Friday 14 February 2014

           முஸ்லிம்களுக்கு வழங்கப்படும்  மதரீதியான இட ஒதுக்கீடு என்பது நமது அரசியல் அமைப்புச்சட்டதிற்கு எதிரானது என்பது மட்டுமல்ல , தமிழ்நாட்டின் மக்கள்தகையில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப்பட்ட(BC) மக்களிடமிருந்து  பிடுங்கப்பட்டதே. ஏன் இதனை நாம் எதிர்க்க வேண்டும்.....? 

          தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் என அழைக்கப்படும் BC இனத்தவர் ஐம்பது சதவீத மக்களுக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முப்பது சதவீத இடஒதுக்கீடு கிறித்தவர்களுக்கும் , முஸ்லிம்களுக்கும் பங்குபோட்டு கொடுக்கப்பட்டதால் 25 சதவீதமாக குறைந்தது. கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடான 1..5% ல், பழைய இடஒதுக்கீடு முறையைப் போல் அதிக இடங்களை அரசு வேலைவாய்ப்பில் பெறமுடியாததன் காரணமாக எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என கருணாநிதியிடம் கிறித்தவ அமைப்புகள்  கூறியதன் காரணமாக கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்பொழுது கிறித்தவர்கள் அவர்களின் மக்கள்தொகை விகிதத்தைவிட அதிகமான இடங்களில் அரசு வேலைவாய்ப்பை பெற்றுவருகின்றனர். அனால் முஸ்லிம் மதத்தினர் இதற்க்கு மாறாக தற்போது வழங்கப்பட்டுவரும் 3.5 சத ஒதுக்கீட்டிலிருந்து  ஏழு சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என   கேட்கின்றனர். கிறித்தவர் இடஒதுக்கீடு வேண்டாம் என்கின்றனர் ஆனால்  முஸ்லிம் மதத்தவர் இடஒதுக்கீடு தாற்போது வழங்கப்படும் 3.5% லிருந்து ஏழு சதவீதமாக உயர்த்த வேண்டும் என கூறும்போது இதில் உள்ள சதிதிட்டதையும் இதனால் பாதிக்கபடபோவது யார் என்பதையும் நாம் அறிவது அவசியம்.

         உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இடஒதுக்கீட்டின் அதிகபட்சவரம்பு 5௦ சதவீதம் . ஆனால் தமிழ்நாட்டின் மொத்த இடஒதுக்கீடு 69 சதவீதம். இந்த முரண் நமக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் எந்த ஒரு சட்டமும்  நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது. நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் நிறைவேற்றப்பாட்டாலும் அது அரசியலைமைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மையை பாதிக்கும் வைகையில் அமைந்தால் அதனை செல்லாது என அறிவிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு . இந்த அதிகாரத்தை கட்டுப்படுத்த நாட்டின் முதல் சட்டத்திருத்தம் 1951 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி புதிதாக 9 வது schedule கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி தமிழ்நாட்டின்  இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற வரைமுறையின் படி அல்லாமல் 69 சதவீதம் என கடைபிடிக்கப்பட்டு வருகிறது . அனால் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒன்பதாவது shedule ல் உள்ள சட்டங்களும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்றது. அதனால் தமிழ்நாட்டின்   தற்போதைய இடஒதுக்கீடு  முறையின் செல்லத்தக்க தன்மை நீதிமன்றத்தின் கருனைக்காக காத்துக்கிடக்கிறது.

         தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு 69 சதவீதத்தில் MBC 2௦% , SC/ST- 19% மற்றும் BC-3௦%. இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட  இடஒதுக்கீடானது  பிற்படுத்தோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3௦ சதவீத ஒதுக்கீட்டில் இருந்துதான் பிடுங்கப்பட்டது.   தற்போது இஸ்லாமிய அமைப்புகள் கேட்கும் ஏழு சதவீத இடஒதுக்கீடும் கொடுக்கப்பட்டால் பாதிக்கப்படப்போவது  தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான உள்ள BC என்றழைக்கப்படும் ,  பிற்படுத்தப்பட்ட இனத்தைச்சேர்ந்த மக்களே. மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு முறை செல்லாது என வருமாயின் பாதிக்கப்படப்போவதும் இவர்களே.

          பிற்படுத்தப்பட்ட இனத்தைச்சார்ந்த சாதிஅமைப்புகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீடு BC எனப்படும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை என்பதை கண்டுகொள்ளாமல் கள்ள மௌனம் காத்துவருகின்றன. நீதிமன்ற படியைகூட இதற்க்கு எதிராக மிதிதார்களா எனத்தெரியவில்லை .மேலும்இஸ்லாமியஅமைப்புகளின்கோரிக்கையான ஏழு சதவீதமும் வழங்கப்பட்டால் பாதிக்கப்படப்போவது பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற உண்மையை பிற்படுத்தப்பட்ட மக்களும், அதன் சாதி சங்கங்களும் கண்டுகொள்ளாமல் உள்ளதுதான் வேதனை.

      

0 comments:

Post a Comment