Friday 20 December 2013


தேசிய அடையாள அட்டை  (ஆதார் ) பதிவு விடுபட்டவர்களுக்கு பதிவு செய்திட இரண்டாம் கட்ட முகாம் கிராமம் மற்றும்  வார்டு வாரியாக 18.01.14 வரை நடத்தப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தேசிய அடையாள அட்டை  (ஆதார் ) பதிவு விடுபட்டவர்களுக்கு பதிவு செய்திட இரண்டாம் கட்ட முகாம் கிராமம் மற்றும்  வார்டு வாரியாக  18.01.14 வரை நடத்தப்படுகிறது என்று  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டைக்கான தகவல்களை பதிவு செய்யும் முதல் கட்ட முகாம் முடிவுற்றதை அடுத்து இரண்டாம் கட்டமாக பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தேசிய அடையாள அட்டை பெற புகைப்படம், கைரேகை, விழித்திரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்திட ஏதுவாக சிறப்பு முகாம்கள் 13.12.13 முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் 1 முதல் 21 வார்டு பொதுமக்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்திலும், பெரம்பலூர் குறுவட்ட பகுதி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், பெரம்பலூர் வட்டத்தைச்சேர்ந்த குரும்பலூர், வேப்பந்தட்டை வட்டத்தை சேர்ந்த பசும்பலூர், வாலிகண்டபுரம், வெங்கலம் ஆகிய   குறுவட்ட பகுதி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் (RI) அலுவலகத்திலும் தங்களது பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்ட முகாம்கள் கிராமம் மற்றும்  வார்டு வாரியாக 18.01.14 வரை அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிவரை நடைபெறும்.
இந்த முகாம்கள் தங்கள் பகுதியில் எந்த தேதியில் நடத்தப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.
இம் முகாமிற்கு பதிவு செய்ய வரும் பொதுமக்கள் அனைவரும் 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புதல் சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று, அசல் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்ய வரவேண்டும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர். 

வ,களத்தூர் உறவுகளே, நீங்கள் வாலிகண்டபுரம் வருவாய் ஆய்வாளரை (RI) அனுகி பதிவு செய்துகொள்ளுங்கள் .

0 comments:

Post a Comment