பெரம்பலூர் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 20 பேர் மதுரை மாவட்டம், கல்லுக்குறிச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, வேனில் அவர்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை மாலை வந்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த அப்துல்சமது மனைவி காஜாமுத்து (50) உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் காயமடைந்த 10 பேரை மீட்டு சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
RSS Feed
Twitter
Friday, March 31, 2017
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment