Tuesday 29 April 2014



பெரம்பலூர் அருகேயுள்ள புகழ்பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 29) இரவு நடைபெறுகிறது.
விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை மூலவர் அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 11 மணியிலிருந்து 30-ம் தேதி காலை 10 மணி வரை பூச்சொரிதல் விழாவும் நடைபெறுகிறது.
தொடர்ந்து, மே 6 இரவு 12 மணிக்கு பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், அதிகாலை 4 மணியளவில் மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, நாள்தோறும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பரிவார தெய்வங்களுடன் மே 14 வரை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 15-ம் தேதி காலை 10.30-க்கு நடைபெறுகிறது. சிறுவாச்சூரில் உள்ள பிரதான வீதிகள் வழியே இழுத்துச் செல்லப்படும் திருத்தேர் மாலையில் நிலைக்கு வந்தடையும். தொடர்ந்து, 16-ம் தேதி உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஊஞ்சல் நிகழ்ச்சி, 17-ம் தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலா, 19-ம் தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏறுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை, திருச்சி உதவி ஆணையரும், தக்காருமான து. ரத்தினவேல் பாண்டியன், செயல் அலுவலர் இரா. சங்கர சுந்தரேஸ்வரன் ,விழா குழுவினர் செய்தனர். v.kalathur seithi

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment