Friday 22 August 2014


கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, படிப்படியாக மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதன் முன்னோட்டமாக, மாதத்தின் முதல் நாள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் மதுபானக் கடைகளை மூட திட்டமிட்டுள்ளது.
படிப்படியாக மதுபானக் கடைகளை மூடி, அடுத்த ஆண்டில் இருந்து நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் மதுபானக் கடைகளை நடத்த உம்மன் சாண்டி தலைமையிலான அரசு முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சுதந்திர தினம் உள்பட  தற்போது மதுபானக் கடைகளுக்கு விடுமுறை தினத்தை ஆண்டுக்கு குறைந்தது 52 ஆக மாற்ற அரசு திட்டமிட்டிருப்பது பல்வேறு சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

-தினமணி.

0 comments:

Post a Comment