Wednesday 29 October 2014

வ.களத்தூர் கல்லாற்றில் புதுவெள்ளம் புரண்டோடுகிறது. கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளான பூலாம்பாடி, அரும்பாவூர் மற்றும் மலையாலப்பட்டி பகுதிகளில் அதிக மழை பெய்யாத காரணத்தால் நம் கல்லாற்றில் வெள்ளம் வரவில்லை. கடந்த சில நாட்கள் வரை இதுதான் நிலைமை.


ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக நுரை வெள்ளமாக காட்டுத்தண்ணீர் வந்தது.
நேற்று இரவு கல்லாற்றில் நீர்பிடிப்பு பகுதியான பூலாம்பாடி பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக செந்தண்ணீர் வருகிறது. இரு கரைகளையும் தொட்டுக்கொண்டோடும் கல்லாற்றுநீரை காண கண்கோடி வேண்டும்.



பட உதவி- சுரேஷ்.A, கண்ணன்.R.

0 comments:

Post a Comment