Saturday 26 April 2014


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 9 மாத காலம் பதவி வகித்த சதாசிவம் வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றார்.
இதையடுத்து இப்பதவிக்கு ராஜோந்திர மால் லோதா என்பவர் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று பொறுப்பேற்க உள்ளார். லோதா, இதற்கு முன் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வாக்கு எண்ணிக்கை மே.16-ம் தேதி வரை தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அரசு நிர்வாகம் முடங்கிப் போய் மக்கள் பெரும் பாதிப்புள்ளாவார்கள் என சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஏப்.24-ம் தேதி நடைபெற்ற 2014 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக, தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட ஏப்.5-ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் பலவ்ேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த தேர்தல் நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் மே.28-ம் தேதி வரை இருக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை அமைச்சர்கள், அலுவலகம் செல்லலாம். அதிகாரிகளை சந்திக்கக்கூடாது. அலுவலகம் செல்ல மட்டுமே அரசு வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதிய அறிவிப்புகள் மற்றும் ஆணைகள் எதையும் அரசு பிறப்பிக்க கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலில் முறைகேடு ஏற்படாமல் இருக்க தேர்தல் ஆணையம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் ஏப்.24-ம் தேதியே தேர்தல் முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை வரை, வாக்குப் பெட்டிகளை பாதுகாக்கும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் அமைச்சர்கள் தொடர்பு கொள்ளக்கூடாது என தெரிவித்தால் அது நியாயமாக இருக்கும். ஆனால் மேலும் ஒரு மாதத்திற்கு இந்த கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளதால், அரசு நிர்வாயம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை தேர்தல் ஆணையம் முடக்கி வைப்பதற்கு சமமாகும். ஏற்கனவே ஒரு மாதத்திற்கு மேல் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போய் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஒரு மாதம் அரசு நிர்வாக முடங்கிப் போனால் பொதுமக்களுக்கு தான் பெரும் வேதனையை தரும். மக்கள் நலனுக்கு எதிரான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி.

Thursday 24 April 2014

 v.kalathur வ.களத்தூரில் இன்று நடைபெற்ற மக்களவைத்தேர்தலின் வாக்குப்பதிவு விபரம் வருமாறு....

1.பாகம் எண் – 90 ல் மொத்த வாக்காளர்கள் – 769  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.503

 1-நடுத்தெரு வார்டு 1
2-தெற்கு தெரு வார்டு 1


2.பாகம் எண் – 91 ல் மொத்த வாக்காளர்கள் – 668 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 422 

1-வி.களத்தூர் வடக்கு தெரு வார்டு 1
2-மில்லத் நகர் வார்டு 4
3-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
4-அக்கரகாரத்தெரு வார்டு 3


3.பாகம் எண் – 93 ல் மொத்த வாக்காளர்கள் – 940  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 604
 1-அக்கரகாரத்தெரு வார்டு 3


4.பாகம் எண் – 94 ல் மொத்த வாக்காளர்கள் – 1031  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 554
 1-மேலத் தெரு வார்டு 4
2-தெற்கு தெரு வார்டு 4
3-மேட்டுச் சேரி வார்டு 5
4-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2


5.பாகம் எண் – 95 ல் மொத்த வாக்காளர்கள் – 560  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 721
 1-காமராஜர் நகர் வார்டு 4
2-மில்லத்நகர்வார்டு 4
3-தெற்கு தெரு வார்டு 4


6.பாகம் எண் – 96 ல் - மொத்த வாக்காளர்கள் – 966  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 353 
1-வி.களத்தூர் பள்ளிவாசல் வீதி வார்டு 1,2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள் 


7.பாகம் எண் – 97 ல் - மொத்த வாக்காளர்கள் – 1113  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 825
 1-வண்ணாரம்பூண்டி ரேசன்தெரு வார்டு 4
2-மில்லத் நகர் வார்டு 4
3-வண்ணாரம்பூண்டி காலனிதெரு வார்டு 5


வ.களத்தூர் ஊராட்சியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 6863
பதிவாகிய வாக்குகளின் எண்ணிக்கை – 4619
இவற்றில் ஆண்கள் – 1959
பெண்கள் – 2660
மொத்தம்  - 4619


Wednesday 23 April 2014



பெரம்பலூர் மக்களவை தொகுதியைப் பொறுத்த அளவில் போட்டி என்பது திமுக வின் சீமானூர் பிரபு, அதிமுக வின் மருதைராஜா மற்றும் IJK ன் நிறுவனர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து இடையேதான் என்பது நாம் அறிந்த ஒன்று.....

சீமானூர் பிரபு முன்னாள் திமுக அமைச்சர் KN நேருவின் பினாமி என்பது நம்மில் பலர் அறிந்த ஒன்று. திமுக வைப் பொறுத்தவரை குறுநில மன்னர்கள் போல் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெரிய தலை இருக்கும். அப்பகுதிகளில் அவர்கள் வைத்ததுதான் திமுகவை பொறுத்தவரை சட்டம். திருச்சியில் நேரு குறுநில மன்னர் என்றால் வேலூரில் துரைமுருகன், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் , அவருக்கு பிறகு அவரது மகன் . இதுதான் திமுகவைப்பொருதவரை நிதர்சனம்.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்கையில் நேரு தனது குறுநில மன்னருக்கான கோட்டவில் பெற்ற சீட்டில் தான் அவரின் பினாமி சீமாநூர் பிரபு திமுக சார்பாக நிறுத்தப்பட்டிருக்கிறார். ஒரு பினாமி எந்த அளவுக்கு பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு நன்மை செய்துவிட முடியும் என்பதை நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். நேரு தனது சாம்ராஜ்யத்தை காக்க தேர்ந்தெடுத்த ஒரு பினாமி நமக்கு என்ன செய்துவிடமுடியும்...?

அடுத்த பிரதமர் பாஜகவின் நரேந்திர மோடி என்று உறுதிப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் திமுகவின் சீமானூர் பிரபு ஜெயித்தாலும் அதனால் பெரம்பலூர் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. ஏனெனில் எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகும் அவர் 2G பற்றி நாடாளுமன்றத்தில் கூச்சல் போடமுடியுமே தவிர நமக்கு எதுவும் செய்ய வாய்ப்பு இல்லை.

அதிமுக சார்பில் போட்டியிடும் மருதைராஜா அம்மாவை மீறி ஒரு வார்த்தைகூட பேசமுடியாது. இந்த லட்சணத்தில் எங்கே நமக்காக நாடாளுமன்றத்தில் பேசப்போகிறார்.. மேலும் அவரும் மோடி அரசின் அங்கமாக அமையப்போவது இல்லை.

பாரிவேந்தர் என்றழைக்கப்படும் பச்சமுத்து IJK கட்சிக்கு பாஜக கூட்டணியில் வழங்கப்பட்ட ஒரே ஒரு தொகுதியான பெரம்பலூரில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு வரும் முன்பே இவர் கல்வித்துறையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி காட்டியவர். இவர் பணம் சம்பாதிக்க கண்டிப்பாக வரவில்லை என்பது இவரின் சொத்து மதிப்பை பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.

வேறு என்ன நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்திருந்தாலும் அவர் பாஜக வின் தேர்தல் சின்னமான தாமரை யில் போட்டியிடுகிறார். அவர் வெற்றிபெற்றால் பாஜக MP யாகவே கருதப்படுவார். பாஜக ஆட்சிபீடத்தில் அமரும் வேளையில் அதன் MP யாக இருக்கும் பாரிவேந்தர் ஆளும் கட்சி MP என்ற முறையில் உரிமையுடன் அவர் பெரம்பலூர் தொகுதிமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கேட்டு பெறலாம்.

பாரிவேந்தரின் தனிப்பட்ட செல்வாக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதல், அடுத்த பிரதமர் மோடி வரை, அனைவரையும் தனது SRM பல்கலைகழக விழாக்களுக்கு அழைத்துவந்து தனிப்பட்டமுறையில் பேசும் செல்வாக்கு கொண்டவர். இத்தகைய செல்வாக்குடன் ஆளும் கட்சி MP என்ற உரிமையில் அவர் பெரம்பலூர் தொகுதிக்காக கேட்கும் எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றமுடியாதா என்ன.....?

சிந்தித்து வாக்களிப்போம் பெரம்பலூர் சொந்தங்களே.... நமக்கு தேவை, நேருவின் பினாமியா......? அம்மாவின் அடிமையா... அல்லது பாரிவேந்தரா...?

Tuesday 22 April 2014


v.kalathur அன்பான வ.களத்தூர் சொந்தங்களே...... நாளை நடக்க உள்ள மக்களவை தேர்தலில் நாம் வாக்களிக்க முக்கியமான விஷயம் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில்தான் நாம் வாக்களிக்க முடியும்.
 இந்த பட்டியல் pdf கோப்பில் உள்ளது... மேலும் தேர்தல் ஆணைய இணையதள  இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது... இணைப்பில் சொடுக்கி (click) செய்து பார்க்கவும்..........

1.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ) 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்.

1-நடுத்தெரு வார்டு 1
2-தெற்கு தெரு வார்டு 1
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147090.pdf

2.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்

1-வி.களத்தூர் வடக்கு தெரு வார்டு 1
2-மில்லத் நகர் வார்டு 4
3-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
4-அக்கரகாரத்தெரு வார்டு 3
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147091.pdf

3.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணாரபூண்டி வடக்கு பார்த்த மேற்கு ஓட்டுக்கட்டிடம் வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-அக்கரகாரத்தெரு வார்டு 3
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147092.pdf

4.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண்கள் தென்வடல் மெத்தைக்கட்டிடம் மேற்கு பார்த்தது வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-மேலத் தெரு வார்டு 4
2-தெற்கு தெரு வார்டு 4
3-மேட்டுச் சேரி வார்டு 5
4-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147093.pdf

5.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரபூண்டி கிழக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் வடக்குபகுதி தெற்கு பார்த்தது வி.களத்தூர்

1-காமராஜர் நகர் வார்டு 4
2-மில்லத்நகர்வார்டு 4
3-தெற்கு தெரு வார்டு 4
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147094.pdf

6.அயல்நாடு வாழ் வாக்காளர்கள்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பகுதி 5 வடக்கு பார்த்த கிழக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் தெற்குபகுதி வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-வி.களத்தூர் பள்ளிவாசல் வீதி வார்டு 1,2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147095.pdf

7.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண்கள் வடக்கு பார்த்த கற்போம் கற்பிப்போம் மெத்தை கட்டிடம் வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-வண்ணாரம்பூண்டி ரேசன்தெரு வார்டு 4
2-மில்லத் நகர் வார்டு 4
3-வண்ணாரம்பூண்டி காலனிதெரு வார்டு 5
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147096.pdf

8.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணாரபூண்டி கிழக்குபார்த்த ஒட்டு கட்டிடம் வ.களத்தூர்


1-ராயப்ப நகர் வார்டு 6
2-வள்ளியூர் வார்டு 6
3-இந்திரா நகர் வார்டு 6
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147097.pdf
நாளை நடக்க உள்ள மக்களவை தேர்தலில் நாம் வாக்களிக்க முக்கியமான விஷயம் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில்தான் நாம் வாக்களிக்க முடியும். பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் விபரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் காண கிடைக்கிறது. PDF கோப்பாக கிடைக்கும் பட்டியலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் பெரம்பலூர் நகர பட்டியல் விபரத்தை இனைய தளத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 292 தலைப்பில் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. உடும்பியம் கிராமத்தில் ஆரம்பித்து படாலுரில் பட்டியல் முடிவடைகிறது. PDF கோப்பில் உள்ள இந்த பட்டியலை பின்வரும் இணைப்பில் சொடுக்கி (click) செய்து உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்.
 http://www.elections.tn.gov.in/pdf/ac147.htm
பெரம்பலூர் நகரில், திமுக முஸ்லிம்களுக்கு என்னவெல்லாம் செய்தது என்ற அடிப்படையில் திமுக விற்கு வாக்கு கேட்டு நோட்டிசு வினியோகிக்கப்பட்டுள்ளது...... அதில் முக்கிய அம்சம் முஸ்லிம்களுக்கு திமுக அளித்த இடஒதுக்கீடு பற்றியது.

திமுக தனது சாதனையாக கூறும் இந்த இடஒதுக்கீடு முறையால் பாதிக்கப்படப்போவது யார் தெரியுமா.....?

தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் என அழைக்கப்படும் BC இனத்தவர் ஐம்பது சதவீத மக்களுக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முப்பது சதவீத இடஒதுக்கீடு கிறித்தவர்களுக்கும, முஸ்லிம்களுக்கும் ஆளுக்கு 3.5 சதவீதம் என்ற அடிப்படையில் கருணாநியால் 2௦௦7ல் பங்குபோட்டு கொடுக்கப்பட்டதால் 23 சதவீதமாக குறைந்தது.

கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடான 3.5% ல், பழைய இடஒதுக்கீடு முறையைப் போல் அதிக இடங்களை அரசு வேலைவாய்ப்பில் பெறமுடியாததன் காரணமாக எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என கருணாநிதியிடம் கிறித்தவ அமைப்புகள் கூறியதன் காரணமாக கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்பொழுது கிறித்தவர்கள் தமிழ்நாட்டில் அவர்களின் மக்கள்தொகை விகிதத்தைவிட அதிகமான இடங்களில் அரசு வேலைவாய்ப்பை பெற்றுவருகின்றனர்.

அனால் முஸ்லிம் மதத்தினர் இதற்க்கு மாறாக தற்போது வழங்கப்பட்டுவரும் 3.5 சத ஒதுக்கீட்டிலிருந்து ஏழு சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என கேட்கின்றனர். கிறித்தவர் இடஒதுக்கீடு வேண்டாம் என்கின்றனர் ஆனால் முஸ்லிம் மதத்தவர் இடஒதுக்கீடு தாற்போது வழங்கப்படும் 3.5% லிருந்து ஏழு சதவீதமாக உயர்த்த வேண்டும் என கூறும்போது, இதில் உள்ள சதிதிட்டதையும் இதனால் பாதிக்கபடபோவது யார் என்பதையும் நாம் அறிவது அவசியம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இடஒதுக்கீட்டின் அதிகபட்சவரம்பு 5௦ சதவீதம் . ஆனால் தமிழ்நாட்டின் மொத்த இடஒதுக்கீடு 69 சதவீதம். இந்த முரண் நமக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் எந்த ஒரு சட்டமும் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது. நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் நிறைவேற்றப்பாட்டாலும் அது அரசியலைமைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மையை பாதிக்கும் வைகையில் அமைந்தால் அதனை செல்லாது என அறிவிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு .

இந்த அதிகாரத்தை கட்டுப்படுத்த நாட்டின் முதல் சட்டத்திருத்தம் 1951 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி புதிதாக 9 வது schedule கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற வரைமுறையின் படி அல்லாமல் 69 சதவீதம் என கடைபிடிக்கப்பட்டு வருகிறது . அனால் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒன்பதாவது shedule ல் உள்ள சட்டங்களும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்றது. அதனால் தமிழ்நாட்டின் தற்போதைய இடஒதுக்கீடு முறையின் செல்லத்தக்க தன்மை நீதிமன்றத்தின் கருனைக்காக காத்துக்கிடக்கிறது.

தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு 69 சதவீதத்தில் MBC 2௦% , SC/ST- 19% மற்றும் BC-3௦%. இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடானது பிற்படுத்தோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3௦ சதவீத ஒதுக்கீட்டில் இருந்துதான் பிடுங்கப்பட்டது. கருணாநிதியின் திமுக விற்கு வெற்றிவாய்ப்பு அமைந்தால் தற்போது இஸ்லாமிய அமைப்புகள் கேட்கும் ஏழு சதவீத இடஒதுக்கீடும் கொடுக்கப்படும்.

அதிமுக வும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறுகிறார். இதனால் பாதிக்கப்படப்போவது தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான உள்ள BC என்றழைக்கப்படும் , பிற்படுத்தப்பட்ட இனத்தைச்சேர்ந்த மக்களே. மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு முறை செல்லாது என வருமாயின் பாதிக்கப்படப்போவதும் இவர்களே.

இந்துசமுதாயத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட இந்துக்களே.... திமுக மற்றும் அதிமுக வின் கட்சிக்கொடியை சுமந்து அதன் வெற்றிக்காக உழைக்கும் பிற்படுத்தப்பட்ட இந்து தோழர்களே ... உங்கள் குழந்தைகளின் எதிகாலத்தை எண்ணி வாக்களியுங்கள். 



முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி அதிமுக நிலை.

Sunday 20 April 2014

3. பல துறைகளில் தில்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி குஜராத்துடன் ஒப்பிடும் படியாக அல்லது அதைவிட சிறப்பாக உள்ளதே..
தில்லி, ஹரியானா, கோவா போன்றவை மிகச் சிறிய மாநிலங்கள். அவற்றை குஜராத்துடன் ஒப்பிட முடியாது. மற்ற பெரிய மாநிலங்களைத் தான் ஒப்பிட முடியும்.
உதாரணமாக, மகாராஷ்டிரம், தமிழ்நாட்டை விடவும் வேட் (VAT – Value Added Tax) வரி வருமானம் குஜராத்தில் குறைவாக உள்ளது என்கிறார்கள். ஆனால் அது மேம்போக்கான ஒப்பீடு. இந்த மூன்று மாநிலங்களின் மக்கள் தொகையையும் கணக்கில் எடுத்துக்  கொண்டு,  மதுக் கடைகளினால் வரும் வரி வருமானத்தை கழித்து விட்டுப் பாருங்கள். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் முன்னணியில் இருக்கிறது. எனவே அதிக வரி வருமானம் என்ற பெயரில் தமிழக அரசு காட்டும் கணக்கு என்பது டாஸ்மாக் கடைகளால் சீரழிந்த எத்தனையோ குடும்பங்களின் கண்ணீராலும், இழந்த உயிர்களாலும், சீரழிந்த எதிர்காலங்களாலும் நிரம்பியுள்ளது.
TH-TASMAC_SHOP_1_1621736g
கிராம சுகாதாரம், கிராமக் குடிநீர் விநியோகம் இரண்டிலும் தமிழ்நாடு குஜராத்தை விட நல்ல நிலையில் உள்ளது என்பது உண்மையே. இவற்றை  துரித கதியில் குஜராத் அரசு இப்போது மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவர்களின் செயல்திறன், எண்ணிக்கை இரண்டிலும் இப்போது தமிழ்நாடு குஜராத்தை விட நல்லநிலையில் உள்ளது தான். ஆனால், மோதியின் அரசு சும்மா இருக்கவில்லை. இந்தப் பிரசினைக்கு முதன்மை அளித்து வேலை செய்து வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இன்னும் சில வருடங்களிலேயே இவற்றில் தமிழ்நாட்டை குஜராத் மிஞ்சி விடலாம்.
மாநில அரசின் ஒட்டுமொத்த செயல்திறன், அரசாட்சியில் தொழில் நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றில் கட்டாயம் இந்த இரு மாநிலங்களை விடவும் குஜராத் மிகச் சிறப்பாக உள்ளது.
4. குஜராத் எப்போதுமே தொழில் வளர்ச்சியிலும் வர்த்தகத்திலும் முன்னேறிய மாநிலமாகத் தான் உள்ளது. மோதி பெரிதாக என்ன செய்தார்?
எப்போதுமே என்பது தவறு. 1980களின் நடுப்பகுதி வரை குஜராத்தில் ஓரளவு நல்ல மாநில அரசாட்சி இருந்த்து. பிறகு சீரழிவுக் காலம் தொடங்கியது. 1960ல் தனி மாநிலமாக ஆன குஜராத், 1991ல் முதன்முறையாக நிதிப் பற்றாக்குறை மாநிலம் என்று தன்னை அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. வளர்ச்சி குன்றிய தேக்க நிலை 1998 வரை நீடித்தது. பாஜக ஆட்சியைப் பிடித்து கேசுபாய் படேல் முதல்வரான உடன் தான் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. 2001ல் மோதி முதல்வராகப் பதவியேற்கும் போதும் குஜராத்தின் நிலைமை படுமோசமாகத் தான் இருந்தது. மிகப் பெரும் அழிவையும் பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்திய கட்ச் பூகம்பமும் அதனுடன் சேர்ந்து கொண்டது.
ஆனால் மோதியின் அயராத உழைப்பினாலும், சிறந்த அரசாட்சி செயல்பாடுகளாலும், 1991க்குப் பிறகு 2006ல் தான் குஜராத் நிதி மிகை மாநிலமாக ஆகியது. 2007 முதல் 2012 வரையிலான காலத்தில் வருடந்தோறும் சராசரியாக 12 சதவீதம் குஜராத்தின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. எந்த அளவீட்டை வைத்துப் பார்த்தாலும், இது ஒரு அசாதாரணமான சாதனை. மின்சக்தி, எரிசக்தி, விவசாயம், தொழில் உற்பத்தி என்று எல்லாத் துறைகளையும் தழுவியதாக இந்த வளர்ச்சி உள்ளது.
இது முழுக்க முழுக்க மோதியின் அரசியல் தலைமை மற்றும் உழைப்பால் விளைந்தது தான். அப்படி இல்லை என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல.
5. மோதி ஆட்சிக்கு என்று தனிச்சிறப்பு ஏதாவது இருக்கிறதா என்ன?  மோதியின் மாடலுக்கும்,  தமிழ்நாடு மாடல், மகாராஷ்டிரா மாடல் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களின் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அரசாட்சியின் தரம், அரசின் தொலைநோக்குப் பார்வை, அரசு செயல்படும் முறை இந்த மூன்றிலும் மோதியின் குஜராத் மாடல், மற்ற மாநிலங்களில் இருந்து தனித்து நிற்கிறது.  சொல்லப் போனால், மற்ற மாநிலங்களின் விஷயத்தில் “மாடல்” என்று சொல்லத் தக்க வகையில் அந்த மாநில அரசுகளின் செயல்பாடுகள் இருக்கிறதா, ஏதேனும் புதிய சிந்தனை இருக்கிறதா என்பதே சந்தேகம்.
ஒரு உதாரணத்திற்காக, மின்சாரத்தை எடுத்துக் கொள்வோம்.
மகாரஷ்டிரத்திலும் தமிழ்நாட்டிலும் மின்சாரத் துறை என்பதே அரசியல் தரகு வேலைகளுக்கும், வாக்கு வங்கிகளை குஷிப் படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. ஆனால், மோதியின் குஜராத்தில், அது நல்லாட்சிக்கான ஒரு உதாரணமாக விளங்குகிறது.  குஜராத் ஊர்ஜா விகாஸ் நிகம் லிமிடட் (GUVNL) என்று புதிய பெயர் சூட்டப் பட்டுள்ள குஜராத் மின் வாரியம், இவ்வளவு காலமாக சேர்த்து வைத்திருந்த 2500 கோடி ரூபாய்கள் (2003ம் ஆண்டுக் கணக்குப் படி) நஷ்டத்தை துடைத்தெறிந்து விட்டு, கடந்த சில வருடங்களாக 500 கோடி ரூபாய்களுக்கு மேல் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறி இருக்கிறது.
மின்சாரத் திருட்டை  முற்றிலுமாக ஒழித்ததும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கிக் கெடுக்காமல் உரிய கட்டணத்தைச் செலுத்த வைத்துக் காட்டியதுமல்லாமல் அதற்கு அடுத்த தேர்தலில் வெல்லவும் செய்தார் மோதி.  ஆனால், மகாராஷ்டிர, தமிழ்நாடு மாநில ஆட்சியாளர்களுக்கு இதில்  கால் பங்கு நடவடிக்கைகளைக் கூட எடுக்கும் முனைப்பும், வாக்கு வங்கி அரசியலுக்கு சவால் விடும் துணிவும் கிடையாது.
மாநில பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை வேண்டியவர்களை பதவியில் அமர்த்தவும் சலுகைகள் காட்டவும் மட்டுமே உருவாகியுள்ள சீழ் பிடித்த அமைப்புகளாகத் தான் மற்ற மாநிலங்களில் உள்ளன. ஆனால் மோதியின் குஜராத்தில், பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள், அரசியல் குறுக்கீடு இல்லாமல், தொழில் நேர்த்தியுடன் மிளிரும் புரஃபஷனல் நிறுவனங்களாக உருமாற்றம் பெற்றுள்ளன.
சத்துணவுத் திட்டம் என்ற ஒரு விஷயத்திற்காக எம்.ஜி.ஆர் என்ற மாநில ஆட்சியாளர் வரலாற்றில் என்றென்றும் நினைவு கூரப் படுவார். இப்படி ஒன்றிரண்டு நல்ல திட்டங்களை செயல்படுத்திய ஆட்சியாளர்கள் எல்லா மாநிலங்களிலும் உண்டு. ஆனால் மோதியின் நல்லாட்சி குஜராத்தில் புரிந்துள்ள சாதனைகள் எண்ணிக்கையிலும் சரி, அளவிலும் சரி, இவை எல்லாவற்றையும் விட மிகப் பெரியவை. அதனால் தான் ஒரு “மாடல்” என்ற அடைமொழிக்கு அவை தகுதியுடையவை ஆகின்றன.
6. ரதன் டாடா, கௌதம் அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு பிரத்யேக சலுகைகளை வாரி வழங்கினார் மோதி. கார்ப்பரேட்டுகளை அளவுக்கு மீறி ஊக்குவித்தார். அது தானே உண்மை?
ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது – மோதியின் அரசு அடிப்படையில் ஒரு கொள்கை சார்ந்த அரசு (Policy driven government). சலுகைகளும், அதற்கு இசைந்த அதிகார அடுக்குகளும் வலைப்பின்னல்களும்  அதில் ஊக்குவிக்கப் படுவதில்லை என்பதை மோதி எதிர்ப்பாளர்களே கூட பதிவு செய்திருக்கிறார்கள்.
பாஜகவுக்கு பெரிய அளவில் நிதி வழங்கும் கார்பரேட்கள் கூட, அவர்களது செயல்பாடுகள் அரசின் தொழில் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கும் பட்சத்தில் மோதியிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற்று விட முடியாது என்று  உதய் மாஹூர்கர் தனது நூலில் பதிவு செய்கிறார்.  இதே கொள்கையை மோதி மத்திய அரசிலும் கடைப்பிடிக்கும் போது, தில்லி தர்பாரில் அரசியல் “நட்புகள்”, சலுகைகள், பிரத்யேக கவனிப்புகளின் வாயிலாகவே ஊதிப்பெருத்து வந்த ஊழல் சாம்ராஜ்யம் நிலைகுலைந்து அழியக் கூடும். அதனால் தான் மோடி பிரதமராக வருவதைக் குறித்து ஏற்கனவே அங்கு பெரிய கிலி பிடித்திருக்கிறது.
டாடா நேனோ தொழிற்சாலை மட்டும் குஜராத்துக்கு வரவில்லை. அதைத் தொடர்ந்து ஃபோர்ட், மாருதி மற்றும் பல வாகன உற்பத்தியாளர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்ட தொழில் வளர்ச்சிக் கொள்கை தான் இதை சாத்தியமாக்குகிறது.  அதே போலத் தான் அதானி குழுமத்தின் “முந்த்ரா (Mundra)  தொழில் வளாகமும். கற்பனை செய்ய முடியாத அளவில் மிகப் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை இத்தகைய தொழில் மையங்கள் குஜராத்தில் உருவாக்கியுள்ளன.
tata_nano_factory_sanand
இவ்வளவு கார்பரேட் நிதி குவியும் இடத்தில்  சிறிது கூட ஊழல் நடக்காமல் இருக்குமா என்று கேட்கலாம்.. ஆங்காங்கு சிறு சிறு ஊழல்கள் நடந்திருக்கலாம்.  ஆனால், வளர்ச்சியையும் மக்கள் நலனையும் பாதிக்கும் அளவிலான பெரிய ஊழல்களோ விதி மீறல்களோ கட்டாயம் நடக்கவே இல்லை என்று அடித்துச் சொல்ல முடியும். நடந்திருந்தால் காங்கிரஸ் கடுவாய்களும், ஊடக ஓநாய்களும் சும்மா இருந்திருப்பார்களா என்ன, கடித்துக் குதறியிருப்பார்களே.. குறிப்பாக, கூரை இடிந்து விழும் நிலையில் ஜீவனை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு மழை நாளிலும் ஒழுகிக் கொண்டிருக்கும், “தரமற்ற கட்டுமானங்கள்” வரிசையில் உலகப்புகழ் பெற்று விட்ட சென்னை விமான நிலையம் போல முற்றிப் போன ஊழல் எல்லாம் மோதியின் குஜராத்தில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. நர்மதை நதியின் நீர்ப்படுகை முழுவதும் சோலார் தகடுகளைப் பதித்தது மூதல், நூற்றுக் கணக்கான கிலோமீட்டர்கள் மாநில நெடுஞ்சாலைகள் போட்டது வரை மோதியின் குஜராத் அரசு மாபெரும் திட்டங்களை செய்து முடித்து, கட்டுமானங்களை உருவாக்கியுள்ளது. எந்தத் திட்டம்  குறித்தும் இதுவரை  குறைந்த தரம் கொண்டது, அக்கிரமமாக செய்யப் பட்டது, கொள்ளையடிக்கப் பட்டது என்ற புகார்கள்  இல்லை. இது ஒன்றே போதும், கார்பரேட்டுகளும், முதலாளிகளும்  அநியாயமாக மக்களுக்கு தீங்கிழைப்பதற்கு ஒரு போதும்  அனுமதிக்கப் படவில்லை என்பதற்கு.
7. மோதியின் குஜராத் மாடல் பணக்காரர்களுக்கு, நடுத்தர மக்களுக்கு மட்டுமே நன்மை செய்யும். கீழ்நடுத்தர மக்களுக்கும் ஏழைகளுக்கும் அதில் ஒன்றுமே கிடையாது என்று கூறப் படுகிறதே..
இது சிறிதும் ஆதாரமற்ற கூற்று. கடந்த எட்டு ஆண்டுகளில், குஜராத்தின் சராசரி தனி நபர் வருமானம் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.  மாநில மக்கள் தொகையில் வேலைவாய்ப்பின்மை ஒரு சதவீத அளவிலேயே உள்ளது. வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் இந்த மற்ற எல்லா மாநிலங்களையும் விட மோதியின் குஜராத் முன்னணியில் உள்ளது என்பது மத்திய அரசின் கணக்கீட்டு நிறுவனங்கள் உட்பட அனைவரும் ஒத்துக் கொள்ளும் விஷயம்.
முக்கியமாக, வளர்ச்சி செலவினங்கள் (development expenditure) , வளர்ச்சிக்குத் தொடர்பில்லாத செலவினங்கள் (non development expenditure ) இடையேயான விகிதம் மிக ஆரோக்கியமாக உயர்ந்துள்ளது. சமூக நலத் திட்டங்களுக்காக செலவழிக்கப் படும் அரசுப் பணம், மற்ற பணிகளுக்காக செலவிடப் படுவதை விட அதிகம் என்பதையே இது காட்டுகிறது.  பொதுவாக மோதியை எதிர்ப்பதாகக் கூறப் படும் பல என்.ஜி.ஓ அமைப்புகள் கூட, குஜராத் அரசின் “வனபந்து” பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தைப் புகழ்ந்து, இந்தியா முழுவதும் அந்த திட்டம் விஸ்தரிக்கப் படவேண்டும் என்று  பரிந்துரைக்கிறார்கள்.
இவை தான் மோதியின் குஜராத் மாடல் பற்றிய உண்மைகள்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் கௌஹாத்தி வரை உள்ள வாக்காளர்கள்,  மோதி என்ற உன்னதத் தலைவரை, பாரத அன்னையின் தவப் புதல்வரை நேசிக்கிறார்கள். அவர் பிரதமராகி இதே போன்ற நல்லாட்சி நாடு முழுவதும் மலர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
தமிழக வாக்காளர்களே, நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
வரும் ஏப்ரல்-24 அந்த நினைவுடன் தான் நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்.
வரும் மே-16 அந்த நம்பிக்கையைக் கட்டாயம் நிரூபிக்கவும் போகிறது.
 (முற்றும்)

 மேலும் படிக்க-http://othisaivu.wordpress.com/

நன்றி-http://www.tamilhindu.com/2014/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93-2/

மேலும் படிக்க-
இந்தியப் பாராளுமன்றம் “தில்லி தர்பார்” என்றே பொதுவாக அறியப் படுகிறது. தில்லியில் தான் மத்திய அரசின் ஒட்டுமொத்த அதிகார வர்க்கங்கள், அமைச்சகங்கள், அரசியல் தரகர்கள் எல்லாமே மையம் கொண்டிருப்பது. பூகோள ரீதியாக தில்லி இருப்பது ஓரிடத்தில் தான். ஆனால் இந்திய நிலப்பரப்பின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அதன் மாயக்கரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு பொதுவான அரசியல் நம்பிக்கை.
ஆனால், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில், நாட்டின் அரசியல் மையம் தில்லியிலிருந்து குஜராத்துக்கு இடம் பெயர்ந்து விட்டதோ என்று சொல்லுமளவுக்கு குஜராத் பற்றிய பேச்சுக்களும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.  மோதி ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருவர் கைகளாலும் ஓசைப்படும் மத்தளமாகி விட்டது குஜராத். தேசிய அரசியலின் மையத்தில், அதிகார வர்க்கத்தினரின் மேல்பூச்சு வாசத்திற்குப் பதிலாக உண்மையான இந்திய மண்ணின் மணம் வீசப் போவதற்கான அறிகுறி இது என்று தவ்லீன் சிங் போன்ற அரசியல் நோக்கர்கள் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
“குஜராத்” என்ற பெயரை மதக் கலவரங்கள், சமூக மோதல்கள், வன்முறைகளின் குறியீடாக தேசத்திலும் உலக அரங்கிலும் முன் நிறுத்த மீண்டும் மீண்டும் காங்கிரசும், எதிர்க்கட்சிகளும், போலி அறிவுஜீவிகளும், ஊடக சதிகாரர்களும் தொடர்ந்து முயன்றனர். ஆனால் பல்வேறு புலன் விசாரணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் உண்மையை ஓங்கி அறைந்து வெளிக்கொணர்ந்தன. அந்த முயற்சிகள் மண்ணைக் கவ்வின. இப்போது “குஜராத்” பற்றிய கருத்துரைகள் அனைத்துமே வளர்ச்சி, பொருளாதாரம், சமூகநலத் திட்டங்கள், தொழில்துறை ஆகிய விஷயங்களையே சுற்றி வருகின்றன. வளர்ச்சி பற்றிய சொல்லாடல்களுக்கும், விவாதங்களுக்கும்  ஒரு அளவீடாகவே ஆகியிருக்கிறது, மோதியின் “குஜராத் மாடல்”. இந்த திசைமாற்றம் நரேந்திர மோதியின் தலைமையிலான பாஜக, களத்தில் அடைந்துள்ள முதல் வெற்றி.

நரேந்திர மோதி நாட்டின் தலைமைப் பொறுப்பேற்கத் தகுதியானவர் என்பதை அழுத்தமாக சொல்வதற்காக, அதற்கான நிரூபணமாகத் தான், குஜராத்தில் அவர் செய்த சாதனைகளும், கொண்டு வந்துள்ள மாற்றங்களும் பரப்புரை செய்யப் படுகின்றன. இதன் நோக்கம் மற்ற மாநிலங்களை மட்டம் தட்டுவதோ அல்லது அவற்றில் எந்த வளர்ச்சியுமே ஏற்படவில்லை என்று சொல்வதோ அல்ல.  குஜராத் எட்ட வேண்டிய எல்லா இலக்குகளையும் எட்டி விட்டது, அது எந்தக் குறைகளும் அற்ற சொர்க்க பூமி என்று சொல்வதல்ல. ஆனால், மேம்போக்காக ஒரு சில புள்ளி விவரங்களைப் போட்டுக் காட்டி வெட்டி சவடால்கள் விடும் எதிர்ப்பாளர்களின் ஒரே நோக்கம் மோதியின் ஆட்சித் திறன் பற்றிய உண்மைகளை இருட்டடிப்பது. குறுகிய காலத்தில் மோதியின் தலைமை நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைகள் பற்றிய உண்மைகள் மக்களின் மனதில் பதிவதைத் தடுப்பது. தங்கள் தோல்விகளை மறைப்பது. எந்தவொரு தொலைநோக்குத் திட்டமும் இல்லாமல் வெட்டி அராஜக அரசியல் மட்டுமே நடத்தினாலும் கூட, முன்பே பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களின் இயல்பான தொடர்ச்சியை, ஏதோ தாங்கள் செய்த பெரிய சாதனை போல காட்டிக் கொண்டிருப்பது.
ஒரு புறம் காங்கிரசின் மெகா ஊழல்கள், கடும் தோல்விகள். மறுபுறம் பாஜகவின் நல்லாட்சி நிரூபணங்கள். தொலைநோக்கு செயல்திட்டங்கள். இது தான் இந்தத் தேர்தலில் மையமாக உள்ள  மோதல்.  இதைப் பேசுவதற்குப் பதிலாக, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு விஷயத்துடன் குஜராத் வளர்ச்சியை ஒப்பிட்டு, இங்க பார் குஜராத் ஒரு சதவீதம் கம்மி, அங்க பார், குஜராத் இரண்டு சதவீதம் கம்மி என்று சொல்வதன் மூலம், இவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்?  நடப்பது மாநிலங்களுக்கு இடையேயான போட்டி அல்ல,  பாராளுமன்ற தேர்தல். தேசியத் தலைமையை தேர்வு செய்வதற்கான போட்டி.  இப்படி செய்வதன் மூலம் மற்ற மாநில மக்களை உசுப்பி விட்டு, குஜராத்தை விட நாங்கள் இளப்பமா என்ன என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, மோதி அலையை மழுங்கடித்து விடலாம் என்று இவர்கள் கணக்குப் போட்டால், அது கட்டாயம் நிறைவேறப் போவதில்லை. அது இவர்கள் மீதே பூமராங்க் ஆகி திருப்பி அடிக்கப் போகிறது.
ஏனென்றால், இந்தியாவின் பொதுஜன கருத்து வெளி என்பது  புள்ளி விவரங்களைப் போட்டு விளையாடும் சாதுர்யம் மட்டும் அல்ல. ஊடகங்களும் பரப்புரைகளும் சொல்லும் செய்திகளை தங்கள் அனுபவங்கள், நேரடியான தகவல் தொடர்புகள் மூலம் உறுதி செய்து கொண்டு தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அரசியல் தேர்வுகளை செய்வார்கள். குஜராத்தை விட தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று ஜெயலலிதா மேடைகளில்  கெக்கலிக்கிறார். அந்தக் கெக்கலிப்புக்குப் பின் உள்ளவை அரைகுறை உண்மைகள் என்பதையும், மிகச் சில துறைகளில் ஏற்பட்டுள்ள ஒரு நீண்டகால வளர்ச்சியைத் தவிர்த்து மற்றதெல்லாம் வெறும்  பம்மாத்து என்பதையும் தமிழக வாக்காளர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.  இதுவரை தமிழகத்தில் நடந்த எல்லா கருத்துக் கணிப்புகளிலும்  60 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் மோதி பிரதமராக வேண்டும் என்று கூறியிருப்பது யாரோ செய்தி சதி அல்ல. தானைத் தலைவர் சொல்வது போல தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்களும் அல்ல. ஜெயலலிதா கடந்த கால சீரழிவு அரசியலின், கழக அரசியலின் ஒரு எச்சம்; ஆனால் மோதி எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியை மையப்  படுத்திய அரசியலின் ஒளிக்கீற்று என்று மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஜெயலலிதா சொல்லும் வளர்ச்சிக் கதைகளுக்கும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அந்தக் கதைகளின் உண்மையான ஹீரோக்கள் ஆர்.வெங்கட்ராமன், காமராஜர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் தானே அன்றி, ஜெயலலிதா அல்ல. அந்த வளர்ச்சிக் கதைகளின் ஸ்கிரிப்டில் டாஸ்மாக் கடைகள், இலவசங்கள், எதேச்சாதிகாரம், மின் பற்றாக்குறை, விவசாய அழிவு, சகிக்க முடியாத ஊழல்கள் என்று பல மசாலாக்களை சேர்த்து வீழ்ச்சிக் கதையாக மாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் கதாசிரியர்  ஹீரோயின் தான் ஜெயலலிதா. மோதியின் வளர்ச்சிக் கொள்கைகளை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு உள்ள தகுதியின் இலட்சணம் என்ன என்று தமிழக மக்கள் அறிவார்கள். அம்மாவே இப்படி என்னும் போது கலைஞர்களையும், தளபதிகளையும் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
சர். சி வி.ராமன் கண்டுபிடித்ததை “ராமன் எஃபெக்ட்” என்றும், ஜெய்ப்பூரில் வடிவமைக்கப் பட்ட செயற்கைக் கால்களை “ஜெய்ப்பூர் கால்கள்” என்றும் சொல்வது போல, குஜராத்தில் நடைமுறைப் படுத்தியதால் “குஜராத் மாடல்” என்று அழைக்கிறார்கள். மற்றபடி, மோதியின், பாஜகவின் நல்லாட்சி பற்றிய கொள்கைகளும் திட்டங்களும் இந்தியா முழுவதற்கும் பொருத்தமானவையும் ஏற்றவையும் ஆகும். இவை வெறும் கோட்பாடுகளோ, தேர்தல் கோஷங்களோ அல்ல. உண்மையில்  இந்த நல்லாட்சிக் கொள்கைகளை குஜராத்தில் பரிசோதனை செய்து, அதில் உள்ள குற்றம் குறைகளைக் களைந்து மேலும் பல நல்ல அம்சங்களையும் சேர்த்து ஒரு செயல்திட்டமாக மோதி முன்வைப்பது எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று யோசித்துப் பாருங்கள். மோதிக்கு ஒரு வாய்ப்பளித்தால், இந்த நல்லாட்சியின் பலனை ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும், ஒவ்வொரு மாநிலமும் அனுபவிக்கும்.  மோதி பிரதமராகவே கூடாது என்று வெறுப்புடனும் வன்மத்துடன் கையெழுத்துப் போட்டு கோரிக்கை விடுக்கும் அறிவுஜீவி, எழுத்தாளர், சிந்தனையாளர் பூர்ஷ்வாக்களுக்கும் அந்த நல்லாட்சியின் பலன்கள் கிடைக்கும். இடைவெட்டு இல்லாத 24 மணி மின்சாரத்தில், இன்னும் ஜோராக பெரிதாக எப்படி மோதி மீது வெறுப்பு கக்குவது, மக்களை முட்டாளாக்குவது என்று அவர்கள் யோசிக்கலாம்.
  • மோதி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை ஆராய்ச்சி செய்து மோதினாமிக்ஸ் (Modinomics) என்ற புத்தகத்தை சமீர் கோச்சார் எழுதியிருக்கிறார்.  இவர் Skoch  Group  தொழில் குழுமத்தின் தலைவர் சிறந்த பொருளாதார நிபுணர். அனைவரையும் அரவணைக்கும் பொருளாதாரம் (Inclusive Economics),  அனைவரையும் அரவணைக்கும் அரசாட்சி (Inclusive Governance) என்ற இரண்டும் தான் மோதினாமிக்ஸின் தாரக மந்திரங்கள் என்பதை விரிவாக இந்தப் புத்தகத்தில் பல ஆதாரங்களுடன் விளக்குகிறார். பார்க்க: http://modinomics.net/
  • இந்தியா டுடே இதழின் மூத்த பத்திரிகையாளர் உதய் மாஹூர்கர் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள Centrestage: Inside the Narendra Modi Model of Governance என்ற புத்தகம்,  மோதி அரசின் சாதனைகளைப் பற்றியதாக  மட்டுமல்லாமல், சிறு குறைகள், இன்னும் நன்றாக செயல்பட வேண்டிய துறைகள் என்பதைப் பற்றிய நடுநிலையான விமர்சனமாகவும் அமைந்துள்ளது.
*********
மோதியின் குஜராத் மாடல் குறித்து பொதுவாக எழுப்படும் கேள்விகளையும் குற்றச் சாட்டுகளையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.


1. குஜராத் மாடல் என்பதை எப்படி வரையறை செய்கிறீர்கள்? அதன் முக்கிய அம்சங்கள் என்ன?
இந்தியாவில் இதுவரை  ஒவ்வொரு “பாதிக்கப் பட்ட” சமூகக் குழுக்களையும் தனித்தனியான அலகுகளாகக் கருதி எந்த ஒத்திசைவும் இல்லாமல் தான் பெருமளவு வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப் பட்டு வந்துள்ளன. இது வாக்கு வங்கிகள் உருவாகவும், நீடிக்கவும் தான் வகை செய்திருக்கிறதே தவிர வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை, மக்களிடையே எந்தப் பெருமித உணர்வையும் உண்டாக்கவில்லை. இதிலிருந்து மாறுபட்டு, நல்லாட்சி (good governance) மூலமாக, அனைத்துத் தரப்பினரையும் சென்று சேரும் வளர்ச்சி என்பது தான் குஜராத் மாடல்.
சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடம் உறைந்துள்ள ஆற்றல் குறித்த சுய பெருமித உணர்வை ஏற்படுத்தி, அதை நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் இணைப்பது மோதியின் குஜராத் மாடல்.
சாமானிய மக்களுக்கு “உதவுவது” அல்ல, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க எல்லாவிதமான ஊக்கங்களையும் வசதிகளையும் அளிப்பது.
கண்மூடித் தனமான, பொத்தாம் பொதுவான மானியங்களைத் தவிர்த்து, சுகாதாரம், கல்வி போன்ற குறிப்பிட்ட துறைகளில் மட்டும் ஏழை மக்களுக்கு உண்மையிலேயே நேரடியாக உதவும் வகையில் மானியங்களைப் பயன்படுத்துவது.
காளையின் கொம்பைப் பிடித்து மடக்குவது போல, வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பிரசினைகளை ஆயத்த நிலையில் (mission mode) நேரடியாக எதிர்கொள்வது, அவற்றை துரிதமாகத் தீர்ப்பது.
இந்த மாடல் அமல் படுத்தப் பட்ட போது, நடைமுறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. சில விஷயங்களில் நினைத்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், மோதி அரசு தொடர்ந்து அந்த விஷயங்களில் கூடுதல் கவனமும் அதிக முனைப்பும் செலுத்திக் கொண்டே இருக்கிறது. அது தான் மோதிக்கும் மற்ற அரசியல் தலைமைகளுக்கும் உள்ள வேறுபாடு.
2. சமூக வளர்ச்சியில் குஜராத் மிகவும் பின்தங்கியுள்ளதே.. ?
தீர்க்கவேண்டிய சில பிரசினைகள் உள்ளன என்பது உண்மை தான். ஆனால், “மிகவும் பின் தங்கிய” என்பது எந்த வகையிலும் சரியல்ல.
உதாரணமாக, சிறுகுழந்தைகள் மரண விகிதம் (Infant Mortality Rate), பேறுகாலத் தாய்மார்கள் மரண விகிதம் (Mother Mortality Rate) ஆகியவற்றில் குஜராத் தேசிய அளவிலான சராசரியை விட மோசமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், பழங்குடியினர் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் குஜராத் என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற இத்தகைய மாநிலங்களிலும் அந்த விகிதங்கள் சராசரியை விட மோசமாகத் தான் உள்ளன. இதற்குக் காரணம், பழங்குடியினர், கிராம நகர மக்களைப் போல நெருக்கமாக கூடி வசிக்காமல், தூர தூரமுள்ள பிரதேசங்களில் சிதறி வாழ்கின்றனர். அத்தகைய இடங்களுக்கு மருத்துவ வசதிகளைக் கொண்டு செல்வது மிகவும் கடினம்.  அப்படியும் கூட,  மோதி அரசின் சிறந்த முயற்சிகளால் 2002ல் 60 ஆக இருந்த சிறுகுழந்தைகள் மரண விகிதம், இப்போது 38 ஆகக் குறைந்திருக்கிறது.  மேற்கூறிய மற்ற பழங்குடியினர் அதிகமாக உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது சிறப்பாகவே உள்ளது.
இன்னொரு உதாரணம். ஒரு வருடத்திற்கு 1200க்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களின் இதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்யும் யு.என்.மேத்தா இதய சிகிச்சை மையம் முற்றிலும் அரசு நிதியில் இயங்குகிறது. கடந்த பத்து வருடங்களில் இதற்கான நிதி 2 கோடியிலிருந்து 70 கோடி வரை உயர்த்தப் பட்டுள்ளது.
குஜராத்திற்கே உரித்தான சில காரணங்களால், கிராமப் புறங்களில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதை சரி செய்ய, பிற மாநிலங்களில் இருந்து டாக்டர்களை வரவழைப்பவது உட்பட பல முன்னெடுப்புகளை மோதி தலைமையிலான அரசு செய்து வருகிறது.

தொடரும்--

நன்றி-http://www.tamilhindu.com/2014/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93/

 இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராமகோபலன்ஜி வரலாறு
பெயர் : திரு.இராமகோபலன்
பிறந்த தேதி - : 19/09/1927
நட்ச்சத்திரம் - :- திருவாதிரை
தந்தை : திரு.இராமசாமி
தாயார் : திருமதி.செல்லம்மாள்
பிற்ந்த ஊர் : சீர்காழி
[திரு.சுப்பிரமணியன்,திரு.சங்கரன்,திரு,நாரயணன்,திரு,மங்களம், திருமதி.கமலா,திருமதி.லலிதா,திரு.ஏகாம்பரம்,திருமதி.லட்சுமி, திருமதி.திரிபுரசுந்தரி,திரு.நடராஜன்,திரு.கோபால்ஜீ] சீர்காழி லூத்ரன் மிஷ்ன்ஸ் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்தார். பி.இ படிக்க ஆசைக்கொண்டார்.இடம் கிடைக்காத்தால் அதற்க்கு சம்மான டிப்ளமோ படித்து ஏ.ஐ.எம்.ஈ. படிக்க விருப்பம் கொண்டார்.எனவே 1944ல் சென்னை புரசைவாக்கம்-செங்கல்வராயன் டெல்னிக்கல் இன்ஷ்டியுட்ல் சேர்ந்து டிப்ளமோ எலக்ட்ரிக்கல் படித்து வந்தார, அப்போது முத்துரமணியுடன் நட்பு ஏற்ப்பட்டது.இருவரும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது மாலை 5 மணிக்கு விளையாட்டை நிறுத்திவிட்டு முத்துரமணி புறப்பட திரு.கோபால்ஜீ அவர்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு எங்கே செல்கிறாய்? எனக்கேட்டார்.ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு என்றார் முத்துரமணி. ஆர்.எஸ்.எஸ்ன்னா என்ன? என்க்கேட்டார் திரு.கோபால்ஜீ.வந்துபார் என்க்கூறி சென்னை கோபாலபுரம் நகராட்சி மைதானத்தில் நடந்த ஷாகாவுக்கு அழைத்துச்சென்றார் முத்துரமணி. சிந்து மகாணத்தில் இருந்து அடித்துவ்ரட்டப்பட்ட இந்து குடும்பங்களை சென்னை ஆவடியில் பார்வையிட்டு இதைப்போல் இந்துக்கள் வேறெங்கும் பாதிக்கப்படாமல் இருக்க ஆர்.எஸ்.எஸ்.போன்ற அமைப்பு தேவை என் எண்ணி,அதில் தன்னால் ஆன சேவை செய்யவும் விரும்பினார்.அதன்படி சங்க வேலையில் ஈடுப்பட்டு கொண்டே கல்லூரிபடிப்பையும் முடித்தார்
கல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ராஜினாமா செய்துவிட்டு சங்கப்பணிக்கு வா என உத்தரவிட்டனர்.
அதன்படி குடியாத்ததில் தனியார் மின்சார நிலய்த்தில் வேலை. குடியாத்ததிலும் சங்கப்பணி தொடர வீட்டிற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குடும்பத்தினர் சென்னை வீட்டிற்க்கு அழைத்தனர்.சென்னை வந்த பின்பும் சங்கப்பணி தொடர பலமுறை அறைகளில் வைத்து பூட்டினார்கள்.தினமும் வீட்டில் போராட்டம் ஆகியது.1947 – 1947 ம் ஆண்டு பிரச்சாரக் ஆக சங்க அனுமதி கிடைத்தது.
முதல் சங்கப்பணி கும்பக்கோணத்தில் ஒரு வாரம் நடைப்பெற்றது.இரண்டாவது சங்கப்பணி திருநெல்வேலி நகர்,பாளையங்கோட்டை நகர் என தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் சங்கம் தடை செய்யப்பட்டது.சங்கம் தடை செய்யப்பட்ட காலத்தில் வேலூர் சிறையில் 4 மாதம் அடைக்கப்பட்டார்.ஆள்கொணர்வு மனு செய்யப்பட்டு விடுதலை ஆனார்.
சங்கத்தில் வேலைக்கு போகச் சொல்ல மெட்ராஸ் எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் ஜூனியர் என்ஜீனியராக 4 மாதம் வேலை செய்தார்.சங்கம் மீண்டும் பிரச்சாரக் ஆக வரச்சொல்ல வேலையை ராஜினாமா செய்தார்.ஒருங்கினைந்த தமிழகத்தில் பாலாக்காடு தாலுகா பிரச்சாராக் ஆக பதவி வகித்தார்.அங்கு மா.ஈஸ்வரமேனன் சங்கசாலக்.பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த்க்கோரி கிராமங்கள் தோறும் கையெழுத்து வாங்கும் பொறுப்பை சிறப்பாக செய்தார்.இதனை தொடர்ந்து மதுரை விபாக் பிரச்சாரக் ஆக மாற்றப்பட்டார்.
திரு.பரம பூஜ்ய குருஜீயின் 51 வது குருபூஜையை மதுரையில்பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் நிகழ்த்தி காட்டினார்.இந்த கூட்டத்திற்க்கு பசும்பொன் தேவர் திருமகனார் தலைமை தாங்கினார்.மீண்டும் சென்னையில் விபாக் பிரச்சாரக்காக் மாற்றப்பட்டு திரு. பரம பூஜ்ய குருஜீயின் தமிழக விஜயத்தின் போது குருஜீயின் உரைகளை மொழிப்பெயர்த்து குருஜீயின் ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்து கொண்டார்.
1980 ஆண்டு ஜூன் மாதம் சங்கத்தின் மாநில குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது.விருதுநகர் பக்கத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்களை மதம் மாற்றப்போவதாக கர்நாடகத்தில் இருந்து ஒரு கடிதம் திரு சூருஜீக்கு வந்தது
அந்தக்காலக்கட்டத்தில் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்து பெரும் குழப்பங்கள் தமிழகத்தில் நிலவிய நேரம்.இதன் நடுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம்மாக மாற்ற முயற்சி நடந்தது.அதற்க்கான ஆதாரத்தை தேடும்போது கிறிஸ்த்தவர்கள் தங்களது சர்ச்சில் சொல்லி தங்களுக்கு எங்கிருந்து எல்லாம் கடிதம்
வருகிறதோ அதிலெல்லாம் கன்னிமேரி மாவட்டம் என எழுதி அனுபச்சொன்னார்கள்.அவ்வாறே கடிதங்களும் வந்துக்கொண்டிருந்தது.
இது நமக்கு தகவலை உறுதி படுத்தியது.இராமநாதபுரத்தில் ஒரு லட்சம் பேரை மதம் மாற்றப்போவதாகவும்,அவர்களின் பெயர்களையும் வெளியிட்டார்கள்,இவை அனைத்தும் வெளீப்படையாக நடந்தன. சேலத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஈ.வெ.ரா. தூண்டுதலால் விநாயகர் சிலைகள் துடப்பத்தால் அடிக்கப்பட்டு தெரு முச்சந்தியில் வைத்து உடக்கப்பட்டது.இந்த இந்துக்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிகளை தடுக்கவும்,இந்துக்களுக்காக வாதாட,போராட,பரிந்து பேச ஒரு இயக்கம் தேவை என் எண்ணியது சங்கம்.
கரூர் கூடிய மாநில குழு கூட்டம் இயக்கத்திற்க்கான பொறுப்பை திரு.கோபால்ஜீயிடம் தந்தது.இந்து ஆலயப்பணிக்காக நிறைய போராடி இருக்கிறார்.அவர் இந்து மக்கள் முன்னனி என்ற அமைப்பை நடத்தி வந்தார்.அதன் பெயரை சுருக்கி இந்து முன்னனி என வைத்தால் மக்கள் மனதில் பதியும் என் எண்ணி சங்க அதிகாரிகளிடம் அனுமதி கேட்க்கப்பட்டது. அனுமதி தரப்பட்டதுடன் ரூ.35 கொடுத்து இயக்கத்தை உருவாக்கி கட்டமைக்கும் பொறுப்புடன் கன்னியாகுமரி அனுப்பிவைக்க்ப்பட்டார் கோபால்ஜீ.அன்று முதல் இன்று வரை 87 வயதிலும் ஓய்வில்லாமல் சுற்றுபயணம் மேற்கொண்டு இந்துக்களுக்காக பல சாதனைகள் படைத்து வருகிறார்,