Thursday 2 October 2014

      வெற்றித்திருனாளான ஆயுத பூஜை வ.களத்தூர் மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் பாடபுத்தகங்களை சாமிக்கு படைப்பதில் தொடங்கி , அடிப்படையில் விவசாய சமுதாயமாக வாழும் நம் ஊர் மக்கள் தங்கள் கத்தி, அரிவாள், உழவுப்போருட்கள், ஏர் , கலப்பை , தாங்கள் பயன்படுத்தும் வாகனம் முதற்கொண்டு கழுவி சுத்தப்படுத்தி பொட்டு இட்டு வணங்கி வருகிறார்கள்.

கடைத்தெருவில் மாவிலை தோரணம் கட்டி கடை வாசலில் வாழை மரம் கட்டி போவோர் வருவோருக்கு பொரிக்கல்லை சுண்டல் வழங்கி ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பட உதவி - சுரேஷ் அய்யாசாமி.

மாலை வேளையில் தயாராகும் வாழை மர அலங்காரம்
இரவு நேரத்தில்  ஜொலிக்கும் வ.களத்தூர்
கோவிந்தசாமி ஆசிரியர் ஜவுளிக்கடை முன்பு.
அய்யர் கடை படையல்
அடகுக்கடை அலங்காரம்
பொரிக்கல்லை சுண்டல் வழங்கும் நம் சொந்தங்கள்

காலையில் வ.களத்தூர் சிவன்கோவில் உழவாரப்பணி.
வ.களத்தூர் கடை வீதியில் ஜொலிக்கும் முத்து வீடியோ கடை
வ.களத்தூர் வன்னாரம்பூண்டி அய்யாசாமி மர இழைப்பக ஆயுதங்கள் படையலுக்கு தயாராக.
வன்னாரம்பூண்டியில் ஆயுத பூஜை விழா...



0 comments:

Post a Comment