Thursday 6 February 2014

பெரம்பலூர் மாவட்டத்தில் பிப். 8-ல் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.  
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் செ. ராஜேந்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பெரம்பலூர் வட்டம் திருப்பெயர், வேப்பந்தட்டை வட்டம் கை. களத்தூர், குன்னம் வட்டம் பெண்ணக்கோணம், ஆலத்தூர் வட்டம் நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களில் பிப். 8-ம் தேதி காலை நடைபெற உள்ளது.இதில், சம்பந்தப்பட்ட கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment