Monday 23 June 2014


 தனிமனித பிரச்சினை காரணமாக செய்யப்பட கொலை போன்ற தோற்றத்தை சுரேஷ்ஜி வரை நிறுவ தமிழ் ஊடகங்களும் தமிழக ஓட்டுபொறுக்கி முதவரும் முயலுகிறார்கள். மக்களை மட்டுமல்லாது பாஜகவினரையும் நம்ப வைக்கும் வேலையில் அவர்கள் ஜெயித்துவிட்டதாகவே தோன்றுகிறது.பாஜகவின் அறிவு கொழுந்துகளில் ஒருவர் எனக்கருதப்படும் தமிழிசை யின் status அதைத்தான் காட்டுகிறது.

அர்ஜுன் சம்பத் கூறுவதுபோல் இது இஸ்லாமிய ஜிகாதிகளின் ஒரு சதிவேலை என்று காவல்துறையும் , காவல்துறைக்கு ஏவலாளியாக இருக்கும் ஆத்தாவுக்கும் தெரியாமல் இல்லை . ஆனால் தமிழக இந்து தலைவர்கள் கொல்லப்படும் விசயத்தை ஜிகாதிகளின் சதிவேலையாக கருதி நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் இஸ்லாமியர்களின் ஒட்டு கிடைக்காது என்று கருதி திசைதிருப்பும் வேலையில் இரங்கியிருக்கிறார்கள் .

இந்த உண்மை தமிழக பாஜக தலைவர்களுக்கு தெரியாமல் போனதா.. அல்லது தெரிந்தே மௌனமாக இருக்கிறார்களா என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. சுரேஷ்ஜி படுகொலையை தமிழக பாஜக தலைவர்கள் ஏன் CBI க்கு மாற்றக்கூடாது என்று கேட்கவில்லை.......? சரி அவர்கள்தான் கேட்கவில்லை என்றால் இந்துமுன்னணி போன்ற பாதிப்புக்குள்ளான இந்து அமைப்பு தலைவர்கள்கூட இதுபற்றி வாய் திறக்காது வருத்தமளிப்பதாக உள்ளது.

சுரேஷ்ஜிக்கு முன்னர் கொல்லப்பட்ட வர்கள் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட பண்ணா இஸ்மாயில் கூட்டத்தினால் என்றால், அவர்கள் சிறையில் இருக்கும்போது யார் சுரேஷ்ஜியை கொன்றிருக்க முடியும்... என்ற வினா நம் மனதில் இயல்பாக எழுவதில் வியப்பில்லை.

நேற்று சேலம் நீதிமன்றத்தில் மூன்று முஸ்லிம்கள் குஜராத்தில் பாஜக கட்சித்தலைவரை கொலை செய்தது தொடர்பாக சரணடைந்தார்கள் என்ற செய்தியை கூர்ந்து கவனிக்கும்போது இந்து தலைவர்கள் கொலைபிரச்சினை என்பது இந்திய அளவிலானது என்பது மட்டுமல்லாது இது மிகப்பெரிய இஸ்லாமிய ஜிகாதிய சதித்திட்டத்தின் ஒரு அங்கம்தான் சுரேஷ்ஜி படுகொலை என்பது தெரியவருகிறது. அதோடு எந்தஒரு அடித்தளமும் இல்லாமல் குஜராத்தில் கொலைசெய்துவிட்டு சேலத்தில் சரணடையவேடிய காரணம் இருப்பதற்கில்லை. ஏற்கனவே கேரளா முஸ்லிம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதையும்,  இந்து தலைவர்கள் கொலைசெய்யப்படும் சம்பவங்களையும் தொடர்பு படுத்திபார்க்கும்போது இது மிகப்பெரிய ஜிகாதி சதித்திட்டம் என்பதை நாம் அறியலாம்.

சமீபத்தில் உத்திர பிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும்  உத்திராகண்ட் மாநிலங்களைச்சேர்ந்த பாஜக மற்றும் இந்து மத இயக்க தலைவர்கள் கொல்லப்பட்டுவரும் சம்பவங்களை  இஸ்லாமிய பயங்கரவாத ஜிகாதி சத்திட்டம் என்ற முறையில் அணுகினால் மட்டுமே இதற்க்கு தீர்வு காணமுடியும். அகில இந்திய அளவில் விரவிக்கிடக்கும் இந்த ஜிகாதி சத்திட்டங்களை மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்போ, தேசிய தீவிரவாத தடுப்பு அமைப்போ விசாரித்தால் மட்டுமே உண்மை குற்றவாளிகளை கண்டு களைய முடியும். பண்ணா இஸ்மாயில், போலிஸ் பக்ருதின் கூட்டம் தமிழகத்தில் கொலைகளை நிகழ்த்திவிட்டு ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருந்ததை நாம் மறந்துவிடலாகாது என்பதோடு அவர்கள் பிடிபட்டதாலேயே இப்படுகொலைகள் நின்றுவிடவில்லை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

தமிழக காவல்துறை உண்மையான கொலையாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கும் என நாம் நம்பவும் முடியாது. அரவிந்த் ரெட்டி கொலையை கூலிப்படை செய்தது என்று கதைகட்டியதோடு கள்ளக்காதல்தான் காரணம் என கூறியவர்கள் தானே இந்த காவல்துறை.

இறுதியாக இந்த ஜிகாதி படுகொலைகளை மத்திய அரசின் புலனாய்வுத்துறைகள் விசாரித்தால் மட்டுமே  வரும்காலங்களில் இந்து மத அமைப்பு தலைவர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியும். இதை செய்ய தமிழிசை... பொன்னார் போன்ற பாஜகவினர் மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை கொண்டவர்கள்... இது நடக்காவிட்டால் மறுபடியும் மற்றொரு தலைவர் கொல்லப்படும் நாளை எதிர்பார்த்து காத்து இருக்கவேண்டியதுதான் .


0 comments:

Post a Comment