீதப்படி) 54 புள்ளிகள் பெறுவார்கள். மற்ற படிப்புகளில் குறைந்த பட்சம் தலா 5 மதிப்பெண்கள் பெற்றால்தான் அவர்கள் 100க்கு 69 புள்ளிகளை நெருங்குவார்கள். இதன்படி பார்த்தால் 5 சதவீத தளர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், பொதுப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும் ஏறத்தாழ சம அளவு புள்ளிகளை பெறும் நிலை ஏற்படுகிறது. இதனால் 73 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறும் தகுதி பெறுகிறார்கள். ஆனால், மொத்தம் உள்ள 15 ஆயிரம் பணியிடங்களை இன சுழற்சி முறையில் பிரித்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

அதனால் ரேங்க் பட்டியலில் இன சுழற்சி வாரியாக முதலில் வருவோருக்கே பணி நியமனம் கிடைக்கும். மீதம் உள்ள சுமார் 58 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை. பணி வாய்ப்பு இழந்தவர்கள் மறுமுறையும் தேர்வு எழுத வேண்டுமா அல்லது அவர்களுக்கு அடுத்து வரும் காலிப் பணியிடங்களில் நியமனம் வழங்கப்படுமா என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்க வேண்டும்.
இவ்வாறு பட்டதாரிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன v.kalathur seithi.

Thursday 5 June 2014


பிரதமர் மோடி, அனைவரும் வெறுக்கும் தன்மையில் இருந்து தன்னை நவீனத்துவம் மற்றும் வளர்ச்சியின் அவதாரமாக மாற்றிக் கொண்டுள்ளார் என காங்கிரஸ் தலைவர் சசிதரூர் மோடியை வெகுவாக பாராட்டி உள்ளார். தி ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கையில் தான் எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோடி பக்கம் சாயும் காங்கிரஸ் : அனைவரின் குற்றச்சாட்டுக்களுக்கும், வெறுப்புக்கும் ஆளான மோடி, தற்போது நவீனத்துவம் மற்றும் வளர்ச்சியின் அவதாரமாக திகழும் வகையில் தன்னை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளார். தனது முரட்டு தனமாக பிடிவாதத்தின் காரணமாக காங்கிரஸ் அவருடன் ஒத்துப் போக தவறிவிட்டது; இந்து மதவெறி கட்சி என்ற வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பா.ஜ.,வை ஆட்சி அமைக்கும் தகுதி பெற்ற தன்மையுடைய கட்சி என்ற இடத்திற்கு கொண்டு சென்றவர் மோடி; பா.ஜ., வின் மொழியையும், தன்மையையும் மாற்றி அமைத்துள்ளார் மோடி; மோதல்கள், பிரச்னைகள் ஆகியவற்றின் அப்பாற்பட்ட பாதையில் மோடி பயணிக்க துவங்கி விட்டார்; இந்தியாவில் மதரீதியாக சிறுபான்மையினராக உள்ள மக்கள் தங்களுக்கு எதிரானவர்களை கண்டு கொள்வார்கள்; அவர்களின் விமர்சனங்களுடன் நட்பு வைத்துக் கொள்வர். இவ்வாறு சசிதரூர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி அரசுக்கு வரவேற்பு: நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சசிதரூர், நாங்கள் அரசிடம் இருந்து இணக்கமான நிலையை கோரியதற்கு அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது; நாங்கள் எதிர்க்கட்சி தரப்பில் இருப்பதால் அரசு ஒப்புதல் அளிக்கும் விவகாரங்களை கண்மூடித்தனமாகவும், பிடிவாத போக்குடனும் எதிர்க்க மாட்டோம்; தனக்கு ஓட்டளிக்காதவர்களாக இருந்தாலும் அனைத்து இந்தியர்களுக்கும் தான் பிரதமராக இருப்பேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்; இது போன்றதொரு வார்த்தைகள் அவரிடம் இருந்து வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை; அநேகமாக மோடி தனது 2ம் பகுதியில் இறங்கி உள்ளார்; ஆனால் மோடியின் முதல் பாகம் மீண்டும் திரும்புமானால், பிரிவினையை ஏற்படுத்துவது போன்று அவரோ அல்லது அவரது அரசோ செய்தால் அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் v.kalathur seithi .

-தினமலர்.

Sunday 1 June 2014


 வ.களத்தூரில் குறைந்த மின்னழுத்தத்தால் கூடுதல் மின் இணைப்பு வழங்கமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் விவசாயம் மற்றும் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெறுவதில் நம் பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கவேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வ.களத்தூர் பகுதியில் துணைமின் நிலையம் அமைக்க அரசு முடிவுசெய்துள்ளது.

துணை மின் நிலையம் அமைய உள்ள மற்ற இடங்கள்:

பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்த மின்னழுத்தத்தால் ஏற்படும் மின்வெட்டுப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணவும், கூடுதல் மின்இணைப்புகள் வழங்கிடவும் ஏதுவாக பேரளி, எசனை, பென்னக்கோணம், வெண்மணி, அ.மேட்டூர், நன்னை, அசூர், கூட லூர், மேட்டுப்பாளையம், நெற்குணம், வ.களத்தூர், புதுக்குறிச்சி ஆகிய 12இடங்க ளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் துணைமின்நிலையங்கள் அமைக்க அரசுஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பூர்வாங்கப்பணிகள் தொடங்கி நடைபெறவுள்ளது v .kalathur seithi .


       பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கைமனுவில் பாண்டகாபாடி வரை தடுப்பணை கட்ட கொரிகைவிடுக்கப்பட்டுள்ளது. நம் வ.களத்தூர் கல்லாற்று பகுதிக்கு, நம் ஊரைச்சேர்ந்த மக்கள் மனு கொடுத்தால் மட்டுமே கல்லாற்றில் மீதம் மிஞ்சியிருக்கும் மணலை காக்க முடியும் என்பதோடு, கல்லாற்றை நம்பி போர்வெல் அமைத்திருக்கும் விவசாயிகள்  மற்றும் கல்லாறை நம்பி குடிநீர் போர்வெல் அமைத்திருக்கும் வ.களத்தூர் பஞ்சாயத்து நிர்வாகமும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்தால்  மட்டுமே இனி வரும் காலங்களில் நம் கிராமத்தின் குடிநீர் தேவையைநிறைவேற்றமுடியும் v.kalathur seithi .

கோரிக்கை மனுவின் விபரம்...

இதுகுறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமதுவிடம் அளித்த மனு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அரும்பாவூர், பூலாம்பாடி, தொண்டமாந்துறை, வெங்கலம், அன்னமங்கலம், எசனை, வெங்கனூர், பில்லாங்குளம் ஆகிய ஏரிகளில் வரத்து வாய்க்கால்கள் மற்றும் அருகிலுள்ள குளம், குட்டைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும். மலையாளப்பட்டி சின்னமுட்டுலு பகுதியில், பச்சைமலையிலிருந்து உற்பத்தியாகி வரும் கல்லாற்றின் குறுக்கே வெண்பாவூர், கிருஷ்ணாபுரம், வெங்கலம், பாண்டகப்பாடி ஆகிய கிராமங்களில் தடுப்பணைகள் கட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட பகுதிகளில் தடுப்பணைகள் கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், கிணறுகளில் நீரூற்று பெருகி விவசாயத்துக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன் கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.