Thursday 26 December 2013

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்களை மிககுறைந்த வாடகையில்  இருப்பு வைத்திடலாம். இடைத்தரகர்களை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் தலைமையிலான குழு விரைவில் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்களை மிககுறைந்த வாடகையில் இருப்பு வைத்திடலாம். இடைத்தரகர்களை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் தலைமையிலான குழு விரைவில் அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவத்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு:
                விவசாயிகளுடனான வேளாண் உற்பத்திக்குழுமக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26.12.2013) நடைபெற்றது.
                இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
வேளாண் விளைபொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபம் ஈட்டும் இடைத்தரகர்களை கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சார் ஆட்சியர் தலைமையில் விரைவில் குழு அமைக்கப்படும். விவசாயிகளும் இடைதரகர்களை நம்பாமல் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்யும் விளைபொருட்களை இடைதரகர்கள் யாருமின்றி நேரடியாக பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக அதிக விலைக்கு  விற்பனை செய்திடலாம்.  ஒழுங்குமுறை கூடத்தில் மிககுறைந்த வாடகையில் இருப்பு வைத்திடலாம்.
பருத்தி பயிர்கள் நோய்தாக்குதலுக்கு உள்ளானதற்கு வழங்கப்பட்ட விதைகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விவசாயிகள் கருதுவதால் அந்த விதைகளை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அடுத்த ஆண்டில் தோட்டக்கலை பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் 5,000 ஹெக்டேரில்  தோட்டக்கலை பயிர்களை பயிரிட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களுக்கு விவசாயிகள் தங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.ஏ. சுப்பிரமணியன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு. திரு. வே. அழகிரிசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கி.கண்ணதாசன், மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள், விவசாய சங்ககங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
      செய்தி வெயீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

0 comments:

Post a Comment