Thursday 26 December 2013


தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 28.12.2013 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 28.12.2013 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 22.12.2013 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 28.12.2013 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை தகுதியுடைய நபர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதன்படி, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான நிலம் வாங்கும் திட்டம்,  இருபாலருக்குமான நிலம் மேம்பாடு திட்டம்,  தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், பெட்ரோல் டீசல் கேஸ் மற்றும் சில்லரை விற்பனை நிலையம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம்  மருத்துவமனை, மருந்துக்கடை, கண்ணாடியகம், முடநீக்கு மையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாரா கடனுதவி விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி - 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எமுதுவோருக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர் / செலவு கணக்கர்கள் சொந்தமாக தொழில் துவங்க நிதியுதவி. உள்ளிட்ட திட்டங்களின் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிப்பவர்கள் இந்து ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பாக 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 இலட்சமாக இருக்க வேண்டும். சிறப்புத் திட்டமான பெட்ரோல் டீசல் கேஸ் சில்லரை விற்பனை நிலையம் அமைக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம்.
இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கும் , தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி - 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எமுதுவோருக்கும் குடும்ப ஆண்டு வருமான வரம்பு இல்லை. பட்டயக் கணக்கர் / செலவு கணக்கர்கள் சொந்தமாக தொழில் துவங்க மனுதாரரின் வயதுவரம்பு 25லிருந்து 45க்குள் இருக்க வேண்டும்.
                இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள்  http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை அதற்கான இடத்தில் அவசியம் பதிவு செய்ய வேண்டும். அதுபோல் திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட வேண்டும். மனுதாரரின் புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அல்லது மாவட்ட மேலாளர் தாட்கோ அலுவலகத்தில் ரூ.20/- செலுத்தி மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த அரியவாய்ப்பை தகுதியுடைய நபர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். பெரம்பலூர்.

0 comments:

Post a Comment