திருமாந்துறை டோல்கேட்டில் ரூ.4½ லட்சம் சிக்கியது
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அனுமதியின்றி பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திருமாந்துறை கைகாட்டியில் வாகன சோதனை சாவடியில் பெரம்பலூர் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் கஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் சோதனை மேற்கொண்டார்.
அப்போது கடலூர் மாவட்டம் அனுமந்தராமபுரத்தை சேர்ந்த ஜெய்சங்கர் மனைவி சுமதி (வயது 30) திருச்சிக்கு ரூ.2½ லட்சம் பணத்துடன் நகை வாங்குவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். இந்த பணத்துக்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை. எனவே இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெரம்பலூர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதே போல் புதுச்சேரி ஆனந்த் நகரை சேர்ந்த முருகன் (58) ரூ.2 லட்சம் பணத்துடன் பழனிக்கு சென்று கொண்டிருந்தார். உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் தமிழ்செல்வன், செஞ்சேரி பிரிவு சாலையில் வாகன சோதனை செய்தார். அப்போது துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டியை சேர்ந்த மதுபாலன் கொண்டு வந்த ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 840 கொண்டு சென்றார். உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நன்றி-தினத்தந்தி
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அனுமதியின்றி பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திருமாந்துறை கைகாட்டியில் வாகன சோதனை சாவடியில் பெரம்பலூர் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் கஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் சோதனை மேற்கொண்டார்.
அப்போது கடலூர் மாவட்டம் அனுமந்தராமபுரத்தை சேர்ந்த ஜெய்சங்கர் மனைவி சுமதி (வயது 30) திருச்சிக்கு ரூ.2½ லட்சம் பணத்துடன் நகை வாங்குவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். இந்த பணத்துக்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை. எனவே இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெரம்பலூர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதே போல் புதுச்சேரி ஆனந்த் நகரை சேர்ந்த முருகன் (58) ரூ.2 லட்சம் பணத்துடன் பழனிக்கு சென்று கொண்டிருந்தார். உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் தமிழ்செல்வன், செஞ்சேரி பிரிவு சாலையில் வாகன சோதனை செய்தார். அப்போது துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டியை சேர்ந்த மதுபாலன் கொண்டு வந்த ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 840 கொண்டு சென்றார். உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நன்றி-தினத்தந்தி
RSS Feed
Twitter
Saturday, March 08, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment