Wednesday 30 July 2014

தினகரன் செய்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருந்துவமனை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலவச கண் புரை பரிசோதனை முகாம் இன்று (30ம் தேதி) முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது மேலும் கூறியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் கண் புரை நோய் உள்ளவர்களை கண்டறிந்து, அவர் களுக்கு இலவசமாக கண் சிகிச்சை அளிக்கும் வகையில் இம்முகாம் நடைபெறுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட ஊராட்சிப் பகுதிக்கு சென்று மருத்துவக் குழுவினர் கண்புரை உள்ளவர்களை கண்டறியும் பரிசோதனை நடத்த உள்ளனர்.
இதன் படி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் திருமாந்துறையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, நாளை (31ம் தேதி) சு.ஆடுதுறையிலும், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1ம் தேதி) வடக்கலூரில் நடைபெறுகிறது,.
2ல் அகரம்சீகூர், 5ல் கீழ பெரம்பலூர், 6ல் துங்கபுரம், 7ல் காடூர், 8ல் பெரிய வெண்மணி, 9ல் அந்தூர், 12ல் வேப்பூர், ஒலைப்பாடி, 13ல் கீழு மத்தூர், 14ல் சிறுமத்தூர், 16ல் கீழப்புலியூர், 19ல் சித்தளி, 20ல் குன்னம், 21ல் மூங்கில்பாடி, 22ல் பேரளி ஆகிய ஊராட்சிகளில் முகாம் நடைபெறுகிறது.
இன்று பெண்ணகோணத்திலும், நாளை (31ம் தேதி) ஒகளுர், ஆகஸ்ட் 1ல் அத்தியூர், 2ல் வசிஸ்டபுரம், 5ல் வயலப்பாடி, 6ல் புதுவேட்டக்குடி, 7ல் கொளப்பாடி, 8ல் வரகூர், 9ல் பரவாய், 12ல் நன்னை, 13ல் பெருமத்தூர், 14ல் ஆண்டிக்குரும்பலூர், 16ல் எழுமூர், 19ல் அசூர், 20ல் பெரியம்மாபாளையம், 21ல் ஒதியம் ஆகிய ஊராட்சிகளில் மதியம் 1 முதல் மாலை 4 வரை முகாம் நடைபெறுகிறது.

வ.களத்தூர் -ஆகஸ்ட் 2ம் தேதி.

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக.1ல் அன்னமங்கலம்,  ஆகஸ்ட் 2ல் வ.களத்தூர், 4ல் தொண்டமாந்துறை, 5ல் தேவையூர், 6ல் வெங்கலம், 7ல் நூத்தப்பூர், 8ல் எறையூர், 9ல் வாலிகண்டபுரம், 11ல் பசும்பலூர், 12ல் கை.களத்தூர், 13ல் அனுக்கூர், 14ல் காரியனூர், 16ல் மளையாளப்பட்டி, 18ல் பிரம்மதேசம், 19ல் மேட்டுபாளையம், 20ல் நெய்க்குப்பை, 21ல் அயன்பேரையூர், 22ல் பெரியம்மாபா ளையம், 23ல் பில்லாங்குளம், 25ல் பிம்பலூர், 26ல் தழுதாழை, 27ல் தொண்டபாடி, 28ல் திருவாளந்துறை, 30ல் பெரியவடகரை, செப்.1ல் இனாம்அகரம், 2ல் வெண்பா வூர், 3ல் பாண்டகபாடி, 4ல் உடும்பியம் ஆகிய ஊராட்சிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும்.
இதே போல், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று கவுல்பாளையம், நாளை கல்பாடி, ஆக.2ல் நொச்சியம், 5ல் அம்மாபாளையம், 6ல் அய்யலூர், 7ல் வடக்குமாதவி, 12ல் லாடபுரம், 13ல் சத்திரமனை, 14ல் கீழக்கரை, 16ல் சிறுவாச் சூர், 19ல் எசனை, 20ல் வேலூர், 21ல் கோனேரிபாளையம், 23ல் செங்குணம், 26ல் எளம்பலூர், 27ல் பொம்மனப்பாடி, 28ல் மேலப்புலியூர், செப்.2ல் செஞ்சேரி, 3ல் புது நடுவலூர், 4ல் பெரம்பலூர் ஆகிய ஊராட்சிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும்.
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 30) செட்டிகுளம், நாளை (31ம் தேதி) அடைக்கம்பட்டி, ஆக. 1ல் காரை, 2ல் கொளக்காநத்தம், 4ல் மேலமாத்தூர், 5ல் ஆதனூர் ஆகிய ஊராட்சிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், 6ல் நாரணமங்கலம், 7ல் நாட்டார்மங்கலம், 8ல் மாவிலங்கை, 9ல் தேனூர், 11ல் நக்கசேலம், 12ல் தெரணி, 13ல் சிறுகன்பூர், 14ல் சாத்தனூர், 16ல் கொட்டரை, 18ல் அல்லிநகரம், 19ல் கூடலூர், 20ல் திம்மூர், 21ல் இலந்தங்குழி, 22ல் அயனாபுரம், 23ல் சில்லக்குடி, 28ல் ஜமீன் ஆத்தூர் ஆகிய ஊராட்சிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் முகாம் நடைபெறும்.
ஆக.6ல் இரூர், 7ல் குரூர், 8ல் கண்ணப்பாடி, 9ல் டி.களத்தூர், 11ல் சிறுவய லூர், 12ல் வரகுபாடி, 13ல் குரும்பாபாளையம், 14ல் பிலிமிசை, 16ல் கீழமாத்தூர், 18ல் ஜமீன்பேரையூர், 19ல் கூத்தூர், 20ல் அருணகிரிமங்கலம், 21ல் நொச்சிக்குளம், 22ல் புஜங்காரயநல்லூர், 23ல் ராமலிங்கபுரம், 28ல் கொளத்தூர் ஆகிய ஊராட்சிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை கண்புரை நோயாளிகள் கண்டறியும் முகாம் நடை பெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர், செயலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.


-தினகரன்.

0 comments:

Post a Comment