Tuesday 29 September 2020

 வ.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் வழக்கறிஞர் பிரபு  மீது விமர்சனம் என்பது,  அவர் சரி பாதி அளவு இந்துக்கள் இருந்தும் இந்துக்கள் இடம் ஓட்டே கேட்காமல் , இஸ்லாமியர்களின் பேராதரவை மட்டும்  பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட போதே ஆரம்பித்துவிட்டது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல் பட போகிறார் என்று எண்ணிய வேளையில் முன்பிருந்த ஊராட்சி தலைவர்களின் ஊராட்சி பணிகளை விட சிறப்பாகவே செயல்பட்டு வருவதாகவே பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.

ஆனால் இவரின் செயல் பாடுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்... 

இந்து மத கடவுள்களை கேலி செய்வது என்பது இவருக்கு இயல்பான ஒன்று என்பதும், இஸ்லாமியர்களின் பண்டிகை என்றால் ஜமாஅத் தை தேடி போய் வாழ்த்துவதும் காணக்கூடியதாக உள்ளது... செய்நன்றி கடன் போல 




அடுத்து இவரின் சாதிய கண்ணோட்டம்... இவரின் முகநூல் பக்கங்களின் விவாதங்கள் சொல்லிவிடுகிறது இவர் எப்படிப்பட்டவர் என்று... அதில் ஒரு சிறு sample... வ.களத்தூர் ஊராட்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை வம்புக்கு இழுப்பது போல் உள்ளது இவரின் விவாதம். ஏற்கனவே மத மோதல்களால் தவிக்கும் வ.களத்தூர் இவரால் சாதி மோதல்களும் ஆரம்பித்து விடும் போல..



கடைசியாக சமீபத்திய மோதல் தொடர்பானது. வழக்கறிஞர் பிரபுக்கும், திமுக ஊராட்சி கிளை செயலாளர் செல்வராஜ் என்பவருக்குமான மோதல் என்பது முகநூலில் கடந்த ஆறு மாதமாக இருந்தது தேரடி திடலில் நேரடி மோதலாக அரங்கேறி யது. ஆனால் பிரபுவும் திமுக அனுதாபி என்பது கூடுதல் தகவல். 

இங்கு கவனிக்க தக்கது என்ன வென்றால் தன்னை எதிர்க்கும் எவரின் மீதும் வன்கொடுமை சட்டம் பாயும் என வழக்கறிஞர் தொடர்ந்து சொல்லி வருவது தான், மேலும் ஒரு விவாதத்தில் வ.களத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் செல்வராஜை நுழைய முடியாது என கூறுவது உச்ச பட்ச அராஜகம்... இவரின் சொந்த வீடு என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ..


 


அதே போல் இன்னொரு விவாதத்தில் இதே திமுக செல்வராஜை மறைமுகமாக குறிப்பிட்டு (செல்வராஜ் கட்டையன் எனவும் பொதுவாக ஊராரால் அழைக்கப்படுகிறார்) , மிரட்டல் விடுக்கும் தொனியில் பதிவிட்டிருப்பதும் கவனிக்க தக்கது.. இந்த முகநூல் பதிவுகளை கோர்ட்டில் வைத்தே செல்வராஜ் மீதான வங்கொடுமை வழக்கை ரத்து செய்ய வைக்க முடியும். செல்வராஜ் கிட்ட யாராவது சொல்லுங்கப்பு.

இறுதியாக நமக்கு அச்சம் என்ன வென்றால் நாம் ஏதாவது வ.களத்தூர் ஊராட்சி அலுவலகம் சென்று கேள்வி கேட்டால் நம் மீதும் வன்கொடுமை வழக்கு பாயுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது... உங்களுக்குமா... 

     வ.களத்தூர் ஊராட்சி மன்ற தேர்தலில் இஸ்லாமியர்களின் பெரும்பான்மையான ஆதரவோடு வழக்கறிஞர் பிரபு என்பவர் வெற்றி பெற்று தற்பொழுது தலைவராக உள்ளார். இஸ்லாமியர்களின் ஆதரவோடு வெற்றி பெற்று வந்த காரணத்தால் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகிறார் என்ற புகார் மக்கள் மத்தியில் ஏற்கனவே உள்ளது. இந்த நிலையில் வ.களத்தூர் திமுக கிளை செயலாளராக உள்ள செல்வராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஊராட்சி நிதி விவாகரங்கள் தொடர்பாக மனு அளித்துள்ளார்( மனு நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது).


 இதன் காரணமாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ள நிலையில் , நேற்று வ.களத்தூர் தேரடி திடலில் செல்வராஜை பிரபு தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த செல்வராஜ் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் வழக்கறிஞர் பிரபு தரப்போ தன்னை சாதி பெயர் சொல்லி திட்டி யதாக கூறி வ.களத்தூர் காவல்துறை யில் வழக்கு பதிந்துள்ளதாக தெரிகிறது. பிரபு மீது கொலை முயற்சி வழக்கு படுகியப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


இது தொடர்பான செய்திகள் இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ளது. 






Monday 15 June 2020


தலைப்பைச் சேருங்கள்

   பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 145 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி பெரம்பலூர், திருச்சி, சென்னை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று, குணமடைந்த 143 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 2 பேர் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவர் வீதம் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரை சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு கடந்த 10-ந் தேதி இருமல், காய்ச்சல் இருந்ததாம். இதையடுத்து அவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மூதாட்டி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், எவ்வித அறிகுறியும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

http://www.dailythanthi.com/News/Districts/2020/06/15001952/Corona-for-another-in-Perambalur-district.vpf