பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே
திருநகர் குடியிருப்பு பகுதியில் மின்கசிவின் கானமாக தீ விபத்து 4 குடிசை
வீடுகள் உள்பட 7 வீடுகள் முற்றிலும் எரிந்தது.10 இலட்சம் மதிப்பிலான
பொருட்கள் சாம்பல்.
திருநகரில் புதன்கிழமை மாலை சின்னையன் மகன் தங்கபாண்டியின் குடிசை வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து, தீ பரவியதில் அருகிலிருந்த தங்கபாண்டி மகன் காளை, ஞானசேகரன் மகன் தம்புராஜ், அங்கமுத்து மகன்கள் மாரியப்பன், பழனி, செல்வக்குமார் மனைவி கற்பகம், மரியன் மனைவி அன்பு உள்ளிட்ட 8 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.
இதில், ரொக்கம், நகை, டி.வி, வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படஉதவி- வசந்த ஜீவா, புதியதலைமுறை துரை.
திருநகரில் புதன்கிழமை மாலை சின்னையன் மகன் தங்கபாண்டியின் குடிசை வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து, தீ பரவியதில் அருகிலிருந்த தங்கபாண்டி மகன் காளை, ஞானசேகரன் மகன் தம்புராஜ், அங்கமுத்து மகன்கள் மாரியப்பன், பழனி, செல்வக்குமார் மனைவி கற்பகம், மரியன் மனைவி அன்பு உள்ளிட்ட 8 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.
இதில், ரொக்கம், நகை, டி.வி, வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படஉதவி- வசந்த ஜீவா, புதியதலைமுறை துரை.
RSS Feed
Twitter
Wednesday, September 17, 2014
வ.களத்தூர் செய்தி








0 comments:
Post a Comment