Tuesday 30 September 2014



       சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் அதிமுகவினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். ஊர்வலத்தில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் சுப்ரமணிய சுவாமி யைக்கண்டித்து முழக்கமிட்டனர். பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினரின் பேரணியால் முக்கிய சாலைகளில் கடைகள் மூடிக்கிடந்தன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் ஊர்வலம் அமைதியான முறையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-பட உதவி : வசந்த ஜீவா.

0 comments:

Post a Comment