Tuesday 20 May 2014

v.kalathur வ.களத்தூரில்  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற பெரும் வெற்றியை மக்களோடு மக்களாக கொண்டாடும் விதத்தில் அன்னதானம் வ.களத்தூர் மேட்டுச்சேரியில் பெரம்பலூர் நகர கழக செயலாளர் RTR என அழைக்க்கப்படும் RT ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.


இன்று காலை நடைபெற்ற அன்னதான விழாவில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பசியாறினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை வ.களத்தூர் ஊராட்சி கழக கிளைச்செயலாளர் S P ரவி (காவ்யா ரவி) அவர்கள் முன்னின்று செய்தார்கள். விழாவில் S . கண்ணுசாமி, வேப்பந்தட்டை ஒன்றிய அதிமுக கழக செயலாளர், கந்தசாமி , கழக கிளை செயலாளர், M . ஜெயச்சந்திரன் வ.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.



0 comments:

Post a Comment