பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வ.களத்தூர் போலீசார் எஸ்.ஐ., மாரிமுத்து தலைமையில் நேற்று முன்தினம் இரவு வி.களத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வ.களத்தூர் கல்லாற்றில் திருட்டுத்தனமாக இரண்டு டிராக்டரில் மணல் அள்ளி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு டிராக்டர்களை மடக்கி விசாரித்தனர். அதில், திருவாளந்துறை கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (49), அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் (20) ஆகிய இருவரும் பர்மிட் பெறாமல் கல்லாற்றில் மண் அள்ளியது தெரிய வந்தது.
இது குறித்து எஸ்.ஐ., மாரிமுத்து வழக்கு பதிந்து இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தார். இது குறித்து பெரம்பலூர் சப்கலெக்டர் மதுசூதன்ரெட்டி மேலும் விசாரிக்கிறார்
- தினகரன்.
RSS Feed
Twitter
Tuesday, August 26, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment