Sunday 27 April 2014

v.kalathur வ.களத்தூர் விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் இலவச டியூஷன் சென்டரின் முதலாம் ஆண்டு விழா நேற்று வ.களத்தூர் பிள்ளையார் கோவில் திடலில் வேகு விமரிசையாக நடைபெற்றது.

சுமார் என்பது மாணவ மாணவியர்கள் இன்று இந்த இலவச டயுசன் சென்டரில் பயின்றுவருகிறார்கள். விவேகானந்தர் மன்றத்தினால் நடத்தப்படும் இலவச பயிற்சிவகுப்பானது தன்னார்வ ஆசிரியைகளால் மிகக்குறைந்த தொகையை சம்பளமாக பெறுபவர்களின் சீரிய தொண்டினால் நடைபெற்றுவருகிறது..

நேற்று நடைபெற்ற விழாவில் வ.களத்தூர் ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க, மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியுடன் இனிதே நடைபெற்று முடிந்தது.

இலவச டியுசன் செண்டர் நடத்த இன்றுவரை தங்களால் இயன்ற நிதியுதவியை தன்னலம் பாராமல் தந்து உதவும் நல்ல உள்ளங்களுக்கும்,
மிகக்குறைத்த தொகையை சம்பளமாக பெற்று தங்கள் கடும் உழைப்பை தந்துவரும் ஆசிரியைகளுக்கும்,
மாணவ மாணவிகளை அனுப்பி பயிற்சி வகுப்பு நன்றாக நடைபெற காரணமாக இருக்கும் பெற்றோர்களுக்கும்,

விவேகானந்தர் இளைஞர் மன்றத்திற்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பு நல்கும் ஊர் பிரமுகர்களுக்கும் விவேகானந்தர் மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 




0 comments:

Post a Comment