Thursday 1 May 2014

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்  வரும்  4ம் தேதி தொடங்கி 28 வரை நீடிக்கிறது. பெரும்பாலான நகரங்களில் இப்போதே வெயில் 1000 டிகிரியை தாண்ட்டியுள்ளது. 
வெயிலின் கொடூரத்தால், பகலில் அனல் காற்றும் வீசுகிறது. பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. இந்நிலையில்  நேற்று தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. . இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 3ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
கோடையின் வெப்பம் வாட்டி வதைக்கும் நேரத்தில் இதுபோன்று பெய்யும் திடீர் மழை மக்கள் மனதுக்கு மகிழ்ச்சையை கொடுக்கிறதது.
எனினும் இந்த ஆண்டு கோடை வெயிலின் வெப்பம் அதிகமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.v.kalathur seithi


நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment