Sunday 22 December 2013

       பெரம்பலூர் மாவட்டத்தில் மது குற்றச் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 27-ம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பரிவு மற்றும் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மது கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் 1 கார், 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை எனது உத்தரவின்பேரில், மதுவிலக்கப் பிரிவுக் கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் முன்னிலையில் டிச. 27-ல் பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப் பரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்படுகின்றன.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் டிச. 23 முதல் 26ம் தேதிக்குள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

நன்றி - தினமணி.

0 comments:

Post a Comment