Tuesday 25 September 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு வ.களத்தூர் பிள்ளையார் கோவில் திடலில் நடைபெற்ற ஊர் பொதுக்கூட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் இன்று   (26.09.2018) புதன் வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற உள்ளது...

அருகில் உள்ள இந்து சமுதாய மக்களின் ஆதரவு கோரி வ.களத்தூர் கிராம பொதுமக்கள். V.kalathur vkalathur 

0 comments:

Post a Comment