Sunday 31 August 2014



இராமநாதபுரத்தில் 31.08.14 அதிகாலை 1.00 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து இராமேஸ்வரம் வந்த 78 பக்தர்கள் இராமநாதசுவாமியை தரிசனம் செய்துவிட்டு திருப்புல்லனை வழியாக கண்ணியகுமரி பயணம் செய்த போது எதிர் பாராத விதமாக பேருந்து தீ விபத்துக்குட்பட்டு சின்னபின்னமானது. இதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயெ பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் இராமநாதுபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தென்தமிழக மாநில செயலாளர் ஆடலரசன் மற்றும் சங்க ஸ்வயம் சேவக சகோதரர்கள் விரைந்து சென்று மீட்புப்பணியில் மாவட்ட நிர்வாகத்தோடு ஒத்துழைத்தனர்

மேலும் படுகாயம் அடைந்த நபர்களை மருத்துவமனை சென்று பார்வையிட்டு அவர்களுக்கு வேண்டிய துண்டு மற்றும் உடைகள் வழங்கினர். மேலும் அனைத்து பொருட்களையும் இழந்து பாிதவித்த பக்தர்களுக்கு திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவர் திரு முனியான்டி.மற்றும் பாஜக ஒன்றிய தலைவர் திரு இராமச்சந்திரன் ஆகியோர் அவர்களுக்கு காலை உணவு மற்றும் தேநீர் கொடுத்து உதவினர் மற்றும் திருப்புல்லானி வாழ் மகளீர் அமைப்புகள் அந்த பகதர்களுக்கு புரியாத மொழியில் ஆறுதல் கூறியது அனைவரின் நெஞசையும் நெகிழ வைத்தது.

மேலும் இராமநாதபுரம் வஉசி நகர் விநாயகர் இந்து முன்னணி கமிட்டியை சார்ந்தவாகள் அவர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் பயணம் செய்வதற்கான் பைகள் போன்றவற்றை மினி லாரி மூலம் தெரு வாழ் பொது மக்களிடம் சேகரித்து கொண்டு வந்து கொடுத்தனர். அரிமா சங்கத்தை சார்ந்த திரு சதிஷ் அவர்கள் மதியஉணவு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இவர்களின் பயண இதரச் செலவிற்காக ரவிசங்கர்ஜி பக்தர் திரு.இராமேஷ் மற்றும் உள்ளுர் சுய உதவிக் குழக்கள் மூலம ரூ 10.000 பணமாக கொடுத்தனர்.

மாவட்ட நிர்வாகம் மூலம் இரண்டு பேருந்துகளில் இவர்களை சென்னைக்கு பேருந்துகளில் அனுப்பி அங்கிருந்து இரயில் மூலம் கொல்கத்தா செல்ல ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆர்.ஆர்.எஸ் தென் மாநில செயலாளர் ஆடவரசன் மற்றும் ஜில்லா சாரிரீக் ப்ரமுக் காஜேந்திரன். மற்றும் ஜில்லா ப்ரச்சார்பரமுக் சுதேசி நா. ஆறுமுகம் ஆகியோருடன் ஸவயம் சேவக சகோதரார்கள் சேர்ந்து செய்தனர்.

நன்றி - ஆறுமுகம் நாகலிங்கம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புலானி அருகே மேற்குவங்க சுற்றுலாப் பேருந்தில் தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சனிக்கிழமை மாலை ராமேசுவரம் வந்தது. அங்கிருந்து இரவு கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் திருப்புல்லானி அருகே தாதனேந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் குளிர்சாதனத்தில் தீப்பற்றியுள்ளது. தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்தது. இதில், பேருந்தில் இருந்த 2 ஆண், 2 பெண் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரம் முழுமையாகத் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர்.


0 comments:

Post a Comment