Thursday 6 March 2014

வேப்பந்தட்டை அருகே உள்ள பசும்பலூர் கிழக்கு காலனித் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சக்திவேல் (27). விவசாயத் தொழிலாளி. வெள்ளுவாடி கிராமம் சோழன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகள் கவிதா (15) 10-ம் வகுப்பு மாணவி.  கவிதாவும், சக்திவேலும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனராம். இதனிடையே, திருமணம் செய்து வைக்கக்கோரி கவிதாவின் பெற்றோரிடம் சக்திவேல் தெரிவித்ததற்கு, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சக்திவேல் புதன்கிழமை விஷம் குடித்தார். இதையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை பெரியசாமி அளித்த புகாரின்பேரில், வி. களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment