Saturday 20 December 2014


முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துகொள்வதற்காக மட்டும் வேறு மதப் பெண்கள் முஸ்லி மாக மதம் மாறினால் அது செல்லாது என அலாகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதி கள், திருமணமான தம்பதி என்ற முறையில் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இத்தம்பதி களில் ஆண்கள் முஸ்லிம்கள், பெண் கள் இந்து மதத்திலிருந்து திருமணத்துக்காக முஸ்லிமாக மாறியவர்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி சூர்ய பிரகாஷ் கேசர்வாணி இம்மனுக் களைத் தள்ளுபடி செய்து தீர்ப் பளித்தார். தீர்ப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டிய அவர், “இஸ்லாம் மதத்தின் மீதான உண்மையான நம்பிக்கையின்றி, திருமணத்துக்காக மட்டும் முஸ்லி மாக மதம் மாறுவது செல்லாது” எனக் குறிப்பிட்டார். 

0 comments:

Post a Comment