Tuesday 4 March 2014

பெரம்பலூர்,
பெரம்பலூர் எம்.பி. தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா நேற்று கவுல்பாளையத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை அமைச்சர் பூனாட்சி மற்றும் ரத்தினவேல் எம்.பி. தொடங்கிவைத்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்
பெரம்பலூர் அருகே உள்ள கவுல் பாளையத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மருதராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி கவுல்பாளையம் ஊராட்சி முகப்பு, ஊரின் பிரதான வீதிகள் மற்றும் கல்உடைக்கும்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் காளியம்மன் நகர் பொதுமக்களிடம் ஓட்டுசேகரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, எம்.பி ரத்தினவேல், வேளாண் வணிக வாரியத்தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் சிவபதி, பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்செல்வன் ஆகியோர் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரசாரத்தின் போது அரசின் சாதனை திட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி ஓட்டுசேகரித்தனர்.
நிர்வாகிகள்
ஓட்டு சேகரிப்பில் பெரம்பலூர் நகர செயலாளர் ராமச்சந்திரன், நகராட்சி தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன், புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி, கண்ணுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜாராம், மாவட்ட அணி நிர்வாகிகள் செல்வகுமார் (இளைஞர் பாசறை) கார்த்திகேயன்(ஜெ.பேரவை) ராஜேஸ்வரி, (மகளிரணி) மாவட்ட நிர்வாகிகள் பூவைசெழியன், ராணி, கவுரி ஜெ.பேரவை ஒன்றியத்தலைவர் எசனை பன்னீர் செல்வம், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகரன், காடூர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி-தினத்தந்தி.

0 comments:

Post a Comment