Saturday 18 January 2014

புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 2700 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு 1800 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இளைஞர்கள், மாற்றுத்திறானாளிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் புதுவாழ்வுதிட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல். 



தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய 3-ஒன்றியங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் குழுவில் சேராத இலக்கு மக்களை ஒருங்கிணைத்து மகளிர் சுயஉதவி குழு மற்றும் மாற்றுத்திறனாளி குழு அமைப்பது, திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவது 18-வயது முதல் 35-வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் ஓட்டுநர் பயிற்சி, JCB ஆப்ரேட்டர், CNC ஆப்ரேட்டர், வெல்டிங், சமையல் கலை, அழகு கலை போன்ற தொழிற்திறன் பயிற்சி வழங்குவது மேலும்,  பிரபல நிறுவனங்களான TVS, L&T, MRF, கார்மென்ட்ஸ் கம்பெனிகளில்  நேரடி வேலை வாய்ப்பையும் பெற்று தருவது மட்டும்  அல்லாமல் ஒத்த தொழில் குழுக்களை உருவாக்குதல் போன்ற பணிகள்  சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இலக்கு மக்கள் குடும்பங்கள் மற்றும் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு அரசு நலதிட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்தலுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செயல்பாடுகளுக்காக 103 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கான மொத்த நிதியாக ரூ.16.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதில் முதல் தவணையாக, 6.75/-கோடி வழங்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத நிதியில் 2872 மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர்களுக்கு அத்தியாவசிய தேவை மற்றும் வாழ்வாதாரம் நடவடிக்கைகளுக்காக ரூ.251/-இலட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணையாக 6.75/-கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மண்டல மதிப்பீட்டு அணியினர் ஆய்வு செய்த பின்னர் 25 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு 1.71/-கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் 934-மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 17/-கோடி வங்கி இணைப்பையும் சுமார் 2700 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில் 1800 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள நபர்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்றுதருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு    3-ம் தவணை நிதி மற்றும் அமுதசுரபி நிதிகள் பெற தற்சமயம் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள், மாற்றுத்திறானாளிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் புதுவாழ்வுதிட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். பெரம்பலூர்.

0 comments:

Post a Comment