Sunday 9 March 2014

vkalathur வ.களத்தூர் மக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்கவும் புதிதாக பெயர் சேர்க்கவும் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்றுவருகிறது. இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுவதால் விரைந்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும் .
 பதினெட்டு வயது நிரம்பியவர்கள் ரேசன் கார்டு , இரண்டு பாஸ்போர்ட் அளவு உள்ள போட்டோ மற்றும் பத்தாவது மதிப்பெண் பட்டியல் அல்லது பிறப்பு சான்றிதழின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து கொடுக்க வேண்டும். 

      முன்பு பட்டியலில் இருந்து தற்போது விடுபட்டவர்கள் வாக்கு சாவடியில் வழங்கப்படும் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 
      இம்முகாமில் விண்ணப்பிப்பவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதால் விரைந்து வாக்குச்சாவடிக்கு செல்வீர்.

0 comments:

Post a Comment