Tuesday 16 December 2014


பாட்னா:பீகார் மாநிலம் பீளகஞ்ச்சட்டசபை தொகுதி  ராஷ்டிரிய ஜனதா தல எம்.எல்.ஏ  சுரேந்திர பிரசாத் யாதவ். இவர்கடந்த ஞாயிற்று கிழமை கயாவிற்கு சென்று விட்டு பீளகஞ்ச் திரும்பி கொண்டு இருந்தார்.  வரும் வழியில் கயா திகிரி ரோட்டில் உள்ள ஸ்ரீராம் தில் குத் பந்தர் என்ற சுவீட் கையில் நிறுத்தி உள்ளார். அங்கு சுவீட் வாங்க சென்று உள்ளார். அப்போது சுவீட் கொடுக்க நேரமாகி உள்ளது இதில் சுவீட் கடை உரிமையாளர் திரேந்திர குமாருக்கும் எம்.எல் ஏவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.

 இதில் கோபம் அடைந்த சுவீட் கடை உரிமையாளர் திரேந்திர குமார் கொதிக்கும் எண்ணெய்யை எம்.எல்.ஏ மற்றும்  அவரது உதவியாளர் மீது ஊற்றினார் இதில் எம்.எல் ஏயின்  காது மற்றும் கழுத்துபகுதியில் காயம் ஏற்பட்டது உடனடியாக இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.இது குறித்து எம்.எல்.ஏ சுரேந்திர பிரசாத் போலீசில் புகார் செய்து உள்ளார். சுவீட் கடை உரிமையாளரும். எம்.எல்.ஏ குறித்து போலீசில் புகார் செய்து உள்ளார்.

-தினத்தந்தி.

0 comments:

Post a Comment