Monday 1 September 2014


பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த 13 பேர் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, வேனில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். வேனை, விருதுநகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிவக்குமார் (45) ஓட்டினார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தனியார் கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்றபோது, முன்னால் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது வேன் மோதியது.
இதில், வேனில் பயணம் செய்த விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் காளிராஜ் (45), மாரியப்பன் (60), சுதாகரன் (34), சிவக்குமார், பிரபு, மணிகண்டன், கார்த்திக், சதீஷ், ராமச்சந்திரன், உமாராணி உள்ளிட்ட 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளிராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து சுதாகரன் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநர் சிவக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-தினமணி, வசந்த ஜீவா.

0 comments:

Post a Comment