Sunday 18 May 2014

 ஒரு வருடத்திற்கு முன்பு  பாஜக மற்றும் இந்து அமைப்பைச்சேர்ந்த தலைவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டபோது தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் காவல்துறை இந்த படுகொலைகளை கந்துவட்டி, கள்ளக்காதல், முன்விரோதம் நில அபகரிப்பு என்ற கட்டுக்கதைகளை பரப்பிவிட்டு கிடைத்தவர்கள் மீது கேசைபோட்டு வழக்கை முடிக்க நினைத்தது. வேலூர் அரவித் ரெட்டி முதல் சேலம் ரமேஷ் ஜி வரை இதுதான் நடந்தது.

 நடந்துமுடித்தநாடாளுமன்ற தேர்தல் பிரச்சார நேரத்தில் ஆரம்பம் முதலே பாஜக மீது தாக்கி பேசாமல் இருந்த காரணம் இவர்களெல்லாம் எங்கு வெற்றிபெறப்போகிரர்கள்  நினைப்புதான்.. ஆனால் உளவுத்துறையின் அறிக்கையில் பாஜக கூட்டணி பெரும் வெற்றிபெறும் என்று கூறியதன் காரணமாக பாஜகவை தாக்கி பேச ஆரம்பித்தார். மேலும் TNJ அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியபிறகு துலுக்கனின் ஒட்டு பறிபோய்விடும் என்று முஸ்லிம்களை சமாதானப்படுத்த மோடியை தாக்கி பேசுகிறார்.

இந்து அமைப்பைச்சேர்ந்த அனுதாபிகள் அதிமுக மற்றும் பாஜக வை  இரட்டைக்குழந்தைகள் போன்று பாவிக்க காரணம் பாஜக வின் குறிப்பாக பாஜக தலைவர்களின் அதிமுக பாசம்தான் காரணம் . அதனால்தான் பாஜகவை ஆதரிக்க முடியாத காலக்கட்டங்களில் அதிமுகவை ஆதரிக்கிறார்கள். 

ஆனால் இந்து சிந்தனைகொண்ட தமிழக மக்களை தேவைக்கு ஏற்றாற்போல் ஜெயலலிதா பயன்படுத்திகொள்கிறார், முஸ்லிம்களின்  7 சதவீத இடஒதுக்கீட்டிற்கு கடிதம் எழுதும் ஜே .. TNJ  கூட்டணிக்குத்தான் ஆசைப்பட்டாரே தவிர பாஜகவோடு கூட்டணியை எள்ளளவும் விரும்பவில்லை.  இந்து சிந்தனை கொண்டவர் என்ற முகத்தை வைத்துக்கொண்டு நம்மை ஏமாற்றுகிறார்.

தமிழக பாஜக என்று அதிமுக எதிர்ப்பு நிலை எடுக்கிறதோ அன்றுதான் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும். இது தெரிந்தும் அதிமுக கூன்பாண்டிகளுக்கு இணையாக பாஜக தலைவர்கள் அதிமுக வெற்றிப்  புராணம் பாடுகிறார்கள். பாஜக கூட்டணி பல இடங்களில் தோற்க காரணமாக இருந்தது ஜெவின் பணபட்டுவாடா எனத்தெரிந்தும்  ராதாகிருஷ்ணன் ஜெவின் வெற்றிக்கு அவரின் நிவாக திறமை என்று பாராட்டுகிறார்.

மாநிலங்களைவையில் அதிமுக ஆதரவு தேவை என்பதற்காக பாஜக வின் தேசிய தலைமை ஜெவிற்கு அனுதாபம் காட்ட முனையலாம். ஆனால் தமிழகத்தில் பாஜக வளரவேண்டும் , 2016 சட்டசபைத்தேர்தலில் சிறந்த ஒரு வெற்றியைபெற, அதிமுக எதிர்ப்பு மனநிலையை எடுத்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலையை தமிழக பாஜக தலைவர்கள் தேசிய தலைமைக்கு உணர்த்தியே ஆகவேண்டும். 

ஆனால் நிலைமை வேறுவிதமாக உள்ளது..

///தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர், முரளீதர ராவ் பேட்டி: 

லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பா.ஜ.,வுடன் பல விஷயங்களில், அக்கட்சிக்கு ஒத்த சிந்தனையே உள்ளது. எனவே, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, பிந்தைய நாட்களில், கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.////


தி.மு.க. மற்றும் அ.தி.மு. க.வுக்கு பல்லக்கு தூக்குவதுடன், ஜெ. வும் மோடியும் நண்பர்கள் என்று பொன். ராதாகிருஷ்ணனும், நாளை ஜெ. வுடன் பா.ஜ.க கூட்டணி சேரலாம் என்று முரளீதரராவும் சொல்கிறார்கள் என்றால், அந்த கட்சிகளுக்கு "பகுதி நேர ஊழியர்களாக(அடிமைகளாக)" செயல் படுகிறார்கள் என்றால் பா.ஜ.க. கட்சி தொண்டன் மட்டும் முழுநேர பா.ஜ.க. ஊழியனாக இருக்க வேண்டுமோ?

மோடி வேறு அனைவருக்கும் எதிரி என்பது போல், ஜெ. மற்றும் மோடியின் நட்பை பற்றி, தான் ஜெயித்த பிறகு மெச்சும் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தலுக்கு முன்னர் மெச்சிக் கொண்டிருக்க வேண்டியது தானே! அல்லது தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. பிரச்சாரம் செய்தது போல் "ஜெ. க்கு போடும் ஓட்டு மோடிக்கு போடும் ஓட்டு" என்று கூன்பாண்டியாய் மாறி பிரச்சாரம் செய்திருக்க வேண்டியது தானே! இன்று பொன்.ராதாகிருஷ்ணன் மெச்சுவது போல் ஜெ. மோடி நட்பை பா.ஜ.க தொண்டன் மெச்சியிருந்தால் ராதாகிருஷ்ணன் வென்றிருப்பாரா?

கட்சித்தலைமை வேறு கட்சிகளுக்கு பல்லக்கு தூக்குவது போல் இங்குள்ள தொண்டர்கள் மாறிவிட்டால் பா.ஜ.க.விற்கு போஸ்டர் ஒட்டவும் ஆள் இல்லாமல் போய் விடும். இது எச்சரிக்கை!

மோடி மற்றும் ஜெ. நட்பை பாராட்டி புழங்காகிதம் ஆக பா.ஜ.க வின் தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.


 மலைச்சாமிக்கு இருக்கும் மானம் ரோஷம் கூட பா.ஜ.க. தலைவர்களுக்கு இல்லாமல் போனதே! 


தமிழக பாஜக வை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்....


கட்டுரை உதவி-  சுந்தரபத்மன் தமிழ் எலக்ட்ரிக்கல் டெக்னீஷியன்.

0 comments:

Post a Comment