Saturday 15 March 2014

vkalathur பெரம்பலூர் அடுத்த சமத்துவப்புரம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வ.களத்தூர் கைகாட்டி  பிரிவு ரோட்டில் குறுக்கே உயர் அழுத்த மும்முனை மின் கம்பி செல்கிறது.
 இந்த மின்கம்பி நேற்று முன்தினம் இரவு எதிர்பாராதவிதமாக திடீ ரென அறுந்து விழுந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தினர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இதுகுறித்து மின் வாரியத்தினருக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக மின்விநியோகத்தை துண்டித்து விட்டு அப்பகுதிக்கு விரைந்து வந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இழுத்துக்கட்டப்பட்டது. அதன்பின் போக்குவரத்து சீரடைந்தது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் பெரிதும் அவதிப்பட்டனர்.


Friday 14 March 2014

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் குறித்து பல்வேறு கருத்துகணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்டிடிவி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டிடிவி தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், தில்லி, குஜராத் உட்பட 13 மாநிலங்களில் நடத்திய கருத்துக்கணிப்பு குறித்து வெளியிட்டுள்ளது.
அதில் மொத்தம் உள்ள 319 தொகுதியில் பாஜக கூட்டணிக்கு 166 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 52 இடங்களும் கிடைக்ககூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பாஜக மட்டும் 146 தொகுதியில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 40 இடங்களில் வெல்லும் என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதியில், அதிமுகவிற்கு 27 இடங்களும், திமுகவிற்கு 10 இடங்களும், மற்றவர்களுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 இடங்களில் 32 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், இடது சாரிகள் 9 தொகுதிகளில் வெல்லக்கூடும் என்றும், காங்கிரஸ் ஒரு தொகுதி கிடைக்ககூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா(28)- பாஜக=20, காங்கிரஸ்-6, மஜத-2
தமிழ்நாடு(39)- பாஜக=0, காங்கிரஸ்-0 மற்றவர்கள்-39
மேற்குவங்கம்(42)- பாஜக=0, காங்கிரஸ்-01.. இடதுசாரி-9. திரிணாமுல்-32
ராஜஸ்தான்(25)-பாஜக=19, காங்கிரஸ்05 மற்றவர்கள்-01
தில்லி(7)- பாஜக=2, காங்கிரஸ்-1, ஆம் ஆத்மி-04
ஹரியானா(10)- பாஜக=7, காங்கிரஸ்-3 மற்றவர்கள்-0
மகாராஷ்ட்ரா(48)- பாஜக=33, காங்கிரஸ்-12 மற்றவர்கள்-3
சட்டீஸ்கர்(11)- பாஜக=9, காங்கிரஸ்-02 மற்றவர்கள்-0
குஜராத்(26- பாஜக=23, காங்கிரஸ்-3, மற்றவர்கள்-0
ஜார்கண்ட் (14)- பாஜக=6, காங்கிரஸ்-4 மற்றவர்கள்-4
பீகார்(40- பாஜக=23, காங்கிரஸ்-11 மற்றவர்கள்-6

நன்றி-தினமணி.

Thursday 13 March 2014

வாக்குக்கு பணம் கொடுப்பது தொடர்பான விடியோ அல்லது புகைப்படங்கள் அடங்கிய சாட்சி ஆவணங்களை அனுப்ப மாவட்டம்தோறும் தனி மின்னஞ்சல் (இ-மெயில்) முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன. வாக்களிக்க பணம் கொடுப்பது தொடர்பாக இதுவரை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், புகைப்படங்கள் உள்பட இன்னபிற ஆவணங்கள் இருப்பின் அவற்றை இந்த இ-மெயிலில் அனுப்பி வைக்கலாம். இந்த சாட்சி ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
தமிழகத்தில் வாக்களிக்க பணம் கொடுப்பதைத் தடுக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக தனி கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டாலும், குற்றச்செயல்கள் புரிவோரைத் தண்டிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இருந்தன.
ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கட்சியினர் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்தப் புகார்களை ஆதாரத்துடன் நிரூபிக்கும் வகையில், அதற்கான சாட்சி ஆவணங்களை இ-மெயிலில் (மின்னஞ்சல்) அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
முகவரிகள் என்ன? மாவட்ட வாரியாக, 32 மாவட்டங்களுக்கும் இ-மெயில் வெளியிடப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, சென்னை மாவட்டத்துக்கு chennai2014complaints@gmail.com என்ற இ-மெயில் தரப்பட்டுள்ளது. இதேபோன்று, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதனுடைய பெயருடன் 2014complaints@gmail.com என்ற வாசகத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை: இ-மெயில் மூலமாகத் தெரிவிக்கப்படும் புகார்கள் மற்றும் அதற்கான சாட்சி ஆவணங்களை பரிசீலித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
இதன் மூலம், வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பங்களிப்ப்பு-தினமணி.
பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான பறக்கும் படை வட்டாட்சியர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியல் வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், தொழுதூரில் இரும்புகடை வியாபாரம் செய்து வரும் சையது முஸ்தபா மகன் அபிபுல்லா உரிய ஆவணங்களின்றி ரூ. 1.46 லட்சம் தொகையை கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.

நன்றி-தினமணி.

Wednesday 12 March 2014

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின்  மறைந்த முன்னாள் தலைவர் சுதர்ஷன்ஜி அவர்கள் வழிகாட்டுதலிலும்,  சங்கத்தின் மூத்த பிரசாரகர் இந்திரேஷ் குமார் அவர்களின் அயரா உழைப்பாலும் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (முஸ்லிம் தேசிய பேரவை)  என்ற அமைப்பு 2002ம் வருடம் உருவாகியது.  கடந்த  12 ஆண்டுகளாக தேசபக்தியும்  இந்தியப் பண்பாட்டு உணர்வும் கொண்ட  முஸ்லிம் சமுதாய மக்களிடையே சிறப்புற செயல்பட்டு வளர்ந்து வருகிறது.  பயங்கரவாதத்திற்கு  எதிராகவும்,  பசுப் பாதுகாப்பை வலியுறுத்தியும்  இந்த அமைப்பு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது.
கீழ்க்கண்ட கட்டுரையில் இந்த அமைப்பு கடந்து வந்த பாதையையும் அதன் செயல்பாட்டுத் திட்டங்களையும் விவரிக்கிறார் இந்திரேஷ் குமார்.
இந்த அமைப்பின் இணைய தளம்:  http://www.muslimrashtriyamanch.org/
(பெரிதாக்க படங்களின் மேல் க்ளிக் செய்யவும்) 


நன்றி-http://www.tamilhindu.com/2014/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/
பெரம்பலூர், :  பாரம்பரியத்தை விளக்கும் வகையில் பெரம்பலூர் சங்குபேட்டையில் 3 நாட்களாக நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை பார்வையாளர்கள் கண்டு வியந்தனர்.
பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை அருகே உள்ள திருவாலந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன். சிறுவயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வமிக்க இவர் கல்லூரியில் படித்த போது நண்பர்களின் ஊக்குவிப்பால் இதுவரை 400க்கும் மேற்பட்ட பாரம்பரிய ஓவியங்களை வரைந்துள்ளார்.
இந்நிலையில், கலை பண்பாட்டுத் துறை ஆலோசனையின் பேரில், தனது ஓவியங்களை முதன்முதலில் தனது சொந்த மாவட்டமான பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் காட்சிக்கு வைத்தார். இதில் மருத்துவம், கல்வி, சுகாதாரம், குடிநீர் தேவை, மின்சாரம், எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களும், புகைப்படங்களும், மற்றும் பாரம்பரிய ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கண்டு வியந்தனர். இதைத் தொடர்ந்து, குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கிய ஓவியக் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது.
தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவால் ஒளிப்பதிவாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வரும் மக்களவை தேர்தல் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் ஒளிப்பதிவாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படைக்குழு, வாகனத் தணிக்கை குழு மற்றும் தேர்தல் செலவு கண்காணிப்புக் குழு உள்ளிட்ட குழுக்களில் தற்போது 23 தனியார் ஒளிப்பதிவாளர்கள் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை, கடந்த 5-ம் தேதி முதல் பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, தேர்தல் குழு ஒன்றுக்கு ஒரு ஒளிப்பதிவாளர் வீதம் நாள்தோறும் நடைபெறும் வாகனச் சோதனை, செலவுக் கணக்கு உள்ளிட்ட நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் புதிய உத்தரவு ஒன்று செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது. அதில், தேர்தல் பறக்கும் படைக் குழு, வாகனத் தணிக்கை குழு மற்றும் தேர்தல் செலவைக் கண்காணிக்கும் குழு உள்ளிட்ட குழுக்களில் பணிபுரியும் ஒளிப்பதிவாளர்கள் ஒரே விடியோ கேமராவை பயன்படுத்தி, நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 3 ஒளிப்பதிவாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை பதிவு செய்து தர வேண்டும், இதற்கு ஒரு கேமராவுக்கான வாடகை கட்டணம் மட்டுமே வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தனித்தனி கேமரா மூலம் நிகழ்ச்சிக்களை விடியோ பதிவு செய்து வந்த ஒளிப்பதிவாளர்கள், தேர்தல் ஆணையத்தின் இந்தப் புதிய உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கேமராவுக்கு வழங்கப்படும் வாடகை கட்டணத்தை 3 ஒளிப்பதிவாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் நலச்சங்க மாவட்டச் செயலர் அருண் கூறியது: கடந்த மக்களவைத் தேர்தலின்போது நாள் ஒன்றுக்கு ரூ. 2,100 வாடகையாக வழங்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ரூ. 2,500 தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தோம்.
இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணைய உத்தரவால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒளிப்பதிவாளர்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் சென்றால், ஒளிப்பதிவாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 750 முதல் ரூ. 1,000 வரை வழங்கப்படுகிறது. ஆனால் ஒளிப்பதிவாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கும் பணம் சம்பள தொகைக்குகூட கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், தேர்தல் ஆணையமும் இப்பிரச்னையில் தலையிட்டு தேர்தல் குழுக்களில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு தலா ரூ. 2,500 வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

நன்றி-தினமணி.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் பெரம்பலூர் மற்றும் குன்னம் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் மூடப்பட்டன.
பாராளுமன்ற தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தனிக்குழு உறுப்பினர்கள், பறக்கும் படை, வட் டாட்சியர்களுக்கான விளக்க கூட்டம் தேர்தல் நடத்தை விதி முறைகளை கண்காணிக்கும் அலுவலர் சிவக்குமார் தலைமையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சீல் வைப்பு
நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் கடுமையாக கண்காணிக்கப் பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரான வகையில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டும் பேனர்கள், கட்சி கொடிகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டும், வருகின்றன. தலைவர்களின் சிலைகள் துணிகளால் மறைக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் பெரம்பலூர் மற்றும் குன்னம் வட்டாட்சியர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
விதிமுறை நகல் புத்தகம்
மேலும். தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டரால் அமைக்கப்பட்ட சிறப்பு தனிக்குழு உறுப்பினர்கள், பறக்கும்படையினர் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு விதிமுறை நகல்கள் புத்தகமாக வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் அலுவலரும், கலெக்டரின் நேர்முக உதவியாளருமான (வளர்ச்சி) சிவக்குமார் புதிய விதிமுறைகள் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைவருக்கும் விரிவாக எடுத்துரைத்தார்.

நன்றி-தினத்தந்தி.
அமெரிக்காவில் அறிவியலில் சிறந்து விளங்குகிற மாணவர்களை தேர்வு செய்து இன்டெல் அறிவியல் திறன் கண்டறிவு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அந்த விருது வென்ற 10 மாணவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் ஆவார்கள். ஜார்ஜியாவை சேர்ந்த மாணவர் ஆனந்த் சீனிவாசன் விருது பட்டியலில் 8–வது இடத்தைப் பிடித்தார். 10–வது இடத்தை மேரிலாண்டை சேர்ந்த ஷாவுன் தத்தா கைப்பற்றினார். இந்த மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.12 லட்சம்) பரிசு வழங்கப்பட்டது. இரு மாணவர்களும் கணினி அறிவியல் துறையில் சாதனை படைத்துள்ளனர்.
சாண்டீகோவை சேர்ந்த அமெரிக்க மாணவர் எரிச் சென் விருதுப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். இந்த மாணவருக்கு ஒரு லட்சம் டாலர் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

நன்றி-தினத்தந்தி
vkalathur பெரம்பலூர் - ஆத்தூர் மாநில நெடுஞ்சாலையை வேப்பந்தட்டை யிலிருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் பேரையூர் கைகாட்டி வரை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வ.களத்தூர் மேட்டுச்சேரி முதல் கைகாட்டி வரை சாலையை அகலபடுத்தும் பணி பலமாதங்களாக நடைபெற்றுவருகிறது. சாலையை தோண்டி பலமாதங்களாக பல விபத்துக்களுக்கு காரணமாக இருந்த இந்த திட்டம் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.

Tuesday 11 March 2014

பெரம்பலூர், : கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 2 துணிகள் வாங்கினால் ஒரு துணி இலவசம் என்ற சிறப்பு விற்பனை திட்டம் இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டுத் துணி விற்பனையில் 50% கட்டணத்திற்கு காட்டன், பாலியஸ்டர் துணிகள் இலவசம் வழங்கும் புதிய திட்டமும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாரதாரத்தை மேம்படுத்த, 2 துணிகளை வாங்கினால் 1 துணி இலவசம் என்ற சிறப்பு விற்பனை திட்டம் கடந்த மாதம் 17ம் தேதி துவங்கியது. கடந்த 25 நாட்களில் ரூ.8 லட்சத்திற்கு துணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின், வாடிக்கையாளர்களின் அதிகப்படியான ஆதரவைத் தொடர்ந்து இச் சலுகை விலை விற்பனை இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று முதல் பட்டுத் துணிகள் விற்பனையில் புதிய சலுகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, ஒரு பட்டுத் துணி வாங்கினால் அதன் (50 சதவீத) பாதி விலைக்கு காட்டன் அல்லது பாலியஸ்டர் துணிகள் வழங்கப்படும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ரூ.4 ஆயிரத்திற்கு ஒரு பட்டுச் சேலை வாங்கினால் அவர்களுக்கு ரூ2ஆயிரத்திற்கு காட்டன், பாலியஸ்டர் துணிகள் கூடுதலாக வழங்கப்படும். இத் திட்டமும் இம்மாதம் 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி-தினகரன்.

Monday 10 March 2014

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 8 ஆயிரத்து 527 பேர் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
590 வாக்குச்சாவடி மையங்கள்
நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 590 வாக்குச் சாவடி மையங்களில் காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடை பெற்றது. இந்த முகாம்க ளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், தொடர்பான படிவங்களை பெற்று பூர்த்தி செய்வதற்கு அறிவுறுத்தப் பட்டது.
அதன்படி, பெரம்பலூர் வட்டத்தில் 1,042 ஆண் களும், 1,334 பெண்களும், வேப்பந் தட்டை வட்டத்தில் 721 ஆண்களும், 849 பெண்களும், குன்னம் வட்டத்தில் 820 ஆண்களும், 1,019 பெண்களும், ஆலத்தூர் வட்டத்தில் 1,295 ஆண்களும், 1,805 பெண்களும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை வட்டத் தில் 649 ஆண்களும், 723 பெண்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தனர்.
8,527 பேர்
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் உள்ள 590 வாக்குச்சாவடி மையங் களிலும், 3,832 ஆண்களும், 4,695 பெண்களும் என மொத்தம் 8,527 பேர் விண்ணப்பித்தனர்.
மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி-தினத்தந்தி.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிக்க 6 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தரேஸ் அஹமது ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருவாய் மற்றும் காவல் துறையினர் அடங்கிய பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வட்டாட்சியர்கள் செல்வராஜ் (9786672151), மனோன்மணி (9843673556), ரெங்கராஜ் (9047196204) ஆகியோரகள் தலைமையிலான குழுக்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வட்டாட்சியர்கள் கஜேந்திரன் (9443954674), தமிழரசி (9176639932), மணிவேலன் (9443647692) ஆகியோர் தலைமையிலான பறக்கும் படை குழுவினர், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


நன்றி-தினமணி.

Sunday 9 March 2014

பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் 152 பதற்றமான வாக்கு சாவடிகள் உள்ளன.
பதற்றமான வாக்குசாவடிகள்
பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் குளித்தலை, லால்குடி மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்., பெரம்பலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதி கள் அடங்கி யுள்ளன.
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் உள்ள 247 வாக்குச்சாவடிகளில் 17 வாக்குச்சாவடிகளும், லால் குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 232 வாக்குச்சாவடிகளில் 17 வாக்குச்சாவடிகளும், மண்ணச்சநல்லூர் சட்ட மன்றத் தொகுதியில் உள்ள 250 வாக்குச் சாவடிகளில் 10 வாக்குச்சாவடிகளும், முசிறி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 244 வாக்குச்சாவடிகளில் 15 வாக்குச்சாவடிகளும், துறையூர் சட்டமன்றத் தொகு தியில் உள்ள 247 வாக்குச் சாவடிகளில் 7 வாக்குச்சாவடிகளும், பெரம் பலூர் சட்டமன்றத் தொகுதி யில் உள்ள 297 வாக்குச் சாவ டிகளில் 86 வாக்குச் சாவடி களும் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள் என மொத்தம் 152 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்கு சாவடி களாக அறியப்பட்டுள் ளது.
குன்னம் தொகுதி
பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் உள்ள 293 வாக்குச்சாவடிகளில் 79 வாக்குச்சாவடிகள் பதற் றம் நிறைந்த வாக்குச் சாவடி களாக அறியப் பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை பெரம் பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான தரேஸ் அஹமது தெரிவித்துள் ளார்.

நன்றி-தினத்தந்தி.
கீழக்கரை: துபாய் மருத்துவமனையில் 9 மாதமாக கோமாவில் இருக்கும் தமிழருக்கு உதவ விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் ராமலிங்கம் (41). துபாயில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி, மகனுடன் சிதம்பரத்தில் வசிக்கிறார். மற்றொரு மகன், சில மாதங்களுக்கு முன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். நடராஜன் ராமலிங்கம் கடந்தாண்டு ஜூனில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்குச் சென் று விட்டார். தொடர்ந்து 9 மாதமாக கோமா நிலையிலேயே உள்ளார்.

மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் கோமா நிலையில் இருந்து இவர் மீளவில்லை. இதையடுத்து, இவரை தாயகம் கூட்டிச் செல்ல அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது. இவர் பணிபுரிந்து வரும் தனியார் நிறுவன நிர்வாகிகள், துபாயில் சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பினை அணுகினர். இவரது குடும்பம் ஏழ்மையின் காரணமாக வாடகை கொடுக்க கூட வசதியின்றி தெரிந்தவர்கள் வீட்டில் வசித்து வரும் நிலையில், அவரை வீட்டுக்கு கூட்டிச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் உள்ளனர்.தமிழக அரசு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மருத்துவமனையில் இவரை அனுமதித்து சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என துபாய் ஈமான் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

நன்றி-தினகரன்
புதுடெல்லி: பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம், அது பறிமுதல் செய்யப்படாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.  மக்களவை தேர்தல் தேதி கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. தேர்தலில் கருப்பு பண புழக்கத்தை தடை செய்யும் நோக்கத்தில் தேர்தல் செலவு கண்காணிப்பு குழு, பறக்கும் படை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அமைத்துள் ளது. இந்தக் குழுவினர் நாடு முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ணீ50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணம் எடுத்துச் செல்லப்பட்டால், அதற்கு உரிய ஆவணங்கள் உள் ளதா என தேர்தல் ஆணை யம் நியமித்த பறக்கும் படையினர் ஆய்வு செய்வர். ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 2 நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட சோதனையில் ஒரே நாளில் மொத்தம் ணீ1.15 கோடி சிக்கியது. இப்படி நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடிகள் சிக்கின.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘‘பணம் கொண்டு செல்வதில் கட்டுப்பாடு அரசியல் கட்சியினருக்கும், அவர்களிடம் பணி புரிபவர்களுக்கு மட்டுமே. வங்கியிலிருந்து பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது’’ என தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனாலும் திருமண செலவு, மருத்துவ செலவு, வர்த்தகம், சொத்து வாங்க அல்லது விற்ற மற்றும் பிற தேவைகளுக்காக பணத்தை எடுத்துச் செல்ல நேர்ந்தால் எப்படி கொண்டு செல்வது என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம் கூறியதாவது:

தேர்தல் நேரத்தில் பொது மக்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஆனால் அவற்றை இடைமறித்து, சந்தேகிக்கும் வகையில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினருக்கு உண்டு. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லப்பட்டால் அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என  பறக்கும் படையினர் ஆய்வு செய்வர். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லப்பட்டால், அது குறித்து வருமான வரித்துறையினரிடம் பறக்கும் படையினர் தகவல் தெரிவித்து அந்தப் பணத்தை ஒப்படைப்பர். வருமான வரித்துறையினரின் ஆய்வுக்குப் பின் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும். வெள்ளை பணமாக இருந்தால் எந்த கவலையும் இல்லாமல் எவ்வளவு பணத்தையும் பொதுமக்கள் கொண்டு செல்லலாம். இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நன்றி-தினகரன்.
கலைவாணன்
பெரம்பலூர் பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் இன்றுமுதல் திருவாலந்துரையையை சேர்ந்த நண்பர் கலைவாணன் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

பெரம்பலூர் சங்கு அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் திருவாளந்துறையைச் சேர்ந்த திரு. கலைவாணன் அவர்களின் ஓவியக் கண்காட்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது .

நம் கண்ணுக்கு தெரியாத , அறிமுகமில்லாதவர்களின் உழைப்பை , திறமையை அங்கீகரிக்கும் நாம், நம் மாவட்ட நண்பரின் திறமையை கண்டு விமர்சிக்கவாவது செல்வோம்.

இவர் சென்னையில் உள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறார். கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் படித்தவர்.

50 க்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்.

கோட்டோவியங்கள், மாடர்ன் ஆர்ட், தூரிகையின்றி கைகளால் மட்டுமே வரையப்பட்டது என்று பல்வேறு வகையாக இருக்கிறது இவரது ஓவியங்கள்.

பெரம்பலூரில் நடைபெறும் இது மாதிரியான ஓவியக் கண்காட்சியில் இந்த மாவட்ட ஓவியரின் படைப்புகளே இடம்பெறுவது சிறப்புக்குரியதே.

துர்கேஸ்வரி

கருவை கலைக்க சொல்லி கணவர் மிரட்டுகிறார் என அ.தி.மு.க., துணை மேயர் ஆசிக் மீரா மீது 8 மாத கர்ப்பிணி புகார் தெரிவித்துள்ளார்.

திருச்சியை சேர்ந்த, மறைந்த, அ.தி.மு.க., அமைச்சர், மரியம்பிச்சை மகன், ஆசிக் மீரா. அமைச்சர் மரியம்பிச்சை, எம்.எல்.ஏ., பதவியேற்பு விழாவுக்குச் செல்லும் வழியில், கார் விபத்தில் சிக்கி இறந்தார். அதையடுத்து, அ.தி.மு.க., தலைமையின் கருணைப் பார்வையால், ஆசிக் மீராவுக்கு, திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவி கிடைத்தது.

திருச்சி, சங்கிலியாண்டபுரம், மணல்வாரித்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த, ரஞ்ஜித் சிங் ராணா மகள், துர்கேஸ்வரி, 28. இவர் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, நேற்று, ஆசிக் மீரா மீது புகார் அளிக்க வந்தார்.

ஆசிக் மீரா
அவரது மனுவில் கூறியிருப்பதாவது: நானும், துணை மேயர் ஆசிக் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரது அப்பா, ஆசிக்கை துரத்தி விட்டார். அதனால், என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரது செலவுக்கு, வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்தேன். அவரால், மூன்று முறை கருவுற்றேன். "இப்போது குழந்தை வேண்டாம்' என, மூன்று முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார். அவரது அத்தை, மைமூன் நிஷாவின் மகள், சாஜிதா பேகத்தை திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி கேட்டபோது, "எங்கள் இஸ்லாம் மார்க்கத்தில், இரண்டாவது திருமணம் பெரிய விஷயம் இல்லை. கவலைப்படாதே... நீ தான் என் முதல் மனைவி' என்றார். அவர் மீதான நம்பிக்கையால் அமைதியாக இருந்தேன். மீண்டும் கருவுற்றேன். நண்பர்கள் மூன்று பேரை தூண்டிவிட்டு, 1 லட்ச ரூபாய் கொடுத்து, அவரது மாமியார், மைமூன் நிஷா, என்னை கொலை செய்ய முயற்சித்தார். மாமியார் பேச்சைக் கேட்டு, கருவை கலைக்கும்படி மிரட்டியதால், மனமுடைந்து, விஷம் அருந்தினேன். என் தாய் மதுமதி அளித்த புகார்படி, தாங்கள் (கமிஷனர்) நடத்திய பேச்சில், தனிக்குடித்தனம் வைத்து, பார்த்துக் கொள்வதாக ஆசிக் எழுதிக் கொடுத்தார். விஷமருந்தியதால், நான்காவது முறை கரு கலைந்தது. தனிக்குடித்தனம் சென்ற பிறகு, மீண்டும் கருவுற்றேன். எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன். வாரிசு பிரச்னை வரும் எனக் கருதி, அவரது மாமியார், என் கருவை கலைக்கும்படி மிரட்டுகிறார்.
"நீ தான் என் முதல் மனைவி' என, நம்பவைத்து, நான்கைந்து முறை கர்ப்பமாக்கி, மாமியார் மூலம் என் கருவை கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும், என் கணவர், ஆசிக் மீரா, அவரது மாமியார் மைமூன் நிஷா மற்றும் நண்பர்கள் மூன்று பேர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி-https://www.facebook.com/jananayagam
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட அன்றே தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது . அதன்படி கட்சிக்கொடி , சுவர்விளம்பரங்கள், விளம்பர பதாகைகள் போன்ற அனைத்தும் அகற்றப்படவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி வ.களத்தூரில் உள்ள அரசியல் கட்சி தொடர்பான அனைத்து அடையாளங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இதன்படி வ.களத்தூர் தேரடி திடல் அருகே உள்ள அரசியல் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
vkalathur கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட காட்சி
வ.களத்தூர் கல்லாற்று பாலத்தில் வரையப்பட்ட கட்சி விளம்பரங்கள் வெள்ளையடிக்கப்பட்டு மறைக்கப்பட்டன.
கலைவாணன்

 திருவாலந்துரையை சேர்ந்த நண்பர் கலைவாணன் வரைந்த ஓவியங்கள் பெரம்பலூர் சங்கு அருகே இன்று மாலை வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அருகில் இருக்கும் ஊர் நண்பரின்  திறமையை கண்டு பாராட்ட நாம் தவறிவிட்டோம் என்பது வருத்தத்திற்குரியது.


பெரம்பலூர் சங்கு அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் திருவாளந்துறையைச் சேர்ந்த திரு. கலைவாணன் அவர்களின் ஓவியக் கண்காட்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது .

இவர் சென்னையில் உள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறார். கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் படித்தவர்.

50 க்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்.

கோட்டோவியங்கள், மாடர்ன் ஆர்ட், தூரிகையின்றி கைகளால் மட்டுமே வரையப்பட்டது என்று பல்வேறு வகையாக இருக்கிறது இவரது ஓவியங்கள்.

பெரம்பலூரில் நடைபெறும் இது மாதிரியான ஓவியக் கண்காட்சியில் இந்த மாவட்ட ஓவியரின் படைப்புகளே இடம்பெறுவது சிறப்புக்குரியதே.



vkalathur வ.களத்தூர் மக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்கவும் புதிதாக பெயர் சேர்க்கவும் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்றுவருகிறது. இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுவதால் விரைந்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும் .
 பதினெட்டு வயது நிரம்பியவர்கள் ரேசன் கார்டு , இரண்டு பாஸ்போர்ட் அளவு உள்ள போட்டோ மற்றும் பத்தாவது மதிப்பெண் பட்டியல் அல்லது பிறப்பு சான்றிதழின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து கொடுக்க வேண்டும். 

      முன்பு பட்டியலில் இருந்து தற்போது விடுபட்டவர்கள் வாக்கு சாவடியில் வழங்கப்படும் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 
      இம்முகாமில் விண்ணப்பிப்பவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதால் விரைந்து வாக்குச்சாவடிக்கு செல்வீர்.