Tuesday 29 April 2014


பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், மருதையான் கோவில் அருகே உள்ள வரிசைப்பட்டி கிராமத்தில் வரதராஜன் கல்வி அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 மற்றும் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறையில் உயர் கல்விக்கு பலனளிக்கும் வகையில் இலவசமாக கணினி பயிற்சி வகுப்பு மற்றும் ஆங்கிலத்தில் தடையின்றி பேச, எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் மே 7-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு அரியலூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருதையான் கோவில் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களிலிருந்து காலை 9 மணிக்கு கல்லூரி பேருந்து இயக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04329-295225, 9842057711 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். v.kalathur seithi

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment