Wednesday 5 March 2014

 vkalathur வ.களத்தூரில் வரும் மார்ச்-9 அன்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சிறப்புமுகாம் நடைபெருகிறது . இதனைபயன்படுத்தி , இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போதைய பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்க......... இதில் சொடுக்குங்கள் http://vkalathurseithi.blogspot.in/2014/01/blog-post_10.html

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப். 24-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதியும் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் மார்ச் 9-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment