Tuesday 4 February 2014


" காவி பயங்கரவாதம்" .... இந்த வார்தை பதம் இஸ்லாமிய தீவிரவாத கைக்கூலிகளாலும், ஒரு சார்பு ஊடகங்களாலும் வாக்கு வங்கி அரசியல் நடத்தும்அரசியல் வியாதிகளாலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இந்து அமைப்புகளை இழிவு படுத்தும் நோக்கத்துடன் இதனை செய்துவருகின்றனர். அதில் ஒரு பகுதியாக சம்ஜாதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை அமைப்புகளால் , அவர்களின் எசமானர்களை திருப்திபடுத்த நடத்தப்பட்டு வருகிறது . அதன் உண்மை பின்னணி என்ன.....?

வழக்கின் பின்னணி: 

இந்தியாவின்   டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்கும்  இடையே வாரம் இருமுறை சம்ஜாதா எனும் பெயர் கொண்ட  ரயில் விடப்பட்டது. 2௦௦7 பிப்ரவரி 18 ம் தேதி இரண்டு குண்டுகள் வெடித்ததில் 68 பயணிகள் பலி ஆனார்கள்.

   இவ்வழக்கு முதலில் ராஜஸ்தான் சிறப்பு புலனாய்வு அமைப்பினால் விசாரிக்கப்பட்டது. பிறகு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (NIA)  இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது.


   சுவாமி அசிமானந்தின் வாக்குமூலம்: 

 2௦1௦ டிசம்பர் வரை இவ்வழக்கில் பல திசைகளில் சென்ற இவ்வழக்கு, சுவாமி அசீமானத் தான் முக்கிய குற்றவாளி என NIA வினால் அறிவ்க்கப்பட்டு கைது செய்யப்படுகிறார். அவருடன் மேலும் மூவர் கைது செய்யப்படுகின்றனர். 2௦11 ஜனவரியில் " காவி தீவிரவாதி" என்ற முத்திரை குத்தப்பட்டு சுவாமி அசிமானந்த் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அரசு தரப்பு அப்ரூவராக மாறுவதாக ஒப்புக்கொண்டதாக  NIA வினால், இந்து அமைப்புகள் மீது அவதூறு  ஊடகங்களில் பரப்பபடுவதோடு அவர் கொடுத்த ஒப்புதல்  வாக்குமூலம் என NIA சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

    காங்கிரசின் கைப்பாவையாக செயல் படும் புலனாய்வுத்துறை அமைப்புகள் விசாரணை வாக்குமூலத்தை வேண்டுமென்றே ஊடகங்களில் கசியவிட்டு இந்து அமைப்புகள் மீது அவதூறு பரப்ப முயன்றது இதன் மூலம் தெரிய வந்தது. இது தொடர்பாக RSS செய்திதொடர்பாளர் ராம்மாதவ் வெளியிட்ட அறிக்கை....

//////////////இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் கூறியதாவது:சுவாமி அசிமானந்த் அளித்த வாக்குமூலம், வேண்டுமென்றே சி.பி.ஐ., யால் மீடியாக்களுக்கு கசியவிடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. சி.பி.ஐ.,மீண்டும் ஒருமுறை "காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்' ஆக செயல்பட்டுள்ளது. முறைப்படி கோர்ட் ஆவணமாகி அங்கு நடக்கும் விசாரணைக்குப் பின் தெரிய வேண்டிய தகவல் முன்கூட்டியே எப்படி வெளியானது?இவ்வாறு ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.//////

http://www.dinamalar.com/news_detail.asp?id=161570.

   இது தொடர்பாக வக்கீல் நோட்டீசு RSS,  சிபிஐ க்கு அனுப்பபுகிறது .......

////////////// “You are not only in breach of law and your own manual but are liable in addition under the Contempt of Court’s Act, 1971 “as the exercise intended to prejudice the minds of the public by deliberately presenting a statement the truth of which is not established as a fact.”////////////

http://www.hindustantimes.com/india-news/newdelhi/indresh-was-rss-key-to-minorities/article1-647916.aspx 


   சுவாமி அசிமானந்தின் மறுப்பு வாக்குமூலம் :

         2௦11 ஜூலை மாதம் அசிமானந்த் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்கிறார். அதில் NIA தன்னை கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாகவும் அவ்வாறு செய்யவில்லை என்றால் தன் குடும்பத்தை பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளிவிடுவோம் என மிரட்டியதாக கூறுகிறார். ஜனாதிபதிக்கும் இதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது.

///////////////"I was forced by the NIA to confess that I was involved in the blast...I am not involved in the case.... The proof against me is also fabricated by the NIA," Aseemanand told reporters outside the special court hearing the case///////// http://zeenews.india.com/news/himachal-pradesh/swami-aseemanand-claims-nia-fabricated-evidence_720480.html

////////////He is said to have pleaded before the court to reject his previous application in which he had wished to become a witness in the Ajmer blast case, while deposing that he had no intentions whatsoever to turn approver in the case.
 “Aseemanand told the court that the CBI and NIA put pressure on him to confess his role in the blasts, and allegedly threatened to “fix” him in false cases and put his “family in jail”, some senior lawyers were quoted as saying.///////////// http://hinduexistence.org/tag/swami-aseemanand/

       தற்போது  caravanmagazine.in என்ற இணையதள செய்தி பத்திரிகை 2௦11 முதல் பல்வேறு சூழ்நிலைகளில் சுவாமி அசிமானந்த் அவர்களை  நான்கு முறை சந்தித்து பேசியதாகவும் , அப்போது RSS தலைவர் தூண்டுதலின் பேரில்தான் குண்டுவெடிப்புகளை நடத்தினோம் எனக்கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

சுவாமி அசிமானந்த் அவர்களின் வழக்கறிஞர் இது தொடர்பாக மறுப்பு கடிதம் வெளியிட்டதோடு அல்லாமல் மன்னிப்பு கேட்கவில்லை எனில் பத்திரிகை மீது  மான நஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாக கூறியுள்ளார். http://samvada.org/files/2014/02/scan0116.pdf

/////////////Swamy Aseemanandji’s lawyer has denied any such interview given by Swamiji to the media which claims the interview. He has threatened a legal action against the magazine.///////// 
http://samvada.org/2014/news/press-release/ 


சுவாமி அசிமானந்த் மறுப்பு கடிதம்


 சுவாமி அசிமானந்த் வழக்கறிஞரின் பத்திரிகை செய்தி
http://samvada.org/files/2014/02/scan0116.pdf
மோடி நாட்டின் பிரதமராகும் சூழ்நிலை கனிந்துவரும் நிலையில் தேசவிரோத சக்திகள்  RSS மற்றும் சங்க பரிவாரங்கள் மீது சேறு வீசி ஆதாயம் தேட முயலுகின்றன.  ஆனால் வாய்மையே என்றும் வெல்லும்........

ஜனவரி2௦14 ல் இவ்வழக்கு தொடர்பாக NIA/CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. வழக்கை நீதிமன்றம் பிப்ரவரிக்கு தள்ளி வைத்துள்ளது.

0 comments:

Post a Comment