Sunday 9 March 2014

துர்கேஸ்வரி

கருவை கலைக்க சொல்லி கணவர் மிரட்டுகிறார் என அ.தி.மு.க., துணை மேயர் ஆசிக் மீரா மீது 8 மாத கர்ப்பிணி புகார் தெரிவித்துள்ளார்.

திருச்சியை சேர்ந்த, மறைந்த, அ.தி.மு.க., அமைச்சர், மரியம்பிச்சை மகன், ஆசிக் மீரா. அமைச்சர் மரியம்பிச்சை, எம்.எல்.ஏ., பதவியேற்பு விழாவுக்குச் செல்லும் வழியில், கார் விபத்தில் சிக்கி இறந்தார். அதையடுத்து, அ.தி.மு.க., தலைமையின் கருணைப் பார்வையால், ஆசிக் மீராவுக்கு, திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவி கிடைத்தது.

திருச்சி, சங்கிலியாண்டபுரம், மணல்வாரித்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த, ரஞ்ஜித் சிங் ராணா மகள், துர்கேஸ்வரி, 28. இவர் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, நேற்று, ஆசிக் மீரா மீது புகார் அளிக்க வந்தார்.

ஆசிக் மீரா
அவரது மனுவில் கூறியிருப்பதாவது: நானும், துணை மேயர் ஆசிக் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரது அப்பா, ஆசிக்கை துரத்தி விட்டார். அதனால், என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரது செலவுக்கு, வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்தேன். அவரால், மூன்று முறை கருவுற்றேன். "இப்போது குழந்தை வேண்டாம்' என, மூன்று முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார். அவரது அத்தை, மைமூன் நிஷாவின் மகள், சாஜிதா பேகத்தை திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி கேட்டபோது, "எங்கள் இஸ்லாம் மார்க்கத்தில், இரண்டாவது திருமணம் பெரிய விஷயம் இல்லை. கவலைப்படாதே... நீ தான் என் முதல் மனைவி' என்றார். அவர் மீதான நம்பிக்கையால் அமைதியாக இருந்தேன். மீண்டும் கருவுற்றேன். நண்பர்கள் மூன்று பேரை தூண்டிவிட்டு, 1 லட்ச ரூபாய் கொடுத்து, அவரது மாமியார், மைமூன் நிஷா, என்னை கொலை செய்ய முயற்சித்தார். மாமியார் பேச்சைக் கேட்டு, கருவை கலைக்கும்படி மிரட்டியதால், மனமுடைந்து, விஷம் அருந்தினேன். என் தாய் மதுமதி அளித்த புகார்படி, தாங்கள் (கமிஷனர்) நடத்திய பேச்சில், தனிக்குடித்தனம் வைத்து, பார்த்துக் கொள்வதாக ஆசிக் எழுதிக் கொடுத்தார். விஷமருந்தியதால், நான்காவது முறை கரு கலைந்தது. தனிக்குடித்தனம் சென்ற பிறகு, மீண்டும் கருவுற்றேன். எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன். வாரிசு பிரச்னை வரும் எனக் கருதி, அவரது மாமியார், என் கருவை கலைக்கும்படி மிரட்டுகிறார்.
"நீ தான் என் முதல் மனைவி' என, நம்பவைத்து, நான்கைந்து முறை கர்ப்பமாக்கி, மாமியார் மூலம் என் கருவை கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும், என் கணவர், ஆசிக் மீரா, அவரது மாமியார் மைமூன் நிஷா மற்றும் நண்பர்கள் மூன்று பேர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி-https://www.facebook.com/jananayagam

0 comments:

Post a Comment