பெரம்பலூர் அருகே சனிக்கிழமை பிடிபட்ட மலைப்பாம்பு சிறுவாச்சூர் காப்புக் காட்டில் விடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே மலைப்பாம்பு இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிக் குழுவினருக்கு சனிக்கிழமை தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து, நிலைய அலுவலர் ஜெகதீஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்குச் சென்று மலைப்பாம்பை பிடித்து, வனச்சரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனச்சரகர் ரவீந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சுமார் 9 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பை சிறுவாச்சூர் காப்புகாட்டில் உள்ள பெரியசாமி கோயில் பகுதியில் விட்டனர்.
-தினமணி. பட உதவி-வசந்த ஜீவா .
RSS Feed
Twitter
Sunday, July 27, 2014
வ.களத்தூர் செய்தி




0 comments:
Post a Comment