Friday 7 March 2014

காந்தி படுகொலைக்கும் RSS அமைப்புக்கும் தொடர்பு இல்லை என தெளிவாக உச்சநீதிமன்றம் தீர்ப்புவழங்கி ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால்  RSS மீது அவதூறு சுமத்தி முஸ்லிம்களை தாஜா செய்யலாம் என ராகுல்காந்தி கருதி  காந்தி கொலையையும் RSS யும் தொடர்புபடுத்தி பேசியுள்ளார் . இவரின் முப்பாட்டன் பண்டித நேரு RSS தான் காந்தியின் கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டி தடைசெய்தார். அவரே RSS தேச சேவையை பாராட்டி 1963 ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர அணிவகுப்பில், RSS அமைப்பை முழு சீருடையுடன் கலந்துகொள்ள அழைத்தார் என்பது  என்பது வரலாறு.

            இப்போது  மகாராஷ்ட்ரா மாநிலம் பிவாண்டியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நேற்று பேசிய ராகுல்ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் மகாத்மா காந்தியை கொலை செய்தனர். ஆனால்  இப்போது அவர்கள் காந்தியை பற்றி பேசுகின்றனர். என்று கூறினார்,
இந்த நிலையில், ராகுல் காந்தியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் ராம் மாதேவ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காந்தி கொலை தொடர்பாக பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம். தேர்தல் கமிஷனிடம் புகார் அளிப்போம் என்றார்.

0 comments:

Post a Comment