சீமானூர் பிரபு முன்னாள் திமுக அமைச்சர் KN நேருவின் பினாமி என்பது நம்மில் பலர் அறிந்த ஒன்று. திமுக வைப் பொறுத்தவரை குறுநில மன்னர்கள் போல் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெரிய தலை இருக்கும். அப்பகுதிகளில் அவர்கள் வைத்ததுதான் திமுகவை பொறுத்தவரை சட்டம். திருச்சியில் நேரு குறுநில மன்னர் என்றால் வேலூரில் துரைமுருகன், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் , அவருக்கு பிறகு அவரது மகன் . இதுதான் திமுகவைப்பொருதவரை நிதர்சனம்.
உண்மை நிலவரம் இவ்வாறு இருக்கையில் நேரு தனது குறுநில மன்னருக்கான கோட்டவில் பெற்ற சீட்டில் தான் அவரின் பினாமி சீமாநூர் பிரபு திமுக சார்பாக நிறுத்தப்பட்டிருக்கிறார். ஒரு பினாமி எந்த அளவுக்கு பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு நன்மை செய்துவிட முடியும் என்பதை நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். நேரு தனது சாம்ராஜ்யத்தை காக்க தேர்ந்தெடுத்த ஒரு பினாமி நமக்கு என்ன செய்துவிடமுடியும்...?
அடுத்த பிரதமர் பாஜகவின் நரேந்திர மோடி என்று உறுதிப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் திமுகவின் சீமானூர் பிரபு ஜெயித்தாலும் அதனால் பெரம்பலூர் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. ஏனெனில் எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகும் அவர் 2G பற்றி நாடாளுமன்றத்தில் கூச்சல் போடமுடியுமே தவிர நமக்கு எதுவும் செய்ய வாய்ப்பு இல்லை.
அதிமுக சார்பில் போட்டியிடும் மருதைராஜா அம்மாவை மீறி ஒரு வார்த்தைகூட பேசமுடியாது. இந்த லட்சணத்தில் எங்கே நமக்காக நாடாளுமன்றத்தில் பேசப்போகிறார்.. மேலும் அவரும் மோடி அரசின் அங்கமாக அமையப்போவது இல்லை.
பாரிவேந்தர் என்றழைக்கப்படும் பச்சமுத்து IJK கட்சிக்கு பாஜக கூட்டணியில் வழங்கப்பட்ட ஒரே ஒரு தொகுதியான பெரம்பலூரில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு வரும் முன்பே இவர் கல்வித்துறையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி காட்டியவர். இவர் பணம் சம்பாதிக்க கண்டிப்பாக வரவில்லை என்பது இவரின் சொத்து மதிப்பை பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.
வேறு என்ன நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்திருந்தாலும் அவர் பாஜக வின் தேர்தல் சின்னமான தாமரை யில் போட்டியிடுகிறார். அவர் வெற்றிபெற்றால் பாஜக MP யாகவே கருதப்படுவார். பாஜக ஆட்சிபீடத்தில் அமரும் வேளையில் அதன் MP யாக இருக்கும் பாரிவேந்தர் ஆளும் கட்சி MP என்ற முறையில் உரிமையுடன் அவர் பெரம்பலூர் தொகுதிமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கேட்டு பெறலாம்.
பாரிவேந்தரின் தனிப்பட்ட செல்வாக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதல், அடுத்த பிரதமர் மோடி வரை, அனைவரையும் தனது SRM பல்கலைகழக விழாக்களுக்கு அழைத்துவந்து தனிப்பட்டமுறையில் பேசும் செல்வாக்கு கொண்டவர். இத்தகைய செல்வாக்குடன் ஆளும் கட்சி MP என்ற உரிமையில் அவர் பெரம்பலூர் தொகுதிக்காக கேட்கும் எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றமுடியாதா என்ன.....?
சிந்தித்து வாக்களிப்போம் பெரம்பலூர் சொந்தங்களே.... நமக்கு தேவை, நேருவின் பினாமியா......? அம்மாவின் அடிமையா... அல்லது பாரிவேந்தரா...?
RSS Feed
Twitter
Wednesday, April 23, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment