Saturday 21 December 2013




தமிழக முதலமைச்சர்
ஜெயலலிதா வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரும்பு உற்பத்தியைப் பெருக்க
பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வரு
கிறது. ஒவ்வொரு ஆண்டும்
கரும்புக்கான, நியாயமான மற்றும் ஆதாய
விலையை மத்திய அரசு உயர்த்தும்
போதெல்லாம், கரும்பு விவசாயிகளின்
நலனைக் கருத்தில் கொண்டு, மாநில
பரிந்துரை விலையை தொடர்ந்து வழங்கிக்
கொண்டு இருக்கிறது.
அந்த வகையில், 2011-2012 ஆம்
ஆண்டிற்கான
கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும்
ஆதாய விலையாக டன் ஒன்றிற்கு 1,450
ரூபாய் கொடுக்கப்பட வேண்டும்
என்று மத்திய அரசு நிர்ணயம் செய்த
போது, போக்குவரத்துச் செலவு 100
ரூபாய் உட்பட கரும்புக்கான மாநில
அரசின் பரிந்துரை விலையை 650 ரூபாய்
உயர்த்தி 2,100 ரூபாயாகவும்; 2012-2013
ஆம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன்
ஒன்றிற்கு 1,700 ரூபாய் என மத்திய
அரசு நிர்ணயித்த போது, போக்குவரத்துச்
செலவு 100 ரூபாய் உட்பட கரும்புக்கான
மாநில அரசின் பரிந்துரை விலையை 650
ரூபாய் உயர்த்தி 2,350 ரூபாயாகவும்
வழங்க ஆணையிட்டேன்.
தற்போது, 2013-2014 ஆம் ஆண்டிற்கான
கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும்
ஆதாய விலையாக டன் ஒன்றிக்கு 2,100
ரூபாய் நிர்ணயம் செய்து மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது.
கரும்பு விவசாயிகள் நலன்கள்
பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக்
கருத்தில் கொண்டு, மத்திய
அரசு அறிவித்த விலையைக் காட்டிலும்,
2013-2014 ஆம் ஆண்டிற்கான மாநில
அரசின் பரிந்துரை விலையாக டன்
ஒன்றிற்கு போக்குவரத்துச் செலவு 100
ரூபாய் உட்பட 550 ரூபாய்
உயர்த்தி வழங்க நான்
ஆணையிட்டுள்ளேன். இதன்மூலம்,
கரும்பு விவசாயிகளுக்கு டன்
ஒன்றிக்கு 2,650 ரூபாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment