Friday 20 December 2013

         
        
       தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் ரேசன் கார்டு மீண்டும் , மீண்டும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரேசன்கார்டு இந்த டிசம்பர் 31 தேதியுடன் காலாவதியாகிறது. ஏற்கனவே கடந்த முறை இந்த ரேசன்கார்டு ஒரு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இன்று 2 வது முறை நீட்டிக்கப்படுகிறது.
இது குறித்து முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளததாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவில் வரும் 2014 டிசம்பர் வரை நடப்பில் இருக்கும் ரேசன்கார்டு நீட்டிக்கப்படுகிறது. இதற்கென உள்தாள் அந்தந்த ரேசன்கடைகளில் விநியோகிக்கப்படும். மின்னணு குடும்ப அட்டைகள் 2014 -15 ல் தான் வழங்க முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நன்றி- தினமலர்.

0 comments:

Post a Comment