Wednesday 5 March 2014

தேர்தலில் எந்த வேட்பாளருக்கு, எந்தச் சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை வாக்குச் செலுத்திய உடனேயே வெளிவரும் காகித ஸ்லிப் மூலம் வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் புதிய முறை சோதனை அடிப்படையில் இந்த மக்களவைத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த தேர்தல்களில் இதுபோன்ற வசதி இல்லை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த உடன் அதை உறுதி செய்யும் விதத்தில் காகித ஸ்லிப் ஒன்று வெளியே வரும். அதில் எந்த வேட்பாளருக்கு எந்தச் சின்னத்தில் வாக்களித்தோம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இந்த காகித ஸ்லிப் பின்னர் அருகில் உள்ள சீலிடப்பட்ட பெட்டிக்கு அதுவாகவே சென்றுவிடும்.
இதற்காக 20,000 காகித ஸ்லிப் வழங்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இவை குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் வைக்கப்படும்.


நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment