Friday 15 August 2014

இன்று காலை சுமார் 9.30 மணியளவில் ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளியில் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த மருத்து பரிசோதனையின் போது மார்பக புற்றுநோய், கர்பபை புற்றுநோய், பிபி மற்றும் சுகர் போன்றவை பரிசோதிக்கப்பட்டது. இது வ.களத்தூர் அரசு மருத்துவமனை சார்பாக பெண்கள் நலத்திட்டத்தின் கீழ் இந்த மருத்து முகாம் நடைபெற்றது. இதில் 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பி.பி மற்றும் சுகர் போன்றவை பரிசோதிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் பயனடைந்தனர்.



0 comments:

Post a Comment