Tuesday 29 September 2020

     வ.களத்தூர் ஊராட்சி மன்ற தேர்தலில் இஸ்லாமியர்களின் பெரும்பான்மையான ஆதரவோடு வழக்கறிஞர் பிரபு என்பவர் வெற்றி பெற்று தற்பொழுது தலைவராக உள்ளார். இஸ்லாமியர்களின் ஆதரவோடு வெற்றி பெற்று வந்த காரணத்தால் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகிறார் என்ற புகார் மக்கள் மத்தியில் ஏற்கனவே உள்ளது. இந்த நிலையில் வ.களத்தூர் திமுக கிளை செயலாளராக உள்ள செல்வராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஊராட்சி நிதி விவாகரங்கள் தொடர்பாக மனு அளித்துள்ளார்( மனு நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது).


 இதன் காரணமாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ள நிலையில் , நேற்று வ.களத்தூர் தேரடி திடலில் செல்வராஜை பிரபு தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த செல்வராஜ் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் வழக்கறிஞர் பிரபு தரப்போ தன்னை சாதி பெயர் சொல்லி திட்டி யதாக கூறி வ.களத்தூர் காவல்துறை யில் வழக்கு பதிந்துள்ளதாக தெரிகிறது. பிரபு மீது கொலை முயற்சி வழக்கு படுகியப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


இது தொடர்பான செய்திகள் இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ளது. 






0 comments:

Post a Comment